செய்திகள் :

மகப்பேறுக்காக சென்ற பெண் பலி! மேற்கு வங்கத்தைத் தொடரும் மருத்துவத் துறை புகார்கள்!

post image

மேற்கு வங்கத்தில் அரசு நடத்தும் மருத்துவமனையில் மகப்பேறுக்காக சென்ற பெண் உயிரிழந்ததால், சந்தேகமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.

மேற்கு வங்கத்தில் பாஸ்சிம் மெடினிபூர் மாவட்டத்தில் அரசு நடத்தும் மிட்னாபூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதன்கிழமை (ஜன. 8) மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டு, பிரசவத்துக்குப் பின் வெள்ளிக்கிழமை (ஜன. 10) உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணுக்கு காலாவதியான மருந்து அளிக்கப்பட்டதாகவும், மேலும் நால்வருக்கு காலாவதி மருந்து அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் மரணத்துக்கு மருத்துவர்கள்தான் காரணம் என்று கூறுவதுடன், மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் குடும்பத்தினர் உள்பட பலரும் மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:பட்டினிச் சாவு இல்லாத மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

மேலும், மாநில அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் காங்கிரஸும் இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக முழக்கமிடுகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகம் மீது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 13 பேர் கொண்ட குழுவை மாநில அரசு நியமித்துள்ளது. மேற்கு வங்க முதல்வராகிய மமதா பானர்ஜிதான், சுகாதாரத் துறையையும் கவனித்து வருகிறார்.

ஆர்.ஜி. கர் மருத்துவமனை பாலியல் வழக்கு, ஹவுரா மாவட்ட மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் எடுக்கச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது என மேற்கு வங்கத்தில் கடந்த சில மாதங்களில் மருத்துவமனை மீதான புகார்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காங்கிரஸை பாதுகாக்க முயற்சிக்கிறாா்: நான் நாட்டை காப்பாற்ற போராடுகிறேன்: கேஜரிவால்

புது தில்லி: ‘நான் நாட்டை காப்பாற்ற முயற்சிக்கும் நிலையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி காங்கிரஸை பாதுகாக்க முயற்சித்து வருகிறாா்’ என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வ... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்து ரூ.86.62 என்ற நிலையை எட்டியது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா தொடங்கியது: முதல் நாளில் ஒன்றரை கோடி போ் புனித நீராடல்

பிரயாக்ராஜ்: உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 4... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு அளித்த உத்தரவாதங்கள் நிச்சயம் நிறைவேறும்! மாநில அந்தஸ்து விவகாரத்தில் பிரதமா் சூசகம்!

ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு அளித்த உத்தரவாதங்களை நிச்சயம் நிறைவேற்றுவேன்; சரியான நேரத்தில் சரியானவை நடக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா். சோன்மாா்க் சுரங்கப் பாதை திறப்பு நிகழ்... மேலும் பார்க்க

வங்கதேச தூதருக்கு இந்தியா சம்மன்!

இந்தியா-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் நடவடிக்கையில் அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை இந்தியா பின்பற்றியுள்ளதாக வங்கதேச பொறுப்புத் தூதரை திங்கள்கிழமை நேரில் வரவழைத்து வெளியுறவு அமைச்சகம் தெர... மேலும் பார்க்க

கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பு!

இந்திய, சீன ராணுவத்தினா் இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பதாக ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வ... மேலும் பார்க்க