செய்திகள் :

"15 நாள் ஷூட், பவதாரிணி பாடல்" - பாரதிராஜாவின் கடைசிப் படமான 'தாய் மெய்' குறித்து வசனகர்த்தா சிவாஜி

post image

திரையில் இரு கரங்களைக் கூப்பியபடி கரகர குரலில் பேசிய நம் பாசத்துக்குரிய பாரதிராஜா நம்மிடமிருந்து விடை பெற்று விட்டார்.

தமிழ்த் திரையுலகம் மீளாத் துயரில் விழுந்து கிடக்கிற சூழலில் கடைசியாக அவர் நடித்து இயக்கிய படம் குறித்து அந்தப் படத்தின் வசனகர்த்தா சுருளிப்பட்டி சிவாஜியிடம் பேசினோம்.

''நான் வீதி நாடங்கள்ல நடிச்சிட்டிருந்தவன், திண்டுக்கல்ல ஒரு நாடக மேடையில அவரை முதன் முதலா சந்தித்தேன். முதல் சந்திப்புலயே ‘இவன் என் அப்பன் பெரியகருப்புத் தேவரை நினைவு படுத்திட்டாண்டா’னு என்னைக் கட்டிப் பிடிச்சார்.

அந்த நாள்ல இருந்து அவருடன் பயணிக்கத் தொடங்கினேன். பிறகு டிவியில தெக்கத்திப் பொண்ணு உள்ளிட்ட சில சீரியல்களை அவர் இயக்கினப்ப வசனம் எழுதற வாய்ப்பைத் தந்தார்.

அவருடன் கதை விவாதம், ஷூட்டிங் லொகேஷன் பார்க்கன்னு பல நாள்கள் ராத்திரி பகலா உட்கார்ந்திருந்திருக்கேன். எனக்கு அவர்தான் குரு.

சுருளிபட்டி சிவாஜி பாரதிராஜாவுடன்
சுருளிபட்டி சிவாஜி பாரதிராஜாவுடன்

கடைசியா ’தாய் மெய்’ங்கிற படத்தைத் தொடங்கினார். இயக்கி அவரே முக்கியமான கேரக்டரில் நடித்தார். நான் கதை வசனம், பவதாரிணி நான்கு பாடல்களைப் பாடியிருந்த வேளையில அவங்களும் இறந்துட்டாங்க. தேனி பக்கம் ஷூட்டிங் போனோம்.

பதினைஞ்சு நாள் ஷூட் பண்ணியிருப்போம். ஷூட் போயிட்டிருக்கும் போதே தேனியிலயே குளிக்கிறபோது வழுக்கி விழுந்துட்டார். அதனால சிகிச்சைக்கு சென்னை வந்துட்டதால ஷூட்டிங்கை நிறுத்திட்டோம்’’ என்றவரிடம் தாய்மெய் கதை குறித்துக் கேட்டோம்.

‘’பையன் வளர்ந்து கல்யாணம்லாம் பண்ணின பிறகு அம்மா கர்ப்பமாகுறாங்க என்ற கோணத்துல போன ஒரு கதை. கடைசியில பையனுக்கு அவரே கொல்லி வைக்கிற மாதிரி கதை முடியும். இப்படியொரு கதையை அவர் தயார் செய்து படத்தைத் தொடங்கின கொஞ்ச நாள்லயே அவர் பையன் மனோஜ் இறந்துட்டார்.

மனோஜ் மறைவுக்குப் பிறகு ஆள் மனசளவுலயும் உடைஞ்சு போனதால அந்தப் படமும் அப்படியே நின்னுடுச்சு.

அந்தப் பதினைந்து நாள் ஷூட்டிங் நினைவுதான் இப்ப கண்முன் வந்து போகுது’’ எனக் கண் கலங்குகிறார் சிவாஜி.  

Jayaram: "அப்போ நான் அவர்கிட்ட போய் மன்னிப்புக் கேட்டேன்'' - தன் காதல் கதையைப் பகிர்ந்த ஜெயராம்

நடிகர் ஜெயராம் நடிப்பில் கடந்த வாரம் 'பரிமளா & கோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அப்படத்திற்காக நம் சினிமா விகடன் சேனல் நடத்திய பிரத்யேக 'விகடன் பிரஸ் மீட்' நிகழ்வில் ஜெயராம் கலந்துகொண்டு ... மேலும் பார்க்க

Nooru Saami: "பசியோட இருக்காத, பண உதவி பண்றேன்னு..." - ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Nooru Saami: "'உன்னை பார்க்கும்போது ரவுடி மாதிரி தெரிஞ்ச'னு சசி சார் சொன்னார்!" - பா. ரஞ்சித்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் - படமாக பாஸாகிறதா?

பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் - வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்... மேலும் பார்க்க

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்க... மேலும் பார்க்க

Bharathiraja: "துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி" - பாரதிராஜா மனைவி சந்திர லீலா

இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலைய... மேலும் பார்க்க