கிரிக்கெட் மட்டை, கையுறையில் மறைத்து ரூ.1,700 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த...
4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கல்லால் அடித்துக் கொலை... சாணத்தில் உடலை புதைத்த 65 வயது முதியவர்!
மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள நஷ்வராபூர் என்ற கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா வீட்டிற்கு 4 வயது சிறுமி ஒருவர் வந்திருந்தாள். விடுமுறைக்காக வந்திருந்த அச்சிறுமி வெளியில் விளையாடச் சென்ற போது காணாமல் போனார். இதனால் சிறுமியின் உறவினர்கள் அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்துவிட்டு கிடைக்காத நிலையில், இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் விரைந்து வந்து சிறுமியை தேட ஆரம்பித்தனர். அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அருகில் வசிக்கும் 65 வயது முதியவர் அச்சிறுமியை அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து அந்த முதியவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அருகில் உள்ள மாட்டு கொட்டகைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு வைத்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அவளை கல்லால் அடித்துக் கொலைசெய்துள்ளார். பின்னர் உடலை அங்கு இருந்த மாட்டுச் சாணக் குவியலுக்குள் புதைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார். மாட்டுச் சாணத்திற்குள் புதைக்கப்பட்டு இருந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து கேள்விப்பட்டதும் உள்ளூர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் கடுமையாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு இச்சம்பவத்தைக் கண்டித்து நஷ்ராபூரில் உள்ளூர் பந்த் அனுசரிக்கப்பட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இவ்வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் சிறுமியின் உறவினர்களிடம் உறுதியளித்துள்ளார்.



















