செய்திகள் :

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

post image

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத் திரும்பினார்.

அதிகாலை 4 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கியபோது அவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் தனது கையில் எந்தப் பொருளையும் வைத்திருக்கவில்லை. ஆனால் அவரது சாமான்களை ஆய்வு செய்தபோது, ​​ஒரு டிராலி பேக்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 சீல் செய்யப்பட்ட பாக்கெட்டுகளை அதிகாரிகள் மீட்டனர்.

அந்தப் பாக்கெட்டுகளில் ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. கஞ்சா செடியின் பச்சை நிற பூக்கள் மற்றும் காய்க்கும் மேல் பகுதிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தடயவியல் ஆய்வில் அவை கஞ்சா என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பயணத்தின்போது தன்னுடன் நட்பாகப் பழகிய ஒரு நபர் தனது நம்பிக்கையைப் பெற்று, ஒரு பையை இந்தியாவுக்கு எடுத்துச் செல்லும்படி வற்புறுத்தி கொடுத்ததாக சுங்கத் அதிகாரிகளிடம் கூறினார். அவரைக் கைது செய்து அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

சன்னி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகர் திரிபாதி, பையில் என்ன இருந்தது என்பது குறித்து தனது மனுதாரருக்குத் தெரியாது என்று தெரிவித்தார். மேலும் ஒரு சந்தேகத்திற்கு இடமில்லாத பயணி ஒருவரை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அந்தப் பெண் சுற்றுலா, கலை மற்றும் மாடலிங் துறைகளில் தொழில் வாய்ப்புகளை ஆராய்வதற்காக பாங்காக் சென்றிருந்தார். பயணத்தின்போது அவருடன் நட்பாகப் பழகிய ஒருவர், இந்தியாவிற்கு ஒரு பையை எடுத்துச் செல்லும்படி வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனாலும் சன்னி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

டி.எஸ்.பி உடையில் அலறவிட்ட பெண்; ஆண் நண்பரை `இம்ப்ரஸ்’ செய்ய தில்லாலங்கடி! - சிக்கியது எப்படி?

வேலூர் கோட்டை வளாகத்தில், நேற்று முன்தினம் மாலை வடக்கு காவல் நிலையப் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதில்சுவர் நடைபாதை பகுதியில் `டி.எஸ்.பி சீருடை’யில் பெண் ஒருவர் பிறந்த நாள் கேக்... மேலும் பார்க்க

சபரிமலை: தடிமனாகப் பூசிய தங்கத்தைத் திருடிவிட்டு மெலிதாகப் பூசி மோசடி; ஆய்வக சோதனையில் அதிர்ச்சி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம் மற்றும் கருவறை திருக்கதவுகள் ஆகியவற்றில் தங்கம் பதித்ததில் நடந்த மோசடி குறித்த விசாரணை தொடர்ந்து வருகிறது. ​சபரிமலை கருவறை மற்றும் அதன் இருபுறமும் ... மேலும் பார்க்க