செந்தில் பாலாஜி: `ஆட்சியை கவிழ்க்க சதி; ஹவாலா பணம்' - அனல் பறக்கும் வாதம் | முன்...
வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய போறீங்களா? - ITR Forms-ல் இந்த மாற்றங்கள் வந்துருக்கு!
இந்தியாவில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் சீசன் தொடங்கிவிட்டது.
இந்த ஆண்டு புதிய வருமான வரிச் சட்டம் கொண்டு வந்துள்ளதால், சில மாற்றங்கள் வருமான வரிக் கணக்கு படிவங்களிலும் வந்துள்ளது.
அந்த மாற்றங்கள்
> இதற்கு முன்பு...
1. சம்பளம், ஒரு வீட்டு வாடகை, இதர வருமானங்கள் மூலம் 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள்,
2. பிரிவு 112A-ன் கீழ் 1.25 லட்சம் ரூபாய் வரையிலான நீண்ட கால மூலதன ஆதாயம் (LTCG) கொண்டவர்கள்

3. 5,000 ரூபாய் வரை விவசாய வருமானம் உள்ள இந்தியக் குடிமக்கள் மட்டுமே ITR-1 படிவத்தை பயன்படுத்தி வந்தார்கள்.
ஆனால், இனி அப்படி இல்லை. இனிமேல் இரண்டு வீடுகளை சொத்தாக வைத்திருபவர்களும் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஐ.டி.ஆர்-1 படிவத்தில் தாக்கல் செய்யலாம்.
இனி இரண்டு வீடுகளைச் சொத்தாக வைத்திருப்பவர்களும் ஐ.டி.ஆர்-1, 4 படிவத்தில் கணக்குத் தாக்கல் செய்யலாம். ஆனால், இனி சொத்தின் கூட்டுரிமை (Co-ownership), வாடகைதாரர்களின் விவரங்கள் போன்ற தகவல்களை குறிப்பிட வேண்டும்.
> புதிய படிவங்களில், தனிநபரின் தகவல் பகுதியில், மாற்று முகவரியைக் (Secondary address) குறிப்பிடுவதற்கான புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.
> அடுத்ததாக, வரி விகிதங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் மூலதன ஆதாயப் பகுதியும் (Capital gains schedule) தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது.
> நன்கொடை தொடர்பான விவரங்களைக் குறிப்பிடும் முறை முன்பு இருந்ததை விட கடுமையாக்கப்பட்டுள்ளது.
> Schedule 80G-ன் கீழ், இனி UPI அல்லது வங்கியின் பரிவர்த்தனை குறிப்பு எண் மற்றும் IFSC குறியீடு போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

> Schedule 80GGC-ன் கீழ் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு, அந்த அரசியல் கட்சியின் பெயர் மற்றும் பான் கார்டு விவரங்களைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
> பிரிவு 112A-ன் கீழ், இந்தியக் குடிமக்கள் தங்களுக்குக் கிடைத்த நீண்ட கால மூலதன ஆதாயத்தை இனி ஐ.டி.ஆர்-1 படிவத்திலேயே காட்டலாம். ஆனால், நீண்ட கால மூலதன ஆதாயத்தின் மூலம் வந்த லாபம் அந்த நிதியாண்டில் ரூ.1.25 லட்சத்தை தாண்டியிருக்கக் கூடாது.
மேலும், முந்தைய கால நஷ்டங்கள் எதையும் இந்த நிதியாண்டு கணக்கில் கொண்டு வந்திருக்கக் கூடாது.
> முதலீடுகளில் நஷ்டம் அடைந்தவர்கள், அதிக லாபம் ஈட்டியவர்கள் அல்லது சிக்கலான முதலீட்டுப் பரிவர்த்தனைகளைக் கொண்டவர்கள் தொடர்ந்து ITR-2 அல்லது பிற பொருத்தமான படிவங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.
> பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், கடன் பத்திரங்கள் அல்லது சொத்துக்களை விற்பனை செய்த முதலீட்டாளர்கள், சொத்தின் தன்மை மற்றும் வரி விதிப்பு முறைக்கு ஏற்ப தங்களின் பரிவர்த்தனைகளைப் பிரித்து, இன்னும் விரிவான விவரங்களை வழங்க வேண்டும்.
> ஐ.டி.ஆர்-3 படிவத்தைத் தாக்கல் செய்யும் வர்த்தகர்களுக்கு (Traders) கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாயையும் லாபத்தையும், பொதுவான வணிக வருமானமாகக் காட்டாமல், இனி தனியாகக் காட்ட வேண்டும்.
> இன்ட்ரா டே (Intraday) வர்த்தகம் மற்றும் இதர வணிகம் சார்ந்த விவரங்களையும் தனித்தனிப் பிரிவுகளில் இன்னும் விரிவாகக் குறிப்பிட வேண்டும்.
> வர்த்தகர்கள் தங்களின் ஐடிஆரில் குறிப்பிடும் எண்கள், புரோக்கர் தரும் அறிக்கைகளுடனும் கணக்குப் புத்தகங்களுடனும் ஒத்துப்போக வேண்டும்.



















