செய்திகள் :

``என்னுடன் விவாதிக்க மேயர் பிரியாவுக்குத் துணிச்சல் இருக்கிறதா?" - அமைச்சர் கீர்த்தனா

post image

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, ``தமிழ்நாடு அரசின் அசுர வளர்ச்சியைப் பார்த்து எதிர்க்கட்சியினர் திருமண வீடுகளிலும், பொதுமேடைகளிலும் இன்னும் கதறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சென்னை மேயர் எவ்வளவு பெரிய பொறுப்பு. ஆனால் காரில் தொங்கிக்கொண்டும், இன்னொருவருக்குக் குடைபிடித்தும் மேயர் பதவிக்குப் பெருமை சேர்த்தார். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை விடுத்து, கேலி செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். கொள்கை சார்ந்து விவாதிக்க நான் தயார். என் அருகில் வந்து அமர்ந்து பேச அந்த மேயருக்குத் துணிச்சல் இருக்கிறதா?

தவெக அமைச்சர் கீர்த்தனா
தவெக அமைச்சர் கீர்த்தனா

பெண்கள் முன்னேற்றம் குறித்து 70 ஆண்டுகாலம் வெற்றுப் பேச்சு பேசியவர்களுக்கிடையே, முதலமைச்சர் விஜய் தற்போது தமிழ்நாட்டு அமைச்சரவையில் 4 பெண் அமைச்சர்களை அமர வைத்து அழகு பார்த்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாகத் தமிழ்நாடு சட்டமன்றத்தின் செயலாளராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த கால ஆட்சிகளில் உள்ளாட்சிப் பதவிகளில் பெண்கள் வெறும் பெயரளவிற்கே இருந்தனர். அவர்களது கணவன்மார்களே அதிகாரத்தைச் செலுத்திய நிலையை மாற்றி, பெண்களுக்கு உண்மையான அதிகாரத்தையும் உரிமையையும் தற்போதைய த.வெ.க அரசு வழங்கியுள்ளது.

தி.மு.க ஆட்சியில் மகளிர் மேம்பாடு குறித்துப் பேசினார்களே தவிர, தங்கள் வீட்டுப் பெண் கனிமொழிக்கே டெல்லியில் பதவி கொடுத்து இங்கு பவர் தராமல் முடக்கினார்கள். சொந்த வீட்டுப் பெண்களுக்கே இதுதான் நிலை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எங்கு உண்மையான மரியாதை கிடைக்கிறது என்பதைப் பார்த்து, தி.மு.க-வில் உள்ள பெண்கள் அனைவரும் எங்களுடன் வந்து இணைய வேண்டும்.

முந்தைய தி.முக. ஆட்சியில் தூத்துக்குடியில் ஒரு முக்கியச் சம்பவம் நடந்தபோது, 36 மணி நேரம் வழக்கு கூடப் பதிவு செய்யாமல் அப்போதைய முதலமைச்சர் குழந்தைகளுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற 30 நாள்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சர் கீர்த்தனா - முதல்வர் விஜய்
அமைச்சர் கீர்த்தனா - முதல்வர் விஜய்

கடந்த ஜூன் 3 முதல் ஜூன் 16 வரை போதைப்பொருள்களுக்கு எதிராக 473 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 நாட்களில் 1418 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

புதிதாகத் தொடங்கப்பட்ட 'சிங்கப்பெண் அதிரடிப்படை' காணாமல் போன ஒரு பெண்ணையும் குழந்தையையும் மிகக் குறுகிய காலத்தில் மீட்டுப் சாதனை படைத்துள்ளது. கடந்த 15, 20 நாட்களில் மட்டும் 1328 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

பெண்களின் பாதுகாப்பிற்காக ரூ. 354 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளதுடன், 2545 புதிய பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு, 319 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும், 101 இருசக்கர வாகனங்களும், நவீன கண்காணிப்பு ட்ரோன்களும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன" என்று புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.

"ஆட்டமும் பாட்டமும் போதும்; ஆட்சியில் கவனம் செலுத்துங்க" - தவெக அரசுக்கு தமிழிசை கண்டனம்

சென்னை விமான நிலையத்தில் பாஜக-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, சென்னையில் 61 சதவீத மக்களுக்கு மட்டுமே பொதுப் போக்கு... மேலும் பார்க்க

MLA-க்கள் கைகொடுப்பார்களா? விசுவாசத்தை விற்றுவிட்டதாக அதிருப்தி MP-க்கள் மீது ஆதித்ய தாக்கரே சாடல்

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி.க்கள் 6 பேர் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர முடிவு செய்துள்ளனர். அவர்கள் இன்று மாலை முறைப்படி ஏக்நாத் ஷிண்டே... மேலும் பார்க்க

மேகதாது அணை: `புதிய நடுவர் மன்றத்தை தமிழ்நாடு அரசு நாடுவதே ஏன்?' - தங்கம் தென்னரசு விளக்கம்

மேகதாது அணைப் பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றக் கூட்டத்தின் மூன்றாம் நாளான இன்று, மேகதாது அணைமீதான தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்தத் தீ... மேலும் பார்க்க

"உடன் பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று எங்களின் தயவில் தான் இந்த அரசு.!'- உதயநிதி ஸ்டாலின் உரை

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந... மேலும் பார்க்க

சட்டமன்றம்: அதிமுக வெளிநடப்பு; 'மீண்டும் நடுவர் மன்றம் ஏன்?' - தமிழக அரசுக்கு எடப்பாடி கேள்வி

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்ப... மேலும் பார்க்க

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் மிரட்டல் - அமெரிக்காவின் முரண்; வெளியேறிய ஈரான்!

ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை (ஜூன் 17, 2026) கையெழுத்திடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்கா, ஈரான் இடையே நேற்று (ஜூன் 21, 2026) பேச்சுவார... மேலும் பார்க்க