செய்திகள் :

ம.நடராஜனின் சகோதரர் மரணம் - கட்சியின் பெயரை வி.கே.சசிகலா அறிவிக்காததற்கு காரணம் இதுவா?

post image

வி.கே. சசிகலாவின் கணவர் மறைந்த ம.நடராஜனின் மூத்த  சகோதரர் ம. சாமிநாதன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

ராமநாதரபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நேற்று புதிய கட்சி தொடங்கும் முடிவை அறிவித்தார் வி.கே சசிகலா. இந்த நிகழ்வுக்குக் கிளம்பும் முன்னரே, அதாவது நேற்று காலையிலேயே சாமிநாதனின் காலமாகிவிட்டார். இருந்தும் கடைசி நேரம் என்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்தால் சரியாக இருக்காது என சசிகலா பசும்பொன் வந்து விட்டதாகச் சொல்கிறார்கள்.

மன்னார்குடி குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இது தொடர்பாக விசாரித்தோம்.

ம.சாமிநாதன்

‘’தஞ்சாவூர் மாவட்டம் விளார் தான் சசிகலா கணவர் நடராஜனின் சொந்த ஊர். அவருடைய அப்பா மருதப்ப பண்ணையாருக்கு ஊரில் நல்ல செல்வாக்கு. நடராஜன் கூடப் பிறந்தவர்களில் மூத்தவர் சாமிநாதன்.

வயோதிகம் சார்ந்து எல்லோருக்கும் வர்ற சில பிரச்னைகளால் கடந்த சில நாட்களாகவே அவதிப்பட்டு வந்தவர் நேற்று காலை காலமாகிட்டார்.

உடல் அடக்கம் இன்னைக்கு மதியம் விளாரில் நடக்குது.

சசிகலாவின் கட்சி அறிவிப்பு கூட்டம் ஏற்கனவே திட்டமிட்டதுங்கிறதால அதை ரத்து செய்ய வேண்டாமென சசிகலா சொல்லிட்டதாச் சொல்றாங்க.

ம.நடராஜன்

தென்மாவட்டங்களில் இருந்து பரவலா அவரது ஆதரவாளர்களும் வந்து கலந்து கிட்டதால கட்சியின் கொடியை மட்டுமாவது அறிமுகம் செய்யலாம்னு  அதைச் செய்திருக்காங்க’’ என்ற அவர்கள்,

`கட்சியின் பெயரைப் பொறுத்தவரை ஏற்கனவே திவாகரன் பதிவு செய்து வைத்திருக்கும் கட்சி அல்லது ’அண்ணா எம்.ஜி.ஆர் திமுக’ மற்றும் மேலும் சில பெயர்களை செலக்ட் செய்து வைத்திருப்பதாகவும், கணவர் வீட்டில் இப்படியொரு சம்பவம் நிகழாமல் இருந்தால் நேற்றே அதையும் அறிவித்திருப்பார் என்கிறார்கள்.

PEN ரிபோர்ட்; உதயநிதியின் கிரீன் சிக்னல்; உற்சாகத்தில் உடுமலை இளைஞரணி - திடீர் விசிட் பின்னணி!

திருப்பூர் மாவட்டத்தில் விஐபி தொகுதியாக கருதப்படும் உடுமலைப்பேட்டைதான் இப்போது, மாவட்ட திமுக-வுக்குள் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.1996-க்குப் பிறகான 25 ஆண்டுகளில், இந்த தொகுதியில் நடைபெற்ற 5 ... மேலும் பார்க்க

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் குறைப்பு; ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க

கோவை : அதிநவீன வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் !

தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் ... மேலும் பார்க்க

20 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி; உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்திற்கு கடந்த 2008-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றத்தினால் அத்திட்ட... மேலும் பார்க்க

Brand Bengaluru: சர்வதேச SWAN அமைப்பில் இந்தியாவின் ஒரே பிரதிநிதி; வாழ்த்திய முதல்வர் சித்தராமையா!

SWAN (Smart Water Networks Forum) என்ற அமைப்பு உலகெங்கிலும் உள்ள குடிநீர், கழிவுநீர் மற்றும் மழைநீர் அமைப்புகளை "ஸ்மார்ட்" (Smart) ஆக மாற்றும் ஒரு சர்வதேச லாப நோக்கற்ற அமைப்பாகும். இதன் தலைமையகம் லண்ட... மேலும் பார்க்க

NLC: விதிமீறல்களின் 'சுரங்கம்' என்.எல்.சி? சிஏஜி அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்; ஓர் அலசல்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC India Ltd), கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.இது தொடர்பாக 2017-18 ம... மேலும் பார்க்க