செய்திகள் :

MLA-க்கள் கைகொடுப்பார்களா? விசுவாசத்தை விற்றுவிட்டதாக அதிருப்தி MP-க்கள் மீது ஆதித்ய தாக்கரே சாடல்

post image

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி.க்கள் 6 பேர் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர முடிவு செய்துள்ளனர். அவர்கள் இன்று மாலை முறைப்படி ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 பேரில் நிம்பல்கர் என்ற எம்.பி. மட்டும் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர தயக்கம் காட்டி வந்தார். ஆனால் இப்போது அவரும் ஏக்நாத் அணியில் சேரப்போவதாக வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார். இதையடுத்து 6 பேரும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதில் இருந்து தப்பித்துள்ளனர்.

அடுத்து உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களையும் தங்களது பக்கம் இழுக்க ஏக்நாத் ஷிண்டே திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.

இதனால் இன்று உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை மாலையில் கூட்டி இருக்கிறார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் மழைகாலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார்.

ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே

இதில் 20 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 6 எம்.பி.க்களும் அணி மாறியது குறித்து உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''அதிருப்தியாளர்களின் விசுவாசம் மற்றும் நற்பெயர் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பதை அவர்களின் நடவடிக்கைகள் மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளன. பேராசை பிடித்த எம்.பி.க்களாகிய உங்களின் விசுவாசம், உங்கள் நற்பெயர் வெட்கமின்றி விற்கப்படுகிறது.

அரசாங்கம் பாரபட்சமாகச் செயல்படுகிறது. பொதுப் பணத்தை அரசியல் ரீதியான நிதியாகப் பயன்படுத்துகிறது. சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) தலைவர்களின் ஆதரவுடன் அதிருப்தி எம்பிக்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர். அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராகவும், மகாவிகாஷ் அகாடி மற்றும் இந்தியாக் கூட்டணியின் ஒரு பகுதியாகவும் அவர்கள் பிரசாரம் செய்து வெற்றி பெற்றனர்.

வாக்காளர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராகவும், உங்கள் தொகுதிகளில் இந்தியாக் கூட்டணிக்காகவும் வாக்களித்தனர். உங்கள் பேராசையால், வெட்கமின்றி நீங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்திருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது மும்பை மாநகராட்சியில் சிவசேனா(உத்தவ்) கட்சி கவுன்சிலர்களையும் தங்களது பக்கம் இழுக்க ஏக்நாத் ஷிண்டே நடவடிக்கை எடுத்துள்ளார்.

"ஆட்டமும் பாட்டமும் போதும்; ஆட்சியில் கவனம் செலுத்துங்க" - தவெக அரசுக்கு தமிழிசை கண்டனம்

சென்னை விமான நிலையத்தில் பாஜக-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, சென்னையில் 61 சதவீத மக்களுக்கு மட்டுமே பொதுப் போக்கு... மேலும் பார்க்க

``என்னுடன் விவாதிக்க மேயர் பிரியாவுக்குத் துணிச்சல் இருக்கிறதா?" - அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, ``தமிழ்நாடு அரசின் அசுர வளர்ச்சியைப... மேலும் பார்க்க

மேகதாது அணை: `புதிய நடுவர் மன்றத்தை தமிழ்நாடு அரசு நாடுவதே ஏன்?' - தங்கம் தென்னரசு விளக்கம்

மேகதாது அணைப் பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றக் கூட்டத்தின் மூன்றாம் நாளான இன்று, மேகதாது அணைமீதான தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்தத் தீ... மேலும் பார்க்க

"உடன் பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று எங்களின் தயவில் தான் இந்த அரசு.!'- உதயநிதி ஸ்டாலின் உரை

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந... மேலும் பார்க்க

சட்டமன்றம்: அதிமுக வெளிநடப்பு; 'மீண்டும் நடுவர் மன்றம் ஏன்?' - தமிழக அரசுக்கு எடப்பாடி கேள்வி

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்ப... மேலும் பார்க்க

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் மிரட்டல் - அமெரிக்காவின் முரண்; வெளியேறிய ஈரான்!

ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை (ஜூன் 17, 2026) கையெழுத்திடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்கா, ஈரான் இடையே நேற்று (ஜூன் 21, 2026) பேச்சுவார... மேலும் பார்க்க