செய்திகள் :

முதுமலை: 20 அடியில் கூண்டு, 24 மணிநேரமும் சுழலும் கேமரா - புலி தாக்கிய‌ சம்பவத்தால் வனத்துறை உஷார்

post image

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டலமான மாவனல்லா பகுதியில் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பழங்குடி பெண் நாகியம்மாளை கடந்த 24 - ம் தேதி மதியம் புலி தாக்கியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அந்த புலி வனப்பகுதிக்குள் இழுத்துச் செல்வதைக் கண்ட உள்ளுர் மக்கள் கூச்சலிட்டு விரட்டிச் சென்றுள்ளனர்.

கூண்டு அமைத்த வனத்துறை

ஆனால், காப்பாற்ற முடியவில்லை. புலியின் தாக்குதலால் உடல் தனியாக தலை தனியாகவே நாகியம்மாளின் சடலம் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கத் தவறிய வனத்துறையைக் கண்டித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அடுத்தடுத்த தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கும் விதமாக அந்த பகுதியில் குறிப்பிட்ட புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர்.

பள்ளி மாணவர்களை வாகனம் மூலம் அழைத்துச் செல்லும் வனத்துறை

புலியின் கால்தடங்கள் மற்றும் ரோமங்களை சேகரித்து வரும் நிலையில், தாக்குதல் நடைபெற்ற பகுதியில் 3 புலிகள் நடமாடி வருவதை உறுதி செய்துள்ளனர். அந்த பகுதியில் கூண்டுகள் மற்றும் தானியங்கி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்தினர் , " பழங்குடி பெண்ணை தாக்கியதாக சந்தேகப்படும் குறிப்பிட்ட அந்த புலி நடமாடும் பகுதியில் பிரத்தியேகமான ஐந்து கூண்டுகளை வைத்திருக்கிறோம். 20 அடி நீளம், 10 அடி உயரம், 10 அடி அகலம் கொண்ட கூண்டுக்குள் 360 டிகிரி கோணத்தில், 24 மணி நேரமும் சுழலும் சி.சி.டி.வி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

கூண்டு அமைத்த வனத்துறை

வனத்துறையின் 50 பணியாளர்கள் களத்தில் உள்ளனர். அக்கம் பக்கத்தில் உள்ள பள்ளி மாணவர்களை வனத்துறை வாகனம் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருகிறோம். இந்த பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதையும், இரவு நேரங்களில் மக்கள் வெளியே நடமாடுவதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் " என தெரிவித்துள்ளனர்.

MH370: மாயமான மர்ம விமானம்; 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேடும் மலேசியா!

உலக விமான போக்குவரத்து வரலாற்றில் மிகவும் புதிரான கதை மலேசியா ஏலைன்ஸின் MH370 விமானத்தினுடையது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன இந்த விமானத்தை தேடும் பணியை இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: கண்மாயில் கவிழ்ந்த வேன்; பட்டாசு தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிழ்தான், கோடாங்கிபட்டி, ஏ. ராமலிங்காபுரம் பகுதிகளில் இருந்து தனியார் பட்டாசுத் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக ஒரு வேன் புறப... மேலும் பார்க்க

ECR: அரசுப் பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி; தீவிர விசாரணையில் காவல்துறை

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் இருந்து இன்று (01.12.2025) அதிகாலையில், வேலைக்கு 20 பேரை ஏற்றிக்கொண்டு தனியாருக்குச் சொந்தமான வேன் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே குன்னத்தூர் கிழக்கு கடற... மேலும் பார்க்க

Accident: `திருப்பத்தூர் பேருந்து விபத்துக்கான காரணம் இதுதான்' - நடத்துனர் கொடுத்த தகவல்

காரைக்குடி–திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப் பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் ம... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பேருந்து விபத்து: 11 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் ம... மேலும் பார்க்க

கும்பகோணம்: தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து இளம் பெண் பலி; பெற்றோர் உட்பட மூவர் காயம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல்(56). கூலி தொழிலாளர். இவரது மனைவி சீதா (45). இவர்களின் மகள்கள் கனிமொழி (21) பி.பி.ஏ., பட்டதாரி. ரேணுகா (2... மேலும் பார்க்க