செய்திகள் :

மும்பை: வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி; 948 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு... பத்திரமாக மீட்ட போலீஸ்!

post image

மும்பை திவா பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போனார். இது குறித்து அவர் பெற்றோர் போலீஸில் புகார் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். சிறுமியைக் கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 68 கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பிறகு திவா ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் அச்சிறுமி தென்பட்டாள். அச்சிறுமி ஒரு நபருடன் ரயிலில் ஏறி புறப்பட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அனைத்து ரயில் நிலையங்களுக்கும் போலீஸார் சென்று கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அம்பர்நாத் ரயில் நிலையத்தில் அந்த அடையாளம் தெரியாத நபர் அச்சிறுமியுடன் ரயிலில் இருந்து இறங்கினார்.

அவர் அங்கிருந்து பத்லாப்பூர் செல்லும் ரயிலில் ஏறினார். இதையடுத்து பத்லாப்பூர் ரயில் நிலையம் மற்றும் அதனைகிச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸார் அச்சிறுமியை அழைத்துச் சென்ற நபர் குறித்து விசாரித்தனர்.

சித்திரிப்புப் படம்

அதோடு அப்பகுதியில் இருக்கும் அனைத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன. நீண்ட தேடுதலுக்குப் பிறகு அச்சிறுமி சுமித் சாந்தாராம் என்பவரது வீட்டில் பாதுகாப்பாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வீட்டில் சுமித் சாந்தாராமிற்கு ஏற்கெனவே 3 மைனர் குழந்தைகள் இருந்தனர். அவர்களுடன் காணாமல் போன சிறுமி பத்திரமாக இருந்தாள். சாந்தாராம் மனைவி அவருடன் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இருந்தார். இதனால் சாந்தாராம் தனது 3 குழந்தைகளையும் வளர்த்து வந்தார். மீட்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்தபோது அவரது வீட்டில் பெற்றோர் மிகவும் மோசமாக நடத்தியதாகவும், அதிகமான வீட்டு வேலைகளை கொடுத்து செய்யச் சொன்னதாகவும், எனவேதான் வீட்டை விட்டு வெளியேறி வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு அதிக மக்கள் தொகை கொண்ட நகரத்தில் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலானது என்றும், ஆனால் நாங்கள் போராடி 948 கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு கண்டுபிடித்துவிட்டோம் என்று போலீஸ் அதிகாரி பாலாசாஹேப் தெரிவித்தார்.

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க