செய்திகள் :

"மரணத்தின் விளிம்பு வரை சென்ற இயக்குநரை லிங்குசாமிதான் போராடி மீட்டார்" - பகிரும் ஏ.ஆர். முருகதாஸ்

post image

வருடந்தோறும் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் ஹைக்கூ கவிதைப் போட்டியை இயக்குநர் லிங்குசாமி நடத்தி வருகிறார். தொடர்ந்து 5-ஆம் ஆண்டாக இந்தாண்டும் அப்போட்டிக்கான அறிவிப்பை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டிருந்தார்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இயக்குநர் லிங்குசாமி
இயக்குநர் லிங்குசாமி

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில், "கவிக்கோ அவர்களின் நினைவாக நடத்தப்படும் இத்தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை விழாவில் வாழ்த்துரை வழங்குவதற்காக நான் அழைக்கப்பட்டுள்ளேன். உண்மையைச் சொல்வதானால், எனக்குக் கவிதை படிக்கவும் ரசிக்கவும் தெரியுமே தவிர, எழுத வராது.

ஆனால், 'ஹைக்கூ கவிதை என்றால் என்ன?' என்று ஆராய்ந்து பார்க்கும்போது ஒரு விஷயம் புரிந்தது. முதலில் வரும் மூன்று அல்லது நான்கு வரிகள் மிகச் சாதாரணமாக ஒரு பொதுவான ஸ்டேட்மெண்ட் போல இருக்கும்.

ஆனால், அதன் இறுதி வரி நாம் அதுவரை படித்த எண்ண ஓட்டத்தையே மாற்றி, முற்றிலும் புதியதொரு கோணத்தில் சிந்திக்க வைக்கும்.

என்னைப் பொறுத்தவரை இயக்குநர் லிங்குசாமியே ஒரு ஹைக்கூதான். ஏனெனில், அவரைத் தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு சிறந்த இயக்குநராகத் தெரிவார்.

சற்றே நெருங்கிச் சென்றால் அவர் ஒரு கவிஞராகத் தெரிவார். அவரிடம் இருக்கும் உன்னதமான மனிதாபிமானம் ஒரு சிலருக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும்.

கொரோனா இரண்டாவது அலையின்போது, மனிதர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயமும் இக்கட்டான சூழலும் நிலவியது. அந்தச் சமயத்தில், இயக்குநர் வசந்தபாலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்றுவிட்டார் என்று செய்திகள் வந்தன.

மருத்துவமனைக்குள் யாருக்கும் அனுமதி இல்லாத அந்த இக்கட்டான சூழலில், முன்னின்று போராடி அவரை மீட்டெடுத்த முழுப் பெருமையும் லிங்குசாமியையே சாரும்.

ஏ.ஆர் முருகதாஸ்
ஏ.ஆர் முருகதாஸ்

அதுமட்டுமின்றி, குணமடைந்த வசந்தபாலன் ஆனந்த விகடனில் இது பற்றி எழுதியிருந்தார்.

அதில் அவர், "மருத்துவமனையில் அனைவரும் நீல நிற ஆடை அணிந்து நடமாடிக் கொண்டிருந்தபோது, என்னை நோக்கி ஒருவர் வந்தார்.

எனது கலங்கிய கண்களோடு பார்க்கும்போது, அந்த நீல ஆடை அணிந்த மனிதர் எனக்கு ஒரு தேவதையைப் போலத் தெரிந்தார்.

அருகில் வந்த பின்புதான் தெரிந்தது, அவர் எனது நண்பன் லிங்குசாமி என்று" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வரிகளுக்குள்ளேயே ஒரு அழகான கவிதை ஒளிந்திருக்கிறது. அதுதான் லிங்குசாமி!" என்றார்.

"அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பிறகு மக்களும் அரசியலுக்குள் வந்துட்டாங்க!" - லிங்குசாமி

வருடந்தோறும் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் ஹைகூ கவிதைப் போட்டியை இயக்குநர் லிங்குசாமி நடத்தி வருகிறார். தொடர்ந்து 5-ஆம் ஆண்டாக இந்தாண்டும் அப்போட்டிக்கான அறிவிப்பை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டிருந... மேலும் பார்க்க

அந்தரன்: "பிரஜின் உடைஞ்சு அழுவதைப் பார்த்திருக்கேன்; ரொம்ப வருஷ கனவு இது" - சாண்ட்ரா எமோஷனல்

பிரஜின், இவானா வருண், அதிரன், பத்மன், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அந்தரன்’. சந்தோஷ் இராவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூன் 2) நடைபெற்ற... மேலும் பார்க்க

Killer: எஸ்.ஜே.சூர்யா படத்தின் படப்பிடிப்பில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்; என்ன நடந்தது?

எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' திரைப்பட படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 3 பேர் காயம் அடைந்திருக்கின்றனர்.இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது 'கில்லர்'... மேலும் பார்க்க

கருப்பு: ``அதே அன்பு, அரவணைப்பு, கனிவு" - முதல்வர் விஜய்யைச் சந்தித்த ஆர்.ஜே பாலாஜி!

தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் தமிழ்த் திரையுலகிலும் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும் வேளையில், தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய்யை, பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே பாலாஜி நேரில் சந்தித்து வ... மேலும் பார்க்க

"'வாழை' படத்தின் ஒரு பகுதியாக 'மஞ்சணத்தி' இருக்கும்; ஆனால்..."- மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட் என்ன?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'பைசன் காளமாடன்'. தீபாவளிக்கு வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 'பைசன்... மேலும் பார்க்க

"`எனக்கு சொந்தம் இல்ல; நீங்கதான் இறுதி சடங்கு செய்யணும்'னு சத்யேந்திரா சொன்னார்"- உதவும் கரங்கள் பகு

நடிகரும் திரைப்பட விமர்சகருமான சத்யேந்திரா கடந்த வாரம் இயற்கை எய்தினார். சினிமா சார்ந்த நிகழ்வுகள் எங்கு நிகழ்ந்தாலும் அங்கு சத்யேந்திரா இருப்பார். பெங்களூருவைச் சேர்ந்தவர் பல ஆண்டுகளாகச் சென்னையில் த... மேலும் பார்க்க