செய்திகள் :

`வெள்ளி, தங்க நிற ஜரிகை பார்டருடன் இலவச சேலை - வேட்டி: முதல்வருக்கு நன்றி" - நெசவாளர்கள் கூட்டமைப்பு

post image

தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (TWAF) சார்பாக முதலமைச்சர் விஜய்-க்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், ``நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வரவிருக்கும் 2027-ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்காகத் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்துப் பொதுமக்களுக்கும் புத்தாடை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இம்முறை 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற வாக்கிற்கேற்ப, புதிய வடிவமைப்பு, புதிய வண்ணம், புதிய அதிக உறுதி மற்றும் தரத்துடன் ஆடைகள் நெய்யப்பட உள்ளன.

கைத்தறி நெசவாளர்கள்
கைத்தறி நெசவாளர்கள்

இத்திட்டத்தின் கீழ் வெள்ளி மற்றும் தங்க நிற ஜரிகை பார்டருடன் கூடிய 1,77,64,000 சேலைகளும், சலவை செய்யப்பட்ட உயர்தரத்துடன் கூடிய புதிய வடிவமைப்பிலான 1,77,22,000 வேஷ்டிகளும் முழுமையாக உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதன் மூலம் நெசவாளர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

மொத்தம் 642 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தில், முதற்கட்டமாக 300 கோடி ரூபாய் முன்பணமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்த மாண்புமிகு கைத்தறித்துறை அமைச்சர் அவர்களுக்கும், துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை நெசவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு; இனியும் ரூ.10 கூடுதலாகப் பெற்றால்..!' - அமைச்சர் விக்னேஷ்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் விலைக்கு மேல் ரூ.10 பெறப்படுவதாக கடந்த திமுக ஆட்சியிலிருந்து குற்றச்சாட்டு தொடர்கிறது. தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதும் இந்த நடைமுறை நிறுத்தப்படும் எனக் கூற... மேலும் பார்க்க

தமிழகத்தில் அதிகரிக்கும் வேலையின்மை... என்ன செய்யப்போகிறது அரசு?

கல்வி தொடங்கி சுகாதாரம் வரைக்கும் வளர்ச்சிப் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது, தமிழ்நாடு. இரண்டு இலக்க விகிதத்தில் வளர்ச்சியை எட்டும் மாநிலம் என்ற பெருமையும் தமிழ்நாட்டுக்கு இருக்கிறது. இத்தனை பெருமி... மேலும் பார்க்க

அரசு வழக்கறிஞர் நியமன விவகாரம்: "நேர்மையாக நடந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்" - நீதிபதிகள் கருத்து

மதுரை மனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான ந... மேலும் பார்க்க

புதிய EPF திட்டம்: எதற்கெல்லாம், எத்தனை முறை பாதியில் பணம் எடுக்க முடியும்?

சமூக பாதுகாப்புச் சட்டம், 2020-ன் கீழ், புதிய 'ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், 2026'-ஐ தற்போது அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு. இது EPF திட்டம், 1952-க்கு மாற்றாகும். இந்தப் புதிய திட்டத்த... மேலும் பார்க்க

PF: இனி ரூ.1,800-க்கு மேல் பிடித்தமாக செய்தாலும், உங்க விருப்பம் தேவை! - தெரிந்து கொள்ளுங்கள்

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு, 'இ.பி.எஃப் திட்டம் 1952'-ஐ மாற்றி, சமூக பாதுகாப்புச் சட்டம் 2020-ன் கீழ் 'ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம் 2026'-ஐ அறிவித்துள்ளது மத்திய அரசு. புதிய திட்ட... மேலும் பார்க்க

அமெரிக்கா: `பிறப்புக் குடியுரிமை' - அதிபரின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; ட்ரம்ப் அதிருப்தி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் அவர் கையெழுத்திட்ட முதன்மை கோப்புகளில் ஒன்று ``அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு பிறப்புரி... மேலும் பார்க்க