செய்திகள் :

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். பாணியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்; பீகாரில் 24 பேர் சிக்கியது எப்படி?

post image

நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு இரண்டாவது முறையாக நடத்தப்பட்டது. ஏற்கனவே நடத்தப்பட்ட நீட் தேர்வின் போது வினாத்தாள்கள் கசிந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று நடந்த நீட் தேர்வுக்குப் பலத்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வினாத்தாள்கள் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் கடைசி நேரத்தில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன. அப்படி இருந்தும் பீகாரில் நீட் தேர்வில் மோசடி நடந்துள்ளது.

நீட் மறுதேர்வின் போது பீகாரின் லக்கிசராய் என்ற இடத்தில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில் நடந்த மோசடி முறியடிக்கப்பட்டது.

ஒரு கும்பல் மாணவர்களுக்குப் பதில் வேறு நபர்களை நீட் தேர்வு எழுத வைத்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த அதிரடி சோதனையில் மருத்துவ மாணவர்கள், தேர்வுப் பணியில் ஈடுபட்ட பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இந்த மோசடியில் கயாவில் உள்ள ஏஎன்எம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ மாணவர் அர்பித் ராஜ் மூளையாகச் செயல்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இவரிடம் ஏற்கனவே 2024ம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி இருக்கிறது.

இது தவிர இந்த வழக்கு தொடர்பாக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மற்றொரு மருத்துவ மாணவரான மயங்க் காஷ்யப்பும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பயோமெட்ரிக் நிறுவன ஊழியர்கள் 14 பேரும் இந்த ஆள்மாறாட்ட மோசடியில் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''ஹசன்பூர் உயர்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் பயோமெட்ரிக் நிறுவன ஊழியராகக் காட்டிக் கொண்டு மயங்க் காஷ்யப் நுழைந்தார். அவர் முதலில் பிடிபட்டார். அவரைத் தொடர்ந்து லக்கிசராய் பகுதியில் உள்ள கேஆர்கே மேல்நிலைப் பள்ளி மற்றும் கேந்திரிய வித்யாலயா ஆகிய இடங்களில் போலீஸார் சோதனை நடத்தி மற்றவர்களைக் கைது செய்தோம்'' என்றார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழக செவிலியர் மாணவி பூனம் குமாரி நீட் தேர்வில் மற்றொரு மாணவிக்காகக் கலந்து கொண்டதாகப் பிடிபட்டார். இதே போன்று எய்ம்ஸ் ரேபரேலி மாணவர் சவுரப் ஜாவும் கைது செய்யப்பட்டார்.

திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் கொலை; தாய், ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை

கோவை சாய் பாபா காலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு அபிஷேக் என்ற 6 வயது மகனும், 3 வயதில் வர்ஷினி என்ற மகளும் இருந்தனர். இவரது கணவர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரித்து சென்ற நிலையில்... மேலும் பார்க்க

சிவகாசி: பிரசவத்தின்போது ஏட்டுவின் மனைவி சிசுவுடன் உயிரிழப்பு; போராட்டம் நடத்திய உறவினர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த டாஸ்மார்க் ஊழியர் பாக்கியராஜ் ஆனந்தவள்ளி தம்பதியரின் மகள் ரேணுகா தேவி. இவரது கணவர் தினேஷ், தூத்துக்குடி மாவட்டம் செய்து... மேலும் பார்க்க

ஆபாசப் பட மோகம்; 9 மாதக் குழந்தையைக் கடத்திப் பாலியல் கொடுமைசெய்த 12 வயது சிறுவன் - உ.பி அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அருகில் குலாரிஹா என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 9 மாத மகளை தங்களது அருகில் படுக்க வைத்துவிட்டு உறங்கினர். அதிகாலை 2 மணிக்கு எழுந்து பார்த்தபோது குழந்தையைக் க... மேலும் பார்க்க

வெளியேறிய மணமகள்; மணமேடை ஏற்றப்பட்ட 13 வயது சகோதரி - மொட்டை கடிதத்தால் நிறுத்தப்பட்ட திருமணம்!

மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயதான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாக போலீஸ் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. 13 வயது மாணவியின் மூத்த... மேலும் பார்க்க

`ஆண் குழந்தை ரூ.7-8 லட்சம்.. பெண் குழந்தை ரூ.3-4 லட்சம்'- டெல்லியை அதிரவைத்த குழந்தை கடத்தல் கும்பல்

டெல்லியில் மத்திய பகுதியில் உள்ள பாஹர்கஞ்ச் பகுதியில் அடிக்கடி ஒரு பெண் வேறு வேறு குழந்தைகளுடன் நடமாடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அத்தகவலின் அடிப்படையில் அது குறித்து விசாரி... மேலும் பார்க்க

``மது அருந்த தண்ணீர் பாட்டில் தராததால் அடித்துக் கொன்றோம்" - வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் பகீர்!

ஜார்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டம், போல்பெல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் சிங். இவர், தூத்துக்குடி சில்லாநத்தம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்... மேலும் பார்க்க