செய்திகள் :

Aishwarya Rai: ``ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கடவுள்" - புட்டபர்த்தியில் ஐஸ்வர்யா ராய் உரை!

post image

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நேற்று சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு கிஞ்சரபு, ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகை ஐஸ்வர்யா ராய், ``மனித குலம் என்ற ஒரே ஒரு சாதிதான் இருக்கிறது. அன்பின் மதம் ஒன்றே மதம். இதயத்தின் மொழிதான் நம் ஒரே ஒரு மொழி. ஒரே கடவுள் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். இதுதான் சாய்பாபாவின் போதனை.

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்

நம்முடன் இணைந்து இந்த சிறப்பு நிகழ்வை கௌரவித்ததற்கு பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல, தாக்கத்தையும் ஊக்கத்தையும் தரும், உங்கள் ஞானமான வார்த்தைகளைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

உங்கள் வருகை இந்த நூற்றாண்டு விழாவிற்கு புனிதத்தையும் உத்வேகத்தையும் சேர்க்கிறது. மேலும் உண்மையான தலைமை என்பது சேவை செய்வதுதான். மனிதனுக்குச் சேவை செய்வது கடவுளுக்குச் செய்யும்சேவை என்ற சுவாமியின் செய்தியை நினைவூட்டுகிறேன்.

ஸ்ரீ சத்ய சாய் பாபா அடிக்கடி ஐந்து விஷயங்கள குறித்துப் பேசியிருக்கிறார். அர்த்தமுள்ள, நோக்கமுள்ள, ஆன்மீக ரீதியாக அத்தியாவசிய குணங்கள்: ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பக்தி, உறுதிப்பாடு, பகுத்தறிவு" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``தமிழ்நாட்டிலும் பீகாரின் காற்று!" - கோவை இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் மூன்று நாள்கள் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அம... மேலும் பார்க்க

``இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவையில்லை" - RSS மோகன் பகவத்

இந்தியா இந்துக்களின் தேசம், இந்து ராஷ்டிரம், பாரதம் என்று ஆர்.எஸ்.எஸ் தொடர்ச்சியாகக் கூறி வருகிறது.இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் வரலாற்றில் 3 முறை, காந்தி படுகொலை, எமர்ஜென்சி, பாபர் மசூதி இடிப்பு ஆகிய ... மேலும் பார்க்க

``குண்டும் குழியுமான சேலம் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு எப்போது?''- மக்களின் அவசரக் கோரிக்கை

சேலம் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அண்மையில் ஆர்.சி.செட்டிப்பட்டி மற்றும் காமலாபுரம் சாலை பகுதிகளில் என இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப... மேலும் பார்க்க

'முதல்வர் பயணித்த வெளிநாடுகள் 7; ஈர்க்கப்பட்ட முதலீடு 0’ - அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டும் அன்புமணி

தமிழக அரசின் தொழில் முதலீடுகள் சார்ந்து கேள்வி கேட்டு, 'திமுக அரசின் பொய் முதலீடுகள்' என்ற பெயரில் பா.ம.க தலைவர் அன்புமணி ஆவணம் ஒன்றை இன்று சென்னையில் வெளியிட்டிருந்தார்.அன்புமணிஅந்த ஆவணத்தை வெளியிட்ட... மேலும் பார்க்க

இராமேஸ்வரம்: `இந்த அவல நிலைக்கு யார் பொறுப்பு?’- பள்ளி மாணவி குத்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் கண்டனம்

இராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காதலிக்க மறுத்ததால் இளைஞர் கொலை செய்ததாகக் கூறப... மேலும் பார்க்க