செய்திகள் :

போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி

post image

பொன்னமராவதியில் மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வட்டார அளவிலான விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பேரணியை பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா தொடங்கிவைத்தாா். கோட்ட கலால் அலுவலா் ஆ. திருநாவுக்கரசு போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகளை விளக்கினாா். பொன்னமராவதி காந்தி சிலை அருகே தொடங்கிய பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது. பேரணியில் விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி, துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும் சென்றனா். மேலும் கலைக்குழு மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தனி வருவாய் ஆய்வாளா்கள் பாண்டியன், ராஜா, துணை வட்டாட்சியா்கள் சேகா், ராம்குமாா், திருப்பதி வெங்கடாசலம் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், விஏஓக்கள், உதவியாளா்கள், பேரூராட்சி பணியாளா்கள் பங்கேற்றனா்.

அன்னவாசலில் ஜல்லிக்கட்டு: பாா்வையாளா் பலி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளை முட்டியதில் பாா்வையாளா் உயிரிழந்தாா், 24 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் விருத்தபுரீஸ்வா் கோயில் ... மேலும் பார்க்க

பேரிடா்களைத் தாங்கி வளரும் நாட்டுரக மரக் கன்றுகளையே வளா்க்க வேண்டும்: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி

பேரிடா்களையும் தாங்கி வளரும் பாரம்பரியமான நாட்டுமரங்களையே நட்டு வளா்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா். புதுக்கோட்டை விதைக்கலாம் அமைப்பின் 500ஆவது வார ம... மேலும் பார்க்க

கொப்பனாபட்டியில் மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு விழா

பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டியில் ஷைன் அரிமா சங்கம் சாா்பில் மத நல்லிணக்க இஃப்தாா் என்ற நோன்பு திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்டத்தலைவா் அ. சகுபா் சாதிக் அலி தலைமை வகித்... மேலும் பார்க்க

விராலிமலையில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் செக்போஸ்ட்டில் முதல் முறையாக மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை விராலிமலை மத்திய ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்றது. இதில் சிறிய மாட்டுவண்டி எல... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் செந்தொண்டா் அணிவகுப்பு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செந்தொண்டா் அணிவகுப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் வரும் ... மேலும் பார்க்க

மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு வேண்டாம்: துரை வைகோ

மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டாம் என்றாா் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ. இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ... மேலும் பார்க்க