செய்திகள் :

Credit Card: Due date முடிந்து 3 நாள்கள் ஆகியும் பில் கட்டவில்லையா? இனி 'நோ' கவலை; 'நோ' அபராதம்!

post image

டியூ தேதி முடிந்தும் கிரெடிட் கார்டு பில் கட்டவில்லை என்றால், லேட் பேமெண்ட் உள்ளிட்ட அபராதம் பொதுவாக எகிறிவிடும்.

இதைத் தளர்வுப்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி புதிய நடைமுறை ஒன்றை அறிவித்துள்ளது.

புதிய நடைமுறையின் படி, கிரெடிட் கார்டு டியூ தேதி முடிந்த அடுத்த மூன்று நாள்களுக்கு எந்த அபராதமும், லேட் பேமெண்ட்டும் இல்லாமல், பில்லைக் கட்டிக்கொள்ளலாம்.

மூன்று நாள்களைத் தாண்டினால்தான், லேட் பேமெண்ட் கட்டணம் உள்ளிட்ட அபராதங்கள் பாயும்.

Credit Card - கிரெடிட் கார்டு
Credit Card - கிரெடிட் கார்டு

அபராதம் எப்படி கணக்கிடப்படும்?

மேலும், லேட் பேமெண்ட் கட்டணம் மொத்த கிரெடிட் கார்டு பில்லுக்கும் வசூலிக்கப்படாது. அதாவது, டியூ தேதிக்கு முன்னரே, நீங்கள் பகுதி பில்லைக் கட்டியிருக்கலாம்.

டியூ தேதி + மூன்று தேதிகளுக்குப் பிறகும், மீதி தொகையைக் கட்டவில்லை என்று வைத்துக்கொள்வோம்.

இந்தச் சூழலில், எத்தனை ரூபாய் பாக்கி தொகையைக் கட்டவில்லையோ, அதற்கு மட்டுமே லேட் பேமெண்ட்டை வசூலிக்க வேண்டும். மொத்த கிரெடிட் கார்டு பில் தொகைக்கும் லேட் பேமெண்ட் வசூலிப்பது புதிய தளர்வின் படி கிடையாது.

ஆனால், இதில் ஒரு செக் உண்டு. டியூ தேதி முடிந்து மூன்று நாள்களுக்குப் பிறகும், கட்டணம் செலுத்தவில்லை என்றால்தான், லேட் பேமெண்ட் உள்ளிட்ட அபராதங்கள் வசூலிக்கப்படும்.

ஆனால், அந்த அபராதத் தொகை டியூ தேதியில் இருந்தே கணக்கிடப்படும்.

இந்தத் தளர்வுகள் 2027-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.

Paytm Payments வங்கியின் லைசன்ஸை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது ஏன்? 'அந்த' 4 காரணங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி Paytm பேமென்ட் வங்கியின் வங்கி லைசன்ஸை இன்று ரத்து செய்துள்ளது. பேடிஎம் நிறுவனம் டிஜிட்டல் மோடில் வங்கியாக இயங்கி வந்தது. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேடிஎம் பேமென்ட் வங்கி பெற்ற ல... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு கீழ் ரெகுலர் பேமென்ட் ஏதாவது இருக்கா? - இனி OTP கிடையாது - இது இப்போதே அமல்!

திரும்ப திரும்ப குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்யும் பேமென்ட்டுகளை எளிதாக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி நடைமுறை ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. யு.பி.ஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, ம... மேலும் பார்க்க

தொடரும் தொழிலதிபர்களின் வங்கி மோசடிகள், முடிவுக்கு வராத வழக்குகள்... இதற்கு இல்லையா ஒரு ‘END’?

கார்ப்பரேட்டுகளுக்கும், பல தொழிலதிபர்களுக்கும் கொடுத்த ரூ.9.75 லட்சம் கோடி கடனை வங்கிகள் சமீபத்தில் ‘ரைட் ஆஃப்’ செய்தது அதிர்ச்சியளித்தது. தற்போது, ‘அனில் அம்பானி வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த தொ... மேலும் பார்க்க

கிரெடிட் கார்டு கடனே அல்ல, 'கைமாத்து'; 'இந்த' லிமிட் நல்லது #CreditCard A-Z | பணம் வளர்ப்போம்

நாள் 3'கற்றது கை மண் அளவு... கல்லாதது உலகளவாச்சே?' - கிரெடிட் கார்டுகளைப் பற்றி தெரிந்துகொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. அவற்றை விளக்குகிறார் முன்னாள் வங்கியாளர் மற்றும் செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் மோகன... மேலும் பார்க்க

15 வருசமா கூட இருக்கும் நண்பன்; அவனைத் தெரிஞ்சுக்க வேண்டாமா?#CreditCard A-Z | 5 நாள்கள் 1 கான்செப்ட்

ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இந்த வாரம் திங்கட்கி... மேலும் பார்க்க

ஓராண்டிற்கு வங்கிக் கணக்கில் எவ்வளவு ரூபாயை பணமாகச் செலுத்தலாம்? - RBI சொல்வது என்ன?

டிஜிட்டல் இந்தியாவில் பெரும்பாலான இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது. அந்த வங்கிக் கணக்கில் சிலர் லட்சக் கணக்கில் பணம் வைத்திருக்கிறார்கள்... சிலரோ சில நூறுகளை மட்டும் வைத்திருக்கிறார்கள். இதெல... மேலும் பார்க்க