செய்திகள் :

ராஜஸ்தான்: சித்ரவதை செய்த மாணவர்கள்; கண்டுகொள்ளாத ஆசிரியர்; 4ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்

post image

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் 4வது வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவி அமைரா குமார் மீனா, பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

காலை 11 மணிக்கு பள்ளி வகுப்பில் இருந்த மாணவர்கள் சிலர் மீனாவிற்கு எதிராக டிஜிட்டல் சிலேடில் ஏதோ எழுதியதாகத் தெரிகிறது. அதனைப் பார்த்தவுடன் மீனா அதிருப்தியுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதனை அழிக்கும்படி மாணவர்களிடம் மீனா தெரிவித்துள்ளார். அதோடு இது போன்று எழுதுவதைத் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டார். மீனாவும் ஏதோ டிஜிட்டல் ஸ்லேடில் எழுதியதாகத் தெரிகிறது. அதன் பிறகு திடீரென மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இது குறித்து விசாரிக்க சி.பி.எஸ்.சி. போர்டு இரு நபர் கமிட்டி ஒன்றை அமைத்திருந்தது. அக்கமிட்டியின் விசாரணையில் சம்பவம் நடந்த அன்று வகுப்பில் மாணவர்களிடையே ஏதோ கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது.

தற்கொலை
தற்கொலை

இதனால் மாணவி மிகவும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். சில மாணவர்கள் டிஜிட்டல் போர்டில் மாணவி குறித்து எழுதியுள்ளனர். அதனாலும் மாணவி மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது என்று விசாரணை அறிக்கை கூறுகிறது.

இது குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், ''கடந்த 18 மாதங்களாக எங்களது மகளை சக மாணவர்கள் துன்புறுத்தி வந்தனர். ஆனால், அது குறித்து வகுப்பு ஆசிரியர் புனிதாவிடம் தெரிவித்தபோது அவர் அப்புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் செய்த போது தவறு செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் எங்களது மகளிடம் ஆசிரியர் புனிதா கடுமையாகக் கத்தி இருக்கிறார்.

பாலியல் ரீதியாகவும் மாணவர்கள் சித்திரவதை செய்துள்ளனர். மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளனர். ஆசிரியையிடம் 5 முறை புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மாணவர்கள் மத்தியில் கத்தி ஆசிரியை அவமானப்படுத்தியதால்தான் எங்களது மகள் தற்கொலை செய்துள்ளார்'' என்று தெரிவித்தனர்.

மாணவி மீனா தன்னிடம் புகார் செய்ததை ஆசிரியை புனிதா ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டெல்லியில் ஆசிரியர்கள் துன்புறுத்துவதாகக் கூறி டெல்லியில் 10வது வகுப்பு படிக்கும் மாணவர் மெட்ரோ ரயில்நிலையத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

போலந்து: காட்டில் கண்டெடுக்கப்பட்ட தங்க, வெள்ளி நாணயங்கள் - வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்!

போலந்தில் உள்ள நிசின்ஸ்கா வனப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை தங்க மற்றும் வெள்ளி நாணயங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த நாணயங்கள் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்... மேலும் பார்க்க

`புது ருசி, புது அனுபவம்' - சீனாவில் பிரபலமாகும் ` கரப்பான் பூச்சி காஃபி' - என்ன விலை தெரியுமா?

உலகம் முழுவதும் காபி பிரியர்கள் விதவிதமான சுவைகளில் காபி குடித்திருப்பார்கள்., ஆனால் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய வகை காபி, கேட்பவர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது. பீஜிங்கில் 'கரப்பான்... மேலும் பார்க்க

Golden Toilet: ``101 கிலோ தங்கத்தில் டாய்லெட்'' - ரூ.100 கோடிக்கு வாங்கியவர் என்ன சொல்கிறார்?

நியூயார்க்கில் நடந்த ஒரு ஏலத்தில், 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் கோப்பை, சுமார் 12.1 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.100 கோடி) விற்பனையாகியுள்ளது.பிரபல இத்தாலிய கலைஞர் மௌ... மேலும் பார்க்க

ஆந்திரா: பருவமடைந்ததால் மகளை வீட்டில் பூட்டி வைத்த தாய்; 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு;என்ன நடந்தது?

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள இச்சாபுரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி. இவர் தனது மகளுடன் மூத்த சகோதரன் வீட்டில் தங்கி இருந்தார். இவரது மகள் கடந்த 2022ம் ஆண்டு பருவம் அடைந்தார... மேலும் பார்க்க

`அம்மா என்னை மன்னித்து விடுங்கள்'- டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து குதித்து மாணவர் விபரீதம்

டெல்லியில் பிரபல பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர், அங்குள்ள ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்து இருப்பதாக அவரது தந்தைக்கு மர்ம நபர் போன் செய்தார். ... மேலும் பார்க்க