செய்திகள் :

`ஹோட்டல் உரிமையாளருக்கு விற்கப்பட்ட சிறுமி' - 5 நாளில் 30 பேரால் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

post image

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனார். அந்த சிறுமி கைவண்டி இழுக்கும் ஒருவரிடம் சிக்கினார். அந்த நபர் அச்சிறுமியை ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் விற்பனை செய்துவிட்டு சென்றுவிட்டார். உடனே ஹோட்டல் உரிமையாளர் அச்சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்ய தொடங்கிவிட்டார். அதோடு பக்கத்து ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் தகவல் கொடுத்து அச்சிறுமியை அந்த ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தார். அச்சிறுமியை 5 நாட்களில் 30 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். அங்கிருந்து தப்பி வந்த சிறுமி இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஹோட்டல் உரிமையாளர்கள் குற்றத்தை மறைக்கவும் முயற்சி செய்துள்ளனர். அச்சிறுமி தெரிவித்த ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ஒரே நேரத்தில் பலர் பாலியல் வன்கொடுமை செய்யும் போது தனக்கு வலி ஏற்பட்டால் உடனே மது கொடுத்து குடிக்க சொன்னதாக தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவோம் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.ருபிந்தர் சிங் தெரிவித்தார். ஸ்ரீகங்காநகர் நகரம் சுற்றுலா மையம் கிடையாது. அப்படி இருந்தும் 150க்கும் அதிகமான சட்டவிரோத ஹோட்டல்கள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அந்த சட்டவிரோத ஹோட்டல்களை மூடவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

`அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை' - வருங்கால கணவனிடம் ரூ.1 கோடியை வாங்கி காதலனிடம் கொடுத்த மணமகள்

புனேயில் கடந்த 18-ம் தேதி ஷியா கோயல் என்ற பெண் தனது வருங்கால கணவர் கேதன் அகர்வாலை தனது காதலன் துணையோடு மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது... மேலும் பார்க்க

`வருங்கால கணவனை எப்படி கொலை செய்தேன்.!' - சம்பவம் நடந்த மலை உச்சிக்கு வந்து செய்து காட்டிய பெண்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த 18ம் தேதி அங்குள்ள லோஹாகட் மலைக்கோட்டையில் ரியஸ் எஸ்டேட் உரிமையாளர் கேதன் அகர்வால் என்பவரை அவரது வருங்கால மனைவி ஷியா கோயலும், அவரது காதலன் சேதன் செளதரியும் சேர்ந்து ... மேலும் பார்க்க

ஆபரேஷன் தூஃபான்: தாய்லாந்திலிருந்து ஹைபிரிட் கஞ்சா கடத்தல்; சர்வதேச கும்பலை கைதுசெய்த கேரள போலீஸ்!

கேரள மாநிலத்தில் ஆபரேஷன் தூஃபான் திட்டத்தின் கீழ் போதைப்பொருள்களுக்கு எதிரான வேட்டை தொடர்ந்து நடந்துவருகிறது. அதன் ஒருபகுதியாக எர்ணாகுளம் மாவட்டம், மாறம்பிள்ளி குன்னுவழிப் பகுதியில் கடந்த புதன்கிழமை ம... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மாயம்; கிணற்றில் காயங்களுடன் உடல் மிதந்ததால் அதிர்ச்சி

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் - செல்வி தம்பதிக்கு சாய்தீப்தி (5), சாரு நித்திகா(5) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். விடுமுறை நாள்களில் ராமநாதபுரம் பசும்பொன் நகரில் உள்ள செல்வியின் தந்தை முத்து முருகன் வீட்டு... மேலும் பார்க்க

முஹர்ரம்: ``15,000 பேரைக் கொல்ல சதி செய்தேன்" - விஷ மாத்திரைகள் விநியோகித்தவர் பரபரப்பு வாக்குமூலம்

மும்பையில் நடைபெற்ற மொஹர்ரம் ஊர்வலத்தின்போது, விஷ மாத்திரைகளை விநியோகம் செய்து ஆயிரக்கணக்கானோரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய நபரை மும்பை காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. ``மொஹர்ரம் ஊர்வலத்தைக்... மேலும் பார்க்க

சேலம் டு ராமநாதபுரம்: பிறந்த‌‌ 7 நாள்களில் பச்சிளம் குழந்தையை விற்ற பெற்றோர்! - வறுமை காரணமா?

சேலம் மாவட்டம், அரியானூர் அருகில் உள்ள சந்தனக்காட்டைச் சேர்ந்த தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். தறிப் பட்டறை தொழில் செய்து வரும் இவர்களால் வறுமையில் குடும்பத்தை நடத்த ம... மேலும் பார்க்க