செய்திகள் :

Sachin Tendulkar: ``பாபாவின் ஆசீர்வாதத்தால் மட்டுமே சாத்தியமானது" - புட்டபர்த்தியில் சச்சின் உரை

post image

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நேற்று சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு கிஞ்சரபு, ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சச்சின் டெண்டுல்கர், ``பல உலகக் கோப்பைகளில் விளையாடிய நான், 2011-ம் ஆண்டு விளையாடிய உலகக் கோப்பைதான் என் இறுதியானது. அந்த போட்டிக்காக நாங்கள் பெங்களூருவில் ஒரு முகாமில் இருந்தபோது, ​​`பாபா தனது புத்தகத்தை உங்களுக்கு அனுப்பியிருக்கிறார்' என ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

Sachin Tendulkar - Puttaparthi
Sachin Tendulkar - Puttaparthi

அந்த நிமிடம் நான் சிரித்துக்கொண்டிருந்தேன். அப்போதே, நான் விளையாடப் போகும் உலகக் கோப்பை எங்களுக்கு ஒரு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். அந்தப் புத்தகம் எனக்கு அந்த நம்பிக்கையையும், அந்த உள் வலிமையையும் அளித்தது. அந்தப் புத்தகம் எனது நிலையான தோழனாகவே மாறியது.

அதன் பிறகு 2011-ம் ஆண்டு மும்பையில் இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடி அந்த கோப்பையை வென்றோம். அப்போது என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். முழு தேசமும் அந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் பொன்னான தருணம்.

முழு தேசமும் ஒன்றுகூடி கொண்டாடிய எனது வாழ்க்கையில் இதுபோன்ற எதையும் நான் அனுபவித்ததில்லை என்று நினைக்கிறேன். அது எங்கள் நலம் விரும்பிகள் மற்றும் எங்கள் குருக்களின் ஆசீர்வாதங்களாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, பாபாவின் ஆசீர்வாதங்களாலும் மட்டுமே சாத்தியமானது" என்றார்.

Veeraswamy: லண்டனில் 100 ஆண்டுகளாக இயங்கும் வீராசாமி உணவகம் - அகற்றக்கோரும் நிறுவனம் - காரணம் என்ன?

லண்டனில் உள்ள மிகப் பழமையான உணவகங்களில் ஒன்று வீராசாமி உணவகம். ஏப்ரல் 1926 முதல் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக மிச்செலின்-ஸ்டார் உணவகமாக செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் கிரவுன் எஸ்டேட் (Crown Estate) எனு... மேலும் பார்க்க

"THAR கார் வைத்திருப்பவர்கள் பித்துப்பிடித்தவர்கள்"- ஹரியானா DGP-யின் கருத்து வைரல்

ஹரியானா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் சிங், மகிந்திராவின் தார் (THAR) காரை வைத்திருப்பவர்கள் எல்லாம் பித்துப்பிடித்தவர்கள் வெறிபிடித்தவர்களாக (Crazy) இருப்பார்கள் எனக் கூறியுள்ளது சலசலப்... மேலும் பார்க்க

175 மில்லியன் டாலர்களுக்கு அதிபதி; இருந்தும் ஊபர் ஓட்டுவது ஏன்? - நெகிழ வைக்கும் காரணம்!

பிஜி நாட்டில் தொழில்முனைவோர் ஒருவர் ஊபர் ஓட்டுநருடன் நடத்திய உரையாடல் வைரலாகியிருக்கிறது. நவ் ஷா என்ற தொழில்முனைவோர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில், ஊபர் வாகனத்தை ஓட்டும் வயதான ஓட்டுநர், ஆண்டு... மேலும் பார்க்க

`வேணாம் நிறுத்துங்க!' - பெண்ணிடம் கெஞ்சிய பயணிகள்; வைரலான வீடியோ

ரயில் பயணத்தின்போது பெண் ஒருவர் கண்ணாடியை உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தூர் - டெல்லி ரயிலின் ஏசி இருக்கையில் இருந்த அந்த பெண், தனது பணப்பை (பர்ஸ்) காணாமல் போய்விட்டதாகவும் காவல்துற... மேலும் பார்க்க

ரவிக்கை தைப்பதில் தாமதம்; `டெய்லருக்கு ரூ.7000 அபராதம்' - நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் சேலைக்கு உடுத்தும் ரவிக்கையை உரிய நேரத்தில் தைத்துக் கொடுக்காத தையல்காரருக்கு 7000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்.பூனம்பென் பரியா என்ற... மேலும் பார்க்க

தென்காசி: `செரிமானக் கோளாறு' - காட்டை விட்டு வெளியே வந்த யானைக்கு வனத்துறை சிகிச்சை

தென்காசி வன கோட்டம் கடையநல்லூர் வனச்சரகம், சொக்கம்பட்டி பிரிவுக்கு அருகில் வயது முதிர்ந்த யானையின் நடமாட்டத்தை 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நேற்று காலை சொக்கம்பட்டி காவல் ... மேலும் பார்க்க