செய்திகள் :

ராகுல் காந்தியைச் சந்தித்தாரா விஜய்? - மறுக்கும் செல்வப்பெருந்தகை!

post image

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்ததாகக் தகவல் பரவியது.

இது நம்பத்தகுந்த செய்தி அல்ல என்றும் வதந்தி என்றும் இரண்டு தரப்பினரும் மறுத்துள்ளனர்.

ராகுல் காந்தி, செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளரிடம் இதுகுறித்து கேட்ட கேள்விக்கு, "தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நான். எனக்கு இதுவரைக்கும் தகவல் இல்லை," என்று பதிலளித்தார்.

யாரோ சிலர் இப்படிப்பட்ட ஊர்ஜிதப்படாத செய்திகளை வெளியிட்டு தங்களது பெயரை சேர்த்து கொள்ள விரும்புகிறார்கள்.

நான் நேற்று இரவு கூட என்னுடைய இன்சார்ஜ் கிரீஷ் சோடங்கரிடம் பேசினேன். இப்படி எல்லாம் பொதுவெளியில் ஊடகங்களில் வருகிறது என்று, 'எனக்கும் தெரியவில்லை' என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவராக இருக்கக்கூடிய பிரவீன் சக்கரவர்த்தி தான் காங்கிரசுக்கும் தி.மு.க-வுக்கும் கூட்டத்தை நடத்தி வருகிறார் என்று சொல்லி வந்துள்ளனர். அது ஒருபோதும் உண்மை கிடையாது. உண்மைக்கு புறம்பானது.

எங்களுக்கு எங்கள் தலைவர் ராகுல் காந்தி, எங்களுடைய தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் நியமித்திருக்கின்ற தமிழ்நாட்டின் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் சொன்னதுதான் நம்பத்தகுந்த செய்தி. கூட்டணி குறித்து எங்கள் அகில இந்திய தலைமை காங்கிரஸ்தான் முடிவு பண்ணவேண்டும்," எனப் பேசியுள்ளார்.

சி.டி.ஆர்.நிர்மல் குமார்

முன்னதாக மதுரை விமானநிலையத்தில், "திமுக கூட்டணியில் நாங்கள் வலிமையாகவும் உறுதியாகவும் இருக்கிறோம். யாரோ வதந்திகளைப் பரப்புகின்றனர்," எனப் பேசியிருந்தார்.

மறுபுறம் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், "வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது. அப்படி எதாவது இருந்தால் நாங்கள் பொதுவெளியில் தகவல் தெரிவிப்போம். கடந்த இரண்டு மாதங்களாக இதுபோன்ற வதந்திகள் பேசப்பட்டு வருகின்றன," என்று கூறினார்.

``ஈரானைவிட இஸ்ரேல் அச்சுறுத்தலானது" - 200 வருட பழைமையான ஆக்ஸ்போர்ட் யூனியனில் தீர்மானம் நிறைவேற்றம்

பாலஸ்தீனம் மீது இரண்டாண்டுகளாக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதில், காசாவில் 69,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.கடந்த அக்டோபரில் தற்காலிகமாகப் போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டாலும், காசாவில... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: `உலக வங்கி நிதி ரூ.14,000 கோடி கடன் வாங்கி செலவு' - பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி யாரும் எதிர்பாராத அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. `இந்த வெற்றியில் தேர்தல் ஆணையத்தின் பங்... மேலும் பார்க்க

``போலி வாக்குகளை நீக்கினால் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது, திமுக அஞ்சுகிறது'' -அதிமுக சரவணன்

"போலியான வாக்காளர்களை காப்பாற்றவும், உண்மையான வாக்காளர்களை நீக்கவும் திமுக முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வருகிறது" என்று அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.எஸ்... மேலும் பார்க்க

கேரளா: உள்ளாட்சித் தேர்தலில் சீட் தர பா.ஜ.க மறுப்பு; உயிரை மாய்த்த ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர்

கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 13 அன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும்.இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பா.... மேலும் பார்க்க

சுசீந்திரம்: தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளம் சுவர் இடிந்து விழ என்ன காரணம்? வல்லுநர்கள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளத்தை ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைக்க கடந்த மார்ச் 2-ம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.செப்டம... மேலும் பார்க்க

S.I.R : 'BLO -க்களை திமுக கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டது!' - தவெக ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தவெக சார்பில் சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தலைமைய... மேலும் பார்க்க