செய்திகள் :

``ராகுலை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்க வையுங்க" - இர்பானிடம் கலகலப்பாகப் பேசிய பிரியாங்கா காந்தி

post image

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஊடகங்களிடம் போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் உரையாற்றினர். அதில் ஒருவர்தான் இர்பான். பள்ளி சென்று கல்வியறிவை பெறாத இவர், தன் அனுபவம், ஆர்வம் மூலம் ஆழமான அரசியல் அறிவைப் பெற்றிருக்கிறார். அந்தப் பேட்டியில், நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும், குறிப்பாக உழைக்கும் வர்கத்தினர் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசியிருந்தார். அவர் பேச்சு சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளானது. அவர் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் தேடப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பெயர் இர்பான் என்றும், சாலையில் ஐஸ் விற்கும் தொழில் செய்பவர் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இர்பானை அவரின் இல்லத்துக்குச் சென்று சந்தித்தார்.

ராகுல் காந்தி - இர்பான்
ராகுல் காந்தி - இர்பான்

ராகுல் காந்தியுடனான உரையாடலின்போது, ​​``எனக்கு எந்தத் தனிப்பட்ட கோரிக்கைகளும் இல்லை. தொழிலாளர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி தீர்வை நோக்கி நகர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

ராகுல் காந்தியை சந்தித்ததற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இர்பான், ``ராகுல் காந்தி சார் வருவதற்கு முன்பு பிரியாங்கா காந்தி என்னிடம் போனில் பேசினார். அப்போது `ராகுல் காந்தியைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லுங்க இர்பான். என் பேச்சைக் கேட்பதில்லை. அவரை எப்படியாவது சம்மதிக்க வையுங்கள்' என என்னிடம் வேடிக்கையாகக் கேட்டார். ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புவதாக அவரிடம் கூறினேன்." என நகைச்சுவையாகக் கூறினார்.

Vishal Garg அன்று 3 நிமிடத்தில் 900 பேரை பணியிலிருந்து நீக்கியவர்; இன்று அவரையே வெளியேற்றிய நிறுவனம்

டிசம்பர் 2021-ல், 3 நிமிட ஜூம் (Zoom) மீட்டீங்கில் 900 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்து உலகளவில் பெரும் சர்ச்சைக்கு ஆளான இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விஷால் கார்க், தற்போது Better Home & Fi... மேலும் பார்க்க

"மோனலிசாவுடன் ஒப்பிடாதீர்கள்; நான் சிங்கப்பெண்" - கன்வார் யாத்திரையில் வைரலாகி வரும் மானசி

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்த மகா கும்பமேளாவில் பாசிமணி, உத்திராட்ச மாலைகளை விற்பனை செய்து வந்த மோனலிசா என்ற பெண் சமூக வலைத்தளங்கள் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அவரது வீடியோக்கள் மிகவும்... மேலும் பார்க்க

வாடகை வீடு பார்க்கச் சென்ற தம்பதி: பிட்புல் நாய் தாக்கியதில் தம்பதிக்கு தீவிர சிகிச்சை!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள குமான் நகர் பகுதியில் பிட்புல் (Pitbull) ரக நாய் தாக்கியதில் தம்பதியர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சிய... மேலும் பார்க்க

``மாணவர்களுக்காக குரல் கொடுத்தேன்; இப்போது துன்புறுத்தப்படுகிறேன்" - வைரல் பெண் ரியா அஹிர்

நீட் தேர்வு உள்ளிட்ட அரசுத் தேர்வுகள் குளறுபடிகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, காவல்துறையின் வாகனத்தை வழி... மேலும் பார்க்க

`18 வயதில் கல்லூரி பேராசிரியர்'- 300 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளைஞர்! - யார் இவர்?

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது பொறியியல் பட்டதாரியான நாதன் தாமஸ், உலகின் மிக இளம் வயது ஆண் பேராசிரியர் என்ற பெருமையைப் பெற்று கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் ... மேலும் பார்க்க