செய்திகள் :

"S.I.R என்பது குடியுரிமை, எதிர் வாக்குகளை நீக்கும் பாஜகவின் செயல்திட்டம்" - திருமா

post image

'S.I.R' எனும் சிறப்புத் தீவிரத் திருத்தம் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு செயல்படுத்தப்படுவதை எதிர்த்து திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்காத தவெக தனியாக 'S.I.R'யை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இப்போது வி.சி.க, திருமாவளவன் தலைமையில் சென்னையில் நவ 24ம் தேதி 'S.I.R'யை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது.

SIR
SIR

இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் எம்.பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன், "'S.I.R' வேண்டாம் என்பதை முன்வைத்து விசிக சார்பில் நவ 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். S.I.R என்பது பாரதிய ஜனதா கட்சியும், தேர்தல் ஆணையமும் சேர்ந்து நடத்தும் ஒரு கூட்டுச் சதி.

அவர்கள் இதை, குடியுரிமையைப் பறிப்பதற்கான செயல்திட்டமாகவும், எதிர் வாக்குகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான செயல்திட்டமாகவும் திட்டமிட்டு வடிவமைத்திருக்கிறார்கள். இது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை.

திருமாவளவன்
திருமாவளவன்

'S.I.R' யை உடனே நிறுத்திவிட்டு, இதற்குமுன் பயன்படுத்திய 'SR (Electoral Roll Summary Revision)' என்ற முறையையே தேர்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். 'S.I.R' என்பது குடியுரிமையைப் பறிக்கும் CAA சட்டத்தை செயல்படுத்தும் சதிச்செயலுக்கான இன்னொரு வடிவம்தான்

பீகார் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த தேசத்திற்கே அச்சுறுத்தல்தான். ஜனநாயகத்தைக் கொன்று புதைக்கின்ற ஒரு சதித்திட்டத்தின் விளைச்சல்தான்." என்று பேசியிருக்கிறார் விசிக தலைவர் திருமா.

விருதுநகர்: ``வாரச்சந்தைக்கு நிரந்தர இடம் வேண்டும்'' - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

விருதுநகர், ஆவியூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகள் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட ஏ.ஏ.சாலையில் திங்கள்தோறும் வாரச்சந்தை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். அப்போது, அங்கு வியாபார... மேலும் பார்க்க

"ஆணவம் வேண்டாம் உதயநிதி; நீங்களே வாரிசை வைத்து வந்தவர்" - தமிழிசை செளந்தரராஜன் காட்டம்!

திமுக தொடங்கப்பட்டு 75 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் 'தி.மு.க 75 அறிவுத்திருவிழா' என்னும் நிகழ்ச்சி நவம்பர் 8-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 16- ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்ந... மேலும் பார்க்க

டெல்லி குண்டு வெடிப்பு: ``எந்த ஆதாரமும் இல்லை'' - 3 மருத்துவர்களை விடுவித்த NIA

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை (10-ம் தேதி) நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தொடர்பு... மேலும் பார்க்க

மதுரை: ``குப்பை மேடாக காட்சியளிக்கும் கிருதுமால் நதி; நோய் பரவும் அபாயம்'' - மக்கள் அச்சம்

மதுரை சப்பாணி கோயில் தெரு, மீனாட்சி தியேட்டர் அருகில் உள்ள கிருதுமால் ஆற்றின் அருகில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆற்றின் குப்பைகளை இருபுறமும் குவித்து வைத்து சென்... மேலும் பார்க்க

கோவை: 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா - எப்படி இருக்கு? | Photo Album

கோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்கா... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி: புதர் மண்டி, சிதிலமடைந்து காட்சியளிக்கும் ஏரிப் பூங்கா - புனரமைப்பு செய்யப்படுமா?!

சேலம் மாவட்டம், மூன்று‌ ரோடு அருகில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு பள்ளப்பட்டி ஏரிப் பூங்கா தற்போது பழுதடைந்து புனரமைப்பு பணிகளை எதிர்நோக்கி காத்திருக்கிறது.பள்ளப்பட்டி ஏரியை... மேலும் பார்க்க