செய்திகள் :

மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா

post image

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்டா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிறிஸ்டில்டாவை திருமணம் செய்து கொண்டதை ஒப்புக்கொண்டதாகவும், குழந்தை அவருடையது தான் என்று ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் நேற்று மாதம்பட்டி ரங்கராஜ் ”இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்ததாகவும், தனிப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் வைத்து ஜாய் மிரட்டியதால் இந்த திருமணத்தை செய்து கொண்டதாகவும், டிஎன்ஏ பரிசோதனையில் அந்த குழந்தை தன்னுடையது என்று உறுதி செய்யப்பட்டால் அந்த குழந்தையின் செலவை வாழ்நாள் முழுவதும் ஏற்றுக் கொள்வதாகவும்” தெரிவித்திருந்தார்.

இப்படி ஒரு பதிவை பதிவிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜாய் கிறிஸ்டில்டா டிஎன்ஏ பரிசோதனைக்கு தயாராக இருப்பதாகவும், மிரட்டி திருமணம் செய்து கொள்ள அவர் என்ன குழந்தையா? என்றும் கேள்வி கேட்டார்.

இந்த நிலையில் ஜாய் கிறிஸ்டில்டா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இதில் “ஏய் பொண்டாட்டி..நீ எவ்ளோ அழகு தெரியுமா? அவ்ளோ அழகு. லவ் யூ, சீக்கிரம் வந்துரு மிஸ் பண்றேன். மிஸ் யூ, ரெடி ஆயிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

இந்தப் பதிவின் கேப்ஷனில் “இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா? Mr husband Madhampatty Rangaraj

மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க - இதுல லவ் ல பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா? கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி, இந்த மெசேஜை என் கணவர் நான் வெளியூரில் இருந்த போது அனுப்பி இருந்தார். எப்போதும் நாங்கள் ஒன்றாக இல்லாத நேரத்தில் என்னென்ன செய்கிறார் என்பதை இப்படி வீடியோவாக டெய்லி அப்டேட்டாக அனுப்புவார் " என்று ஜாய் கிறிஸ்டில்டா அதில் பதிவிட்டிருக்கிறார்.

தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் கா... மேலும் பார்க்க

நண்பர்களுடன் இருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குமாம் - ஆய்வு சொல்வதென்ன?

எந்தவொரு செயலையும் தனியாக செய்வதை விட, நண்பர்களுடன் சேர்ந்து செய்யும்போது அதிக மகிழ்ச்சியை உணர்வதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக செய்யும் செயல் கூட பிறருடன் சேர்ந்து செய்யும்போது மகிழ்ச்... மேலும் பார்க்க

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம் | Photo Album

அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப... மேலும் பார்க்க

பிரிந்து 24 ஆண்டுகள்! தொழில் தொடங்க பணம் கொடுத்த முன்னாள் காதலியை தேடும் சீன காதலர்

சீனாவில் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு கடன் கொடுத்த முன்னாள் காதலியைத் தேட, ஊடக உதவியை நாடியுள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது. லீ என்ற அந்த நபர், 24 ஆண்டுகளுக்கு முன்பு மா என்ற தனது முன்னாள் க... மேலும் பார்க்க

ஒரு சேஃப்டி பின் விலை ரூ.69,000 - பிராடாவின் புதிய தயாரிப்பால் வெடித்த விவாதம்!

பிரபல ஃபேஷன் பிராண்டான பிராடா (Prada) சமீபத்தில் ஒரு சேஃப்டி பின்னை ஃபின்னை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை சுமார் ரூ.69,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை... மேலும் பார்க்க

ஆந்திரா: மாணவிகளை மசாஜ் செய்யச் சொன்ன பள்ளி ஆசிரியை; சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?

ஆந்திராவில் ஆசிரியை ஒருவர் மாணவிகளைக் கொண்டு தனது கால்களை பிடித்துவிட செய்த சம்பவம் வைரலாகி இருக்கிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பந்தபல்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசி... மேலும் பார்க்க