செய்திகள் :

``4 ஆண்டுகளாக இதைத்தான் சொல்லி வருகிறார்; வாய்ப்பில்லை" - ஓபிஎஸ்-க்கு பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி!

post image

தேனியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது அ.தி.மு.க அடிப்படை தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பாதுகாக்கின்ற கழகம். அதற்காகவே சட்டப் போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். தனிக்கட்சி துவங்குவது என்றோ, தேர்தலில் போட்டியிடுவது என்றோ எந்த முடிவையும் இன்னும் நாங்கள் எடுக்கவில்லை.

நாங்கள் ஏற்கெனவே கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் எனப் பேசியிருந்தோம். அதில் அவருக்கு மாற்றுக்கருத்து இல்லை எனக் கருதுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் அதை சாத்தியமாக்கலாம். நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா எனக் கேட்டுச் சொல்லுங்கள்" என்றார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து அ.தி.மு.க-வில் இணையும் தொண்டர்கள் இணைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அதைத் தொடர்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், ஓ.பன்னீர் செல்வம் பேட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``அவர் 4 ஆண்டுகளாக இதைத்தான் சொல்லி வருகிறார். பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஓ.பன்னீர் செல்வம் அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை." எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' - 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில் வசித்து வரும் 138 அருந்ததியர் சமூக குடும்பங்களுக்கு அரசால் பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை அந்த பட்டாக்க... மேலும் பார்க்க

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை தேர்தலுக்கு தயாராகி வர... மேலும் பார்க்க

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது!" - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்... மேலும் பார்க்க

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கரு... மேலும் பார்க்க

"அந்த போன்கால் வரட்டும்!" - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாள... மேலும் பார்க்க

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி... மேலும் பார்க்க