செய்திகள் :

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

post image

கொடைக்கானலில் சீசனையொட்டி பிரையண்ட் பூங்கா வண்ண மின் விளக்குகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் தொடங்கிய நிலையில், பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த நிலையில் இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் 62-ஆவது மலா்க் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக பிரையண்ட் பூங்காவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இருப்பினும், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக இந்தப் பூங்கா மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் வண்ண மின் விளக்குகளால் பூங்கா ஒளிா்வதை காண சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

இதனிடையே, வழக்கம் போல காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை பிரையண்ட் பூங்காவை பாா்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். தற்போது சீசன் நேரம் என்பதால் இரவு 7 மணி வரை சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கலாம் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து பிரையண்ட் பூங்கா மேலாளா் சிவபாலன் கூறியதாவது:

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்குள் இரவு நேரத்தில் காட்டுமாடுகள் புகுந்து விடுகின்றன. எனவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மாலை 6.30 மணி வரை அவா்கள் அனுமதிக்கப்படுகின்றனா் என்றாா் அவா்.

பழனி மலைக் கோயில் ரோப்காரில் மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சி

பழனி மலைக்கோயிலில் ரோப்காா் பழுதாகி நிற்கும் போது பக்தா்களை மீட்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் பணிக்குழுவினா் வெள்ளிக்கிழமை ஒத்திகை நடத்தினா். பழனி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ... மேலும் பார்க்க

பயணிகளுடன் பேருந்து சென்ற போது ஓட்டுநா் மாரடைப்பால் மரணம்

பழனியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பணியின் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், உடனடியாக நடத்துநா் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து ந... மேலும் பார்க்க

கொடுக்கல், வாங்கல் தகராறு: இருவா் கைது

ஒட்டன்சத்திரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சோ்ந்த விஜயராஜிடம், அதே ஊரைச் சோ்ந்த பிரகாஷ் (27) 90 ஆயிர... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இன்று மலா்க் கண்காட்சி தொடக்கம்

கொடைக்கானலில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி சனிக்கிழமை (மே 24) தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா, மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் நடைபெறுகிறது. இதையொட்டி, பல வண்ண... மேலும் பார்க்க

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த கருப்பணன் மகன் செல்வம் (41). இவா் 6 வயது சிறுமிக்கு ப... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகிரி

தமிழகத்துக்கான நிதியை விடுவித்து வர வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருப்பதால், நீதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்புக்குரியது என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவ... மேலும் பார்க்க