செய்திகள் :

Indigo: ``விமான ஊழியர்களிடம் கனிவாக நடந்துக்கோங்க, ஏன்னா'' - பயணிகளுக்கு கோரிக்கை வைத்த சோனு சூட்

post image

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம், சமீப காலமாக விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால் தான் இண்டிகோ நிறுவனம் தடுமாறி வருகிறது என கூறப்பட்டது.

இதனையடுத்து, “புதிய விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளையும், விமான நிறுவனத்தின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப் பெறுகிறோம்” என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இண்டிகோ நிறுவனம்
இண்டிகோ நிறுவனம்

பிறகு, இண்டிகோ நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பெர்ஸ் விமான சேவையின் பாதிப்புக்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.

மேலும், டிசம்பர் 10-15 தேதிகளுக்குள் இண்டிகோ நிறுவனத்தின் சேவை இயல்புநிலைக்கு திரும்பும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் சோனு சூட், இண்டிகோ நிறுவனத்தின் ஊழியர்களிடம் பயணிகள் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என தனது எக்ஸ்தளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பேசிய அவர், “இண்டிகோ விமான தாமதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் ஒரு சிறிய செய்தியை சொல்ல விரும்புகிறேன். என் குடும்பத்தினரும் விமானத்தில் பயணம் செய்தனர்.

அவர்களும் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது. பின்னர் விமானம் புறப்பட்டு, அவர்கள் தங்கள் இலக்கை சென்றடைந்தனர். இருப்பினும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என புரிகிறது. ஆனால், இண்டிகோ விமான ஊழியர்களிடம் மக்கள் கோபமாக கத்துவது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

விமானம் தாமதமாகும்போது பயணிகள் கோபமடைவது இயல்பே. ஆனால் அதை சரி செய்ய முயற்சி செய்கிற ஊழியர்களை நினைவில் கொள்ளுங்கள்.

இண்டிகோ நிறுவனத்தின் ஊழியர்களுடன் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். விமான ரத்தமான சேவைகளின் சுமையை அவர்களும் தான் சுமக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்” என்று பயணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: ``அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை'' - நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது. தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு... மேலும் பார்க்க

TVK: `கியூ-ஆர் கோடு பாஸ்; 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!' - புதுச்சேரி கூட்டத்துக்கு தயாராகும் தவெக

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வ... மேலும் பார்க்க

Ukraine War: ஐரோப்பவுக்கு துரோகம் செய்கிறதா அமெரிக்கா? - பிரான்ஸ் அதிபரின் சந்தேகமும் விளக்கமும்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் ரஷ்யாவுடன் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் அமெரி... மேலும் பார்க்க

முல்லை பெரியாறு அணை கட்ட பயன்படுத்தபட்ட தொன்மையான 'கலவை இயந்திரம்' ஏலத்தில் விற்பனையா? - அதிர்ச்சி

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை. இந்த அணையானது 1886-ல் கட்ட தொடங்கி, 10.10.1895 ல் கட்டி முடிக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை கட்டுமானத்திற்காகவே பித்யோகமான கலவை இயந்திரம் இங்க... மேலும் பார்க்க

Indigo: ``மற்ற நிறுவனங்கள் பிரச்னையை சந்திக்கவில்லை; இண்டிகோ மட்டும் எப்படி?" - அமைச்சர் கேள்வி

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம், சமீப காலமாக விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக... மேலும் பார்க்க

``நேருவை வில்லனாக்கும் திட்டம் தான் பாஜக அரசாங்கத்தின் முக்கிய கொள்கை'' - சாடும் சோனியா காந்தி

ஜம்மு & காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து முதல் பாகிஸ்தான் பிரிவினை வரை பாஜக குற்றம் சாட்டி வருவது இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவை தான்.இதை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வந்தாலும், தற்போது காங்கிரஸ் ம... மேலும் பார்க்க