செய்திகள் :

America: தப்பிய ஆய்வகக் குரங்குகள்; பிள்ளைகளைக் காக்க குரங்கை கொன்ற தாய்; சர்ச்சையின் பின்னணி என்ன?

post image

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில், ஆய்வகத்திலிருந்து தப்பித்த குரங்கை ஒரு பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தைகளின் பாதுகாப்புக்காகவே இந்தச் செயலைச் செய்ததாக அவர் கூறியிருக்கிறார்.

மிசிசிப்பியின் ஹைடெல்பெர்க் நகருக்கு அருகே வசிக்கும் ஜெசிகா பாண்ட் பெர்குசன் என்ற பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது வீட்டுத் தோட்டத்தில் ஒரு குரங்கு ஓடுவதைக் கண்டார்.

தனது துப்பாக்கியுடன் வெளியே வந்த ஜெசிகா, குரங்கு இருப்பதைக் கண்டார். ஆய்வகத்திலிருந்து தப்பித்த குரங்குகளிடம் ஆபத்தான நோய்க்கிருமிகள் இருப்பதாக ஏற்கெனவே உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் அவர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறினார்.

monkey

இதுகுறித்து ஜெசிகா கூறுகையில், "எந்தவொரு தாயும் தனது பிள்ளைகளைக் காக்க என்ன செய்வாரோ, அதைத்தான் நானும் செய்தேன். நான் சுட்டதும் அது அங்கேயே நின்றது. மீண்டும் சுட்டேன். அது பின்வாங்கி கீழே விழுந்தது," என்று தெரிவித்தார்.

ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான ஜெசிகா அந்தக் குரங்கு வேறு ஒருவரின் குழந்தையைத் தாக்கியிருந்தால், அதைத் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பு தனக்கும் இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

குரங்குகள் தப்பியது எப்படி?

கடந்த வாரம் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையத்திலிருந்து 21 ரீசஸ் வகை குரங்குகளை ஏற்றிச் சென்ற ஒரு லாரி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, மூன்று குரங்குகள் தப்பி ஓடிவிட்டன. இந்தக் குரங்குகளுக்கு ஹெபடைடிஸ் சி மற்றும் கோவிட்-19 உள்ளிட்ட பல வைரஸ் தொற்றுகள் இருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

விபத்திலிருந்து தப்பித்த மூன்று குரங்குகளில் ஒன்றுதான் தற்போது ஜெசிகாவால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங... மேலும் பார்க்க

ரூ.40,000-க்கு ஏலம் போன ஒரு பப்பாளி பழம் - கர்நாடக கோயிலில் நடந்தது என்ன?

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் அமைந்துள்ள கனசகிரி மகாதேவா கோயிலில் நடந்த ஏலத்தில் ஒரு பப்பாளி பழம் ரூ.40,000-க்கு ஏலம் போயியுள்ளது. சதாசிவ்காட் பகுதியில் உள்ள கனசகிரி ... மேலும் பார்க்க

மும்பை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம், ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து; பயணிகள் 2 பேர் பலி -என்ன காரணம்?

மும்பையில் புறநகர் ரயில் சேவை மக்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. புறநகர் ரயில் போக்குவரத்து நின்றுவிட்டால், ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்துவிடும்.மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில், புறநகர் ரயிலி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் அழகு ரகசியம் கேட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனை - அவரின் பதில் என்ன தெரியுமா?

வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து தனது பாராட்டுகளை... மேலும் பார்க்க

மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்டா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளி... மேலும் பார்க்க

தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் கா... மேலும் பார்க்க