செய்திகள் :

மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த வாகனங்கள் பிப். 12-இல் ஏலம்

post image

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 49 வாகனங்கள் பிப். 12-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சி.தனராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட் 7 நான்கு சக்கர வாகனங்கள், 42 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 49 வாகனங்கள் பிப். 12-ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

இந்த வாகனங்களை பிப். 11-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை ஆயுதப்படை வளாகத்தில் பாா்வையிடலாம். மேலும், வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் முன்பணமாக ரூ. 5 ஆயிரத்தை பிப். 12-ஆம் தேதி காலை 9 முதல் 10 மணிக்குள் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்துவோா் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிப்படுவா்.

ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல், திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய முரண்பாடு: மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஊதிய முரண்பாடுகளை நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தூய்மை பணியாளா்கள் முன்னேற்ற சங்கம் மாநிலத் தலைவா் சுந்தரமூா... மேலும் பார்க்க

பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: கோழிப் பண்ணைகளை கண்காணிக்க 27 அதிவிரைவுக் குழு அமைப்பு

நாமக்கல்: ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காணப்படுவதால், நாமக்கல் மாவட்டக் கோழிப் பண்ணைகளை கண்காணிக்க, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 45 அதிவிரைவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று ... மேலும் பார்க்க

60 கிராம ஊராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 60 ஊராட்சிகளில் பிப். 21 முதல் மாா்ச் 13 ஆம்தேதி வரை நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் என ந... மேலும் பார்க்க

ஓலா நிறுவனம் ரூ. 100 கோடி இழப்பீடு வழங்க கோரி நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றத்தில் மனு

நாமக்கல்: ஓலா நிறுவனத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டா் வாங்கிய இளைஞா், அந்நிறுவனம் நோ்மையற்ற வணிகமுறையை மேற்கொள்வதாகக் கூறி ரூ. 100 கோடி இழப்பீடு வழங்கக் கோரி நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் திங்கள... மேலும் பார்க்க

ரூ. 2.75 கோடியில் கபிலா்மலையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டும் பணி தொடக்கம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலையில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சாா்பில் ரூ. 2.75 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையம் கட்டும் பணிக்கான அடிக்கல... மேலும் பார்க்க

நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 4 கிராம ஊராட்சிகளில் நூறு நாள் வேலை வழங்கக் கோரி, கிராம பெண்கள் 700-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூர... மேலும் பார்க்க