”2 ஊற்று கிணறுகள், 300 பனை மரங்கள் அழிப்பு; யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள்!"- போ...
Hansika Motwani: "தவறான ரயிலில் பயணிக்க முடியுமா?" - விவாகரத்து குறித்து மனம் திறந்த ஹன்சிகா
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கும் சோஹேல் கதுரியா என்பவருக்கும் 2022-ம் ஆண்டு ஜெய்பூர் அரண்மனையில் கோலாகலமாக திருமணம் நடந்தது.
ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஹன்சிகா-சோஹேல் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து இருவரும் மும்பை பந்தாரா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தனர். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 11-ம் தேதி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இருவர் தரப்பிலும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில், சமீபத்தி ஹன்சிகா தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார்.
அதில், ``மக்கள் எப்போதும் பரபரப்பான செய்திகளை எதிர்பார்ப்பார்கள். அதுபோன்றதொரு செய்தி என் மூலம் அவர்களுக்கு தலைப்புச் செய்தியளவு கிடைத்தது. அதற்கு பிறகு, அது குறித்து நான் என்ன கருத்துக் கூறுகிறேன் என எதிர்பார்ப்பார்கள்.
எனது திருமண வாழ்வில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து நான் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இனிமேலும் அதைப்பற்றிப் பேசப்போவதில்லை. ஏனெனில் அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல.
எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தவறான ரயிலில் ஏறிவிட்ட பிறகு, அதில் பயணித்துத் துன்பப்படுவதை விட, அந்த ரயிலிலிருந்து இறங்கிவிடுவதுதான் சிறந்தது. நான் இயல்பாகவே மிகவும் மகிழ்ச்சியான, கலகலப்பான சுபாவம் கொண்டவள்.
அப்படிப்பட்ட நான் மிகவும் இருண்ட மனநிலையில் இருந்ததை என் அம்மாவும், சகோதரனும் நேரில் பார்த்திருக்கிறார்கள். `இதில் உனக்கு மனநிறைவு அல்லது சௌகரியம் இல்லை என்றால், அதில் தொடர்ந்து பயணிக்க வேண்டாம்' என எனக்கு உறுதுணையாக நின்றார்கள். எனவே, 'நீ என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு நாங்கள் துணை நிற்போம்' என்று கூறினார்கள்.

உண்மையாகச் சொல்லப்போனால், இன்றுவரை, எங்கள் இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அதுவே மிகச் சிறந்தது என நினைக்கிறேன். இரண்டு நபர்களுக்கு இடையில் நடக்கும் விஷயங்கள் அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என்று நான் எப்போதும் கூறுவதுண்டு.
அதைப் பற்றி வேறொருவர் கருத்து தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை. எனது குடும்பத்தாரிடமிருந்து எனக்கு அளவற்ற ஆதரவு கிடைக்கிறது. எனக்கு எந்தவிதமான வருத்தங்களும் இல்லை. நான் இப்போது இருக்கும் நிலையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
















