செய்திகள் :

சங்கரன்கோவில்: மாற்றுத்திறனாளி விவசாயி படுகொலை; மனைவி படுகாயம் - நிலத்தகராறு காரணமா?

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம், மாற்றுத்திறனாளி விவசாயி. இவரின் மனைவி சுப்புத்தாய். நேற்று இரவு இவ்விருவரும் கரிவளம் பகுதியில் இருந்து சொந்த ஊரான நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது பாலம் அருகே பதுங்கியிருந்த மர்ம நபர்கள் எதிர்பாராத விதமாக இவர்களை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டித் தாக்கினர். கொடூர தாக்குதலில் நிலைகுலைந்து விழுந்த சங்கரலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மனைவி சுப்புத்தாயையும் விட்டுவைக்காத மர்மக் கும்பல் கடுமையாக வெட்டியதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்தார்.

உடனடியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்புத்தாய், பின்னர் உயர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சங்கரன்கோவில்

தற்போது அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சங்கரலிங்கத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு நேரத்தில் பாலத்தில் மர்ம நபர்களால் இருவரை வெட்டி ஒருவர் பலியான இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தில் ஏற்பட்ட நிலத்தகராறு மற்றும் சொத்துப் பிரச்சனை காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று தெரியவந்தது.

சங்கரன்கோவில்

குறிப்பாக, சங்கரலிங்கத்தின் சித்தப்பா குடும்பத்தினருக்கும் இவருக்கும் இடையே நிலம் மற்றும் சொத்து தொடர்பான நீண்ட கால பகைமை இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்தப் படுகொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு, கொலைக்கான காரணத்தை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார். சிறப்புக் குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக புளியங்குடி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் தொடர்புடைய 10 நபர்களிடம் (சங்கரலிங்கத்தின் சித்தப்பா குடும்பத்தினர் உட்பட) காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக: `கட்சிக்காகதான் பொறுமையா இருந்தேன்’ - நகராட்சி துணை தலைவர் மீது சாதிய வன்கொடுமை புகார்

நீலகிரி மாவட்டத்தின்‌ பேரூராட்சிகளில் ஒன்றாக இருந்த‌ கோத்தகிரி பேரூராட்சி அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட கோத்தகிரி நகராட்சியின் தலைவராக தி.மு.க- வைச் சேர்ந்த ஜெயகும... மேலும் பார்க்க

சபரிமலை: `தங்கம் கொள்ளை வழக்கில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா?' - அமலாக்கத்துறை விசாரணை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளை வழக்கில் உபயதாரர் என அறியப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் முராரி பாபு, சபரிமலை முன்னாள் எக்ஸ்கியூட்டிவ் ஆபீசர் சுதீஸ... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: ஒரே இடத்தில் இறந்து அழுகி கிடந்த 3 காட்டு யானைகள் - தொடரும் உயிரிழப்பால் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்துள்ள அரவட்லா மலையில் பாஸ்மார்பெண்டா சீத்தாம்மா காலடி என்ற இடத்தில், கடந்த மாதம் அழுகிய நிலையிலான 7 வயது ஆண் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த ... மேலும் பார்க்க

ரவுடியை பிடிக்கச் சென்று மலை உச்சியில் சிக்கிய காவலர்கள்; நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(30) இவன் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். குறிப்பாக பாலமுர... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னையைக் கண்டித்த தலைமைக் காவலர்; காவல் நிலையத்திற்குள் புகுந்து வெட்டிய கும்பல்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பொத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவர், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.குடு... மேலும் பார்க்க

ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு - விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேட... மேலும் பார்க்க