செய்திகள் :

"மற்ற கட்சிகளுக்கு எதிராக ED ஊடுருவல் வேண்டும்; இதுவே காங்கிரஸ் நிலைப்பாடு" - பினராயி விஜயன்

post image

கேரளா எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

அதனையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழாக்கப் படுத்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அதில் கூறியுள்ளதாவது...

"நீண்ட காலமாகவே ED எனது வீட்டில் சோதனை நடத்த விரும்பியது. இந்த சோதனை சிலருக்கு, குறிப்பாக ராகுல் காந்தி போன்றவர்களுக்கு பெரும் திருப்தியைத் தரும் என்று நினைக்கிறேன். பினராயி விஜயனின் வீடு ஏன் சோதனையிடப்படவில்லை, ஏன் கைது செய்யப்படவில்லை என ராகுல் காந்தி கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தார்.

அமலாக்கத்துறை சோதனை
அமலாக்கத்துறை சோதனை

பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் எழுந்துள்ளன.

தங்களைத் தவிர மற்ற கட்சிகளுக்கு எதிராக ED-வின் ஊடுருவலும் நடவடிக்கைகளும் தொடர வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைப்பாடாக உள்ளது.

இவை எதுவும் எங்களை பயப்படுத்தப் போவதில்லை. இதை நாங்கள் ஒரு தொடக்கமாக மட்டுமே பார்க்கிறோம். இத்தகைய நடவடிக்கைகள் எங்களை அழித்துவிடும் என்று யாரும் நினைக்கக் கூடாது.

உள்ளூர் மக்களின் மற்றும் கட்சித் தோழர்களின் உணர்வுகள் இங்கு வெளிப்பட்டுள்ளது. எதிரிகள் என்னைத் தாக்கத் தயாராகும் போதெல்லாம், கட்சியின் வலுவான ஆதரவை நான் பெற்றேன்.

இன்று தோழர்கள் நிரூபித்திருப்பது என்னவென்றால், அந்த ஆதரவில் எந்தக் குறைவும் இல்லை என்பதுதான். இதுதான் எங்கள் வலிமை. அனைத்து சோதனைகளையும் ஒன்றிணைந்து எதிர் கொள்வோம்".

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க