செய்திகள் :

Doctor Vikatan: பால் குடித்தால் அல்சர் பாதிப்பு சரியாகுமா, காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டுமா?

post image

Doctor Vikatan: என் வயது 37. எனக்கு கடந்த ஆறு மாதங்களாக அல்சர் பாதிப்பு இருக்கிறது. எந்த உணவு சாப்பிட்டாலும் வயிற்று வலி அதிகரிக்கிறது. இதை எப்படித் தடுக்கலாம்.... அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் பால் குடித்தால் வலி குறையும் என்பது உண்மையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்.

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

அல்சர் பாதிப்பு உள்ளவர்கள்  முதலில் நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் தவறாமல் சாப்பிட வேண்டியது அவசியம். அதேபோல், ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீரை இடைவெளியோடு பருக வேண்டும். அதாவது,  இரண்டிரண்டு டம்ளர்களாக காலை, முற்பகல், பிற்பகல், மாலை எனப் பிரித்துக் குடிக்கலாம். 

அல்சர் பாதிப்பு உள்ளவர்கள், உணவில் காரம், புளிப்பு மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். நிறைய பேருக்கு இப்போது நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் பழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். இட்லிப் பொடி, ஊறுகாய், வத்தக்குழம்பு, காரக்குழம்பு, கிரேவி மற்றும் குருமா போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

புளி சாதம், லெமன் சாதம், லெமன் ஜூஸ், சாத்துக்குடி, ஆரஞ்சு, புளித்த மோர், தயிர், நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கபசுர குடிநீர் போன்றவை வயிற்றுப் புண்ணை அதிகப்படுத்தும் என்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும். 

அப்பளம், வத்தல், சிப்ஸ், வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா மற்றும் பிரியாணி உள்ளிட்ட அனைத்து வறுவல் மற்றும் பொரியல் வகைகளும் வயிற்றைப் புண்ணாக்கலாம் என்பதால் இவற்றையும் சாப்பிட வேண்டாம். 

அப்பளம், வத்தல், சிப்ஸ், வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா மற்றும் பிரியாணி உள்ளிட்ட அனைத்து வறுவல் மற்றும் பொரியல் வகைகளும் வயிற்றைப் புண்ணாக்கலாம்

மன அழுத்தம் (Stress), அதிகப்படியான கவலை மற்றும் சரியான நேரத்திற்குத் தூங்காமல் இருப்பது அமிலத்தன்மையை (Acidity) அதிகரித்து வயிற்றுப் புண்களை உண்டாக்கலாம். எனவே, மனதை அமைதியாக வைத்துக்கொள்வதும், போதுமான நேரம் தூங்குதும் அவசியம்.

பால் குடிப்பது அல்சருக்கான நிரந்தர மருந்தல்ல. அந்த நேரத்தில் ஏற்படும் வலியைப் போக்குவதற்கு மட்டுமே பால் உதவலாம், அது ஒரு மாற்று மருந்து கிடையாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Doctor Vikatan: மாரடைப்பு அறிகுறிகளை உணரும்போது எந்த மாத்திரையை எவ்வளவு எடுக்க வேண்டும்?

Doctor Vikatan: மாரடைப்பு அறிகுறிகளை உணரும்போது குளோபிடோக்ரல், ஆஸ்பிரின் போன்ற சில மாத்திரைகளை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். சில விதமான மாரடைப்புக்கு நைட்ரேட் மாத்திரையைக் கொடுக்கக்கூடாது என்கிறார்... மேலும் பார்க்க

Doctor Vikatan: அசைவம் சாப்பிடாமலும் அதிகரிக்கும் கொழுப்பு... குறைப்பது சாத்தியமா?

Doctor Vikatan:நான் அசைவ உணவுகளே சாப்பிடுவதில்லை. ஆனாலும் எப்போது பிளட் டெஸ்ட் செய்தாலும் எனக்கு கொழுப்பு (Cholesterol) அதிகமாக இருப்பதாகவே ரிப்போர்ட்டில் வருகிறது. இதற்கு என்ன காரணம்... அதிகப்படியான ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிரசவித்த பெண்களுக்கு பத்திய உணவு... ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தாதா?

Doctor Vikatan:பிரசவத்திற்குப் பிறகு கிராமங்களிலும் நகரங்களில் சிலரும் பெண்களுக்கு பத்தியச் சாப்பாடு கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பத்தியச் சாப்பாடு கொடுப்பது பிரசவித்த பெண்களுக்கு உண்மையிலே... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஏசி அறையில் வேலை... சரும வறட்சி, தொடர் தும்மல்... தப்பிப்பது எப்படி?

Doctor Vikatan: ஏசி அறையிலேயே 8 மணி நேரம் வேலை செய்யும் எங்களைப் போன்ற ஐடி ஊழியர்களுக்கு, அடிக்கடி சருமத்தில் வறட்சியும் தும்மலும் ஏற்படுவது ஏன்.. இதிலிருந்து எப்படித் தப்பிப்பது?பதில் சொல்கிறார் இங்க... மேலும் பார்க்க

எல்-நினோ தாக்கம்... அதிகரிக்கும் மாரடைப்பு நிகழ்வுகள்! - பாதுகாத்துக்கொள்வது எப்படி? | El Nino

பொதுவாக குளிர்காலத்தில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் அதிகமாக ஏற்படும் என்கின்றன புள்ளி விவரங்கள். ஆனால் சமீபமாக கோடைக்காலத்திலும் இந்த பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கி... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது சரியா?

Doctor Vikatan: குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதை ஒரு வயது வரை தவிர்க்க வேண்டும் என்று பெரும்பலான மருத்துவர்கள்சொல்வதைக் கேட்கிறோம். தாய்ப்பால் இல்லாத நிலையில் பசும்பால் அதற்கான மாற்றாகாதா.... அதைக் ... மேலும் பார்க்க