செய்திகள் :

"ஆட்டமும் பாட்டமும் போதும்; ஆட்சியில் கவனம் செலுத்துங்க" - தவெக அரசுக்கு தமிழிசை கண்டனம்

post image

சென்னை விமான நிலையத்தில் பாஜக-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, ``சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, சென்னையில் 61 சதவீத மக்களுக்கு மட்டுமே பொதுப் போக்குவரத்துக்கான நேரடி இணைப்பு உள்ளது. மீதமுள்ள மக்களுக்கு இந்த வசதி இன்னும் சென்றடையவில்லை. இந்த இடைவெளியை நிரப்ப குறைந்தது 500 மினி பேருந்துகளையாவது இயக்க வேண்டும் என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

சென்னை போன்ற ஒரு மாநகரத்திலேயே இந்த நிலை என்றால், தமிழக அரசு எந்த அளவிற்குத் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மகளிருக்கு விலையில்லா பேருந்து பயணம் என்று விளம்பரம் செய்கிறார்களே தவிர, போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதில் அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

உயர்கல்வித்துறை அமைச்சர் வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார், ஆனால் மூன்று மொழிக் கொள்கையை எதிர்க்கிறார். வெளிநாட்டு மொழிகளை ஆதரிப்பவர்கள், உள்நாட்டு மொழிகளைக் கற்கக் கூடாது என்று சொல்வது இவர்களின் கொள்கை தெளிவின்மையைக் காட்டுகிறது. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, குழந்தைகள் இந்திய மொழிகளைக் கற்பதைத் தடுத்து, வெளிநாட்டு மொழிகளைப் படிக்குமாறு வற்புறுத்துகிறார்கள்.

தனியார் நீட் பயிற்சி மையங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறுகிறார். தமிழகத்தில் மின்தடை ஏற்பட்டால் அதற்கு இவர்கள் பொறுப்பேற்பதில்லை, ஆனால் எந்தக் குளறுபடி நடந்தாலும் பிரதமரைக் குறை சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதற்குப் பதிலாக, தமிழ்நாடு அரசு இங்குள்ள தனியார் பயிற்சி மையங்களை முறைப்படுத்தி, அவர்கள் அதிக பணம் கொள்ளையடிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியைத் தீவிரப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் நாங்கள் அதைச் சிறப்பாகச் செய்து காட்டினோம்.

அதைவிடுத்துப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது. அமைச்சர்கள் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் பாட்டுப் பாடுவதிலும், ஆட்டம் போடுவதிலும் காலத்தைக் கழிக்கிறார்கள். ஆட்டமும் பாட்டமும் ஆடியது போதும், இனிமேலாவது ஆட்சியில் கவனம் செலுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

``என்னுடன் விவாதிக்க மேயர் பிரியாவுக்குத் துணிச்சல் இருக்கிறதா?" - அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, ``தமிழ்நாடு அரசின் அசுர வளர்ச்சியைப... மேலும் பார்க்க

MLA-க்கள் கைகொடுப்பார்களா? விசுவாசத்தை விற்றுவிட்டதாக அதிருப்தி MP-க்கள் மீது ஆதித்ய தாக்கரே சாடல்

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி.க்கள் 6 பேர் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர முடிவு செய்துள்ளனர். அவர்கள் இன்று மாலை முறைப்படி ஏக்நாத் ஷிண்டே... மேலும் பார்க்க

மேகதாது அணை: `புதிய நடுவர் மன்றத்தை தமிழ்நாடு அரசு நாடுவதே ஏன்?' - தங்கம் தென்னரசு விளக்கம்

மேகதாது அணைப் பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றக் கூட்டத்தின் மூன்றாம் நாளான இன்று, மேகதாது அணைமீதான தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்தத் தீ... மேலும் பார்க்க

"உடன் பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று எங்களின் தயவில் தான் இந்த அரசு.!'- உதயநிதி ஸ்டாலின் உரை

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந... மேலும் பார்க்க

சட்டமன்றம்: அதிமுக வெளிநடப்பு; 'மீண்டும் நடுவர் மன்றம் ஏன்?' - தமிழக அரசுக்கு எடப்பாடி கேள்வி

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்ப... மேலும் பார்க்க

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் மிரட்டல் - அமெரிக்காவின் முரண்; வெளியேறிய ஈரான்!

ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை (ஜூன் 17, 2026) கையெழுத்திடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்கா, ஈரான் இடையே நேற்று (ஜூன் 21, 2026) பேச்சுவார... மேலும் பார்க்க