செய்திகள் :

'மன்னிக்க முடியாத குற்றமா?'- பிரபுதேவாவின் நடனத்தை விமர்சித்தது குறித்து ப்ரீத்தியின் விளக்கம் என்ன?

post image

நடிகர் பிரபுதேவாவின் நடனத்தை விமர்சித்து சீரியல் நடிகை ப்ரீத்தி தெரிவித்த கருத்து நடன ஏரியாவில் பெரிய சலசலப்பை உண்டு பண்ணியுள்ளது.

சில தினங்களுக்கு முன் தன்னுடைய மாஸ்டர்களுக்கு மரியாதை செலுத்தும் குரு பூர்ணிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடினார் பிரபுதேவா.

சிறுவயதில் முறைப்படி பரதம் கற்றுக்கொண்டு அரங்கேற்றமெல்லாம் செய்திருந்தாலும் பிறகு சினிமா நடனம் என்கிற கட்டத்துக்கு வந்து அதில் பத்ம ஸ்ரீ முதலான தேசிய விருதுகள், ஏன் உலகளவில் கூட சாதனை படைத்து விட்ட பிரபுதேவா, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின் தன் மாஸ்டர்களுக்காக  இந்தக் கிளாசிகல் நிகழ்ச்சியை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

’இந்த நிகழ்ச்சியில் அவர் பரதத்தை முறைப்படி ஆடவில்லை, மன்னிக்க முடியாத குற்றம் புரிந்து விட்டார். பாரம்பர்ய கலைகளைத் தவறாக ஆடினால் யாரும் கேட்பார் இல்லையா. இது போன்ற வாய்ப்புகளை பிரபுதேவாவுக்குப் பதில் வேறு இளம் நடனக் கலைஞர்களுக்கு வழங்கியிருக்கலாம்’ என்கிற ரீதியில் நிகழ்வு குறித்துப் பதிவிட்டிருந்தார் நடிகை ப்ரீத்தி.

ப்ரீத்தி சஞ்சீவ்

இவரது இந்தக் கருத்து சினிமா வட்டாரத்தில் பலத்த சலசலப்பை உண்டு பண்ணியுள்ளது. நடன இயக்குநர்கள் பலரும் ப்ரீத்திக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரபுதேவாவிடம் 13 வருடங்களாக நடனம் கற்று தற்போது நடன இயக்குநராக உருவாகியிருக்கும் நோபிள் மாஸ்டரிடம் இது குறித்துப் பேசினோம்.

நோபல் மாஸ்டர்
நோபல் மாஸ்டர்

’’தன்னுடைய குருவுக்கு அவர் மரியாதை செலுத்துகிற நிகழ்ச்சி அது. பெரிய இடைவெளிக்கு பிறகு பரதம் ஆடியிருக்கார். அதுல போய் அதே பாவனை இல்ல, மன்னிக்க முடியாத தப்பு பண்ணிட்டார்னு சொல்றதெல்லாம் சின்னப்புள்ளத்தனமா இருக்கு.

யார், யாரைச் சொல்றோம்னும் ஒண்ணு இருக்கு. அவர் இன்னைக்கு சர்வதேச அளவுல இந்திய சினிமாவின் ஒரு அடையாளம். அப்படிப்பட்டவரை இந்த மாதிரி விமர்சனம் செஞ்சது டான்சர்கள் மத்தியில ஒரு கொந்தளிப்பை உண்டு பண்ணியிருக்கு’’ என்றார் அவர்.

இதுபோல் பலரும் ப்ரீத்திக்கு எதிராக வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சர்ச்சைக்கு வித்திட்ட ப்ரீத்தியையே தொடர்பு கொண்டு பேசினோம்.

‘’என்னுடைய கருத்தை வெளியிட்டிருந்தேன். அது தொடர்பா யாரும் ஏதாவது கருத்துச் சொல்லியிருக்காங்கன்னா அது அவங்க உரிமை. மத்தபடி இது தொடர்பா எங்கிட்ட நீங்க கேட்டீங்கன்னா என் பதில் நோ கமெண்ட்ஸ்தான்" என முடித்துக் கொண்டார் அவர்.

Jana Nayagan: "விஜய் சாரை எம்.ஜி.ஆர் கூப்பிடும் காட்சிக்கு டப் செய்தது நான்தான்; ஆனா.!" - டி.எஸ்.கே

நடிகரான பிறகும் மிமிக்ரியால் நம்மைத் தொடர்ந்து எண்டர்டெயின் செய்து வருகிறார் டி.எஸ்.கே. கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்தில் எம்.ஜி.ஆர். பேசுவது போல இடம்பெற்றிருக்கும் காட்சிகளுக்கு, அவரைப் போல மிமிக... மேலும் பார்க்க

August Releases: சூர்யா டு லோகேஷ் கனகராஜ் - ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரும் படங்களின் லிஸ்ட்!

ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளுக்கு மிகவும் பிஸியான மாதமாக அமைந்திருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி இருக்கின்றன. Vishal - Magudamஅதுமட்டுமல்லாமல், க... மேலும் பார்க்க

D. Imman: "யாருக்குத்தான் வாழ்க்கையில துரோகம் நடக்காம இருக்கு?" - பட விழாவில் டி. இமான்

முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடித்திருக்கும் 'நிறம்' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெ... மேலும் பார்க்க

Madhampatty Rangaraj: "கதறி அழுத ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை" - ஜாய் கிறிஸ்டில்டா

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸ்டில்டா, தானும் மாதம்பட்டி ரங்கராஜும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னுடைய குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் கூறியிருந்தார். பிறகு, தங்களுக்குள் நடந்த திருமணத... மேலும் பார்க்க

காதல் : ஆணவச் சமூகம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 11

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!`சினி'ஸ்கோப் 11காதல்18 வயதே ஆன ஒரு பள்ளிக்கூடத்து மாணவி ஐஸ்வர்யாவுக்கும், 20 வய... மேலும் பார்க்க

'எம்.ஜி.ஆரை இன ரீதியாக தமிழ்நாட்டில் தனிமைப்படுத்த பார்த்தார்கள், அப்போது கண்ணதாசன்.!' - வைரமுத்து

கவிஞர் கண்ணதாசனின் நூற்றாண்டு விழா நேற்று (ஜூலை.30) சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, "தொழில்நுட்ப புரட்சி, தொலைபேசி கலாசாரம், சமூக ஊட... மேலும் பார்க்க