செய்திகள் :

மும்பை: வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி; 948 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு... பத்திரமாக மீட்ட போலீஸ்!

post image

மும்பை திவா பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போனார். இது குறித்து அவர் பெற்றோர் போலீஸில் புகார் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். சிறுமியைக் கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 68 கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பிறகு திவா ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் அச்சிறுமி தென்பட்டாள். அச்சிறுமி ஒரு நபருடன் ரயிலில் ஏறி புறப்பட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அனைத்து ரயில் நிலையங்களுக்கும் போலீஸார் சென்று கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அம்பர்நாத் ரயில் நிலையத்தில் அந்த அடையாளம் தெரியாத நபர் அச்சிறுமியுடன் ரயிலில் இருந்து இறங்கினார்.

அவர் அங்கிருந்து பத்லாப்பூர் செல்லும் ரயிலில் ஏறினார். இதையடுத்து பத்லாப்பூர் ரயில் நிலையம் மற்றும் அதனைகிச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸார் அச்சிறுமியை அழைத்துச் சென்ற நபர் குறித்து விசாரித்தனர்.

சித்திரிப்புப் படம்

அதோடு அப்பகுதியில் இருக்கும் அனைத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன. நீண்ட தேடுதலுக்குப் பிறகு அச்சிறுமி சுமித் சாந்தாராம் என்பவரது வீட்டில் பாதுகாப்பாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வீட்டில் சுமித் சாந்தாராமிற்கு ஏற்கெனவே 3 மைனர் குழந்தைகள் இருந்தனர். அவர்களுடன் காணாமல் போன சிறுமி பத்திரமாக இருந்தாள். சாந்தாராம் மனைவி அவருடன் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இருந்தார். இதனால் சாந்தாராம் தனது 3 குழந்தைகளையும் வளர்த்து வந்தார். மீட்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்தபோது அவரது வீட்டில் பெற்றோர் மிகவும் மோசமாக நடத்தியதாகவும், அதிகமான வீட்டு வேலைகளை கொடுத்து செய்யச் சொன்னதாகவும், எனவேதான் வீட்டை விட்டு வெளியேறி வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு அதிக மக்கள் தொகை கொண்ட நகரத்தில் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலானது என்றும், ஆனால் நாங்கள் போராடி 948 கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு கண்டுபிடித்துவிட்டோம் என்று போலீஸ் அதிகாரி பாலாசாஹேப் தெரிவித்தார்.

ஈரோடு: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பிய மாணவர்கள்; ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள் - Album

ஈரோட்டில் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்புஈரோட்டில் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்புஈரோட்டில் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்புஈரோட்டில் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்புஈரோட்டில் பள்ளி மாணவர்களுக்கு வரவேற்புஈரோட்டில் ... மேலும் பார்க்க

`ஷாருக் கானுக்கு கிரிக்கெட்டே பிடிக்காது; அவரை கொல்கத்தா அணியின் உரிமையாளராக்கினேன்..!'- லலித் மோடி

இன்றைக்கு இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட்டிற்கு அதன் முன்னாள் தலைவர் லலித் மோடிதான் முக்கிய காரணம் ஆகும். அவர் தான் பாலிவுட் பிரபலங்களை அழைத்து வந்து ஐ.பி.எல். அணிகளை விலைக்கு வாங்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 55 லட்சம் விவசாயிகளின் விவசாயக் கடன் தள்ளுபடி; யார், யாருக்கு எவ்வளவு?

கடந்த 2024ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று கூறி பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க

கல்லூரியில் பூட்டியிருந்த அறையில் கிடந்த 2 சூட்கேஸ்களில் கரையான் அரித்த 1 கோடி ரூபாய் நோட்டுக்கள்!

கொல்கத்தாவின் மத்திய பகுதியில் செயல்படும் சுரேந்திரநாத் கல்லூரியில் பூட்டப்பட்டு இருந்த ஒரு அறையை திறந்து ஊழியர்கள் சுத்தப்படுத்தியபோது, உள்ளே இரண்டு சூட்கேஸ்கள் இருந்தது. அந்த சூட்கேஸ்களை திறந்து பார... மேலும் பார்க்க

இலவச மாம்பழ விருந்து: அமெரிக்கப் பூங்காவைத் திருவிழாக்கோலமாக்கிய அசல் இந்திய மாம்பழங்கள்!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பூங்கா ஒன்றில், இந்திய மாம்பழங்களுக்காக நடத்தப்பட்ட ஒரு பிரமாண்டமான "இலவச மாம்பழத் திருவிழா" அங்கிருந்த மக்களை ஒட்டுமொத்தமாகக் கவர்ந்து தற்போது இணையத்தில் பயங்கர வைரலாக... மேலும் பார்க்க

MacBook-க்காக இளைஞர் போட்ட ஸ்கெட்ச்; பணியில் சேர்ந்தவுடன் Uber நிறுவனத்துக்குக் காத்திருந்த ஷாக்!

ஊழியர்கள் வேலைக்கு வராமல் ஏமாற்றுவதை நாம் பார்த்திருப்போம், ஆனால் ஒரு லேப்டாப்பிற்காக ஒரு நபர் தனது அடையாளத்தையே ஒட்டுமொத்தமாக அழித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த இந்த விசித்திரச் சம்பவம் தற்போது பயங்கர வை... மேலும் பார்க்க