செய்திகள் :

திருப்பரங்குன்றம்: ``தீபத் தூண் அல்ல; அது நில அளவை கல் தான்'' - ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பேட்டி

post image

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர், திருப்பரங்குன்றத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்துள்ளது தீபத் தூண் அல்ல; அது நில அளவை கல் தான் என தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்துள்ள தூணில் கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மேற்படி சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற தடை இல்லை என உத்தரவு பிறப்பித்தார்.

திருப்பரங்குன்றம் தூண்

இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் உருவான நிலையில், இராஜபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பாலமுருகன், மேற்படி பிரச்னைக்குரிய மலையில் அமைந்துள்ள அந்தத் தூண் தீபம் ஏற்றுவதற்கான தூண் அல்ல; அது ‘தி.ஓட் லைட் ஸ்டோன்’ எனப்படும் சர்வே கல் எனக் கூறியுள்ளார்.

ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பாலமுருகன்

ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பாலமுருகன் அளித்த பேட்டியில் கூறுகையில், “திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள கல்லானது தீபக் கல் என நாளிதழ்களில் வெளியாகி இருப்பதை தான் பார்த்தேன். அது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அக்கல்லில் உள்ள சர்வே குறியீடுகளை வைத்து பார்க்கும் போது அது நில அளவை கல் தான் எனக் கூறியுள்ளார்.

வாஞ்சிநாதன் கூறுவதை வைத்து பார்க்கும் போது மேற்படி சர்ச்சைக்குரிய இடத்தில் அவர் சொன்ன குறியீடுகளுடன் இருக்கும் கல்லானது கண்டிப்பாக நில அளவை கல்லாக தான் இருக்க முடியும்" என்று கூறினார்.

மேலும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பாலமுருகன் கூறுகையில், "இது மாதிரியான கற்கள் வெள்ளையர்களால் நிலப்பரப்பை அளவீடு செய்யும்போது இந்த மாதிரியான கற்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டது. குறிப்பாக கலைப்பகுதியில் இருந்து உயரமான பகுதிகளுக்கு தகுந்தால் போல் சுமார் 30 சென்டிமீட்டர் முதல் 240 சென்டிமீட்டர் வரை உயரமுள்ள கற்கள் இடத்திற்கு தகுந்தார் போல் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தூண்
திருப்பரங்குன்றம் தூண்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இது போன்ற ஏராளமான சர்வே கற்கள் உள்ளது. தான் புலாய்விற்கு செல்லும்போது இது மாதிரியான கற்களை மலைப்பகுதியில் பார்த்துள்ளேன்.

மேற்படி பிரச்னைக்குரிய இடத்தில் இருக்கும் சர்வே கல்லின் மேலே உள்ள குழிப்பகுதியானது நில அளவை கருவியை பொருத்துவதற்காக உண்டாக்கப்பட்ட குழி.

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்
கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்

கிராமப்புறங்களில் உள்ள இது மாதிரியான கற்களில் பொதுமக்கள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதால் அந்த கற்கள் எல்லாம் தீப தூண்கள் ஆகி விடாது. அந்த கற்களின் பெயர் தியோடோலைட் ஸ்டோன்.

இது குறித்து தீர்ப்பளித்த நீதிபதி முன்னதாக நில அளவை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மேற்படி இடத்தை தணிக்கை செய்திருந்தால் இது மாதிரியான குழப்பங்கள் வந்திருக்க வாய்ப்பு இல்லை. மேற்படி பிரச்னைக்குரிய இடத்தில் அமைந்து இருப்பது நில அளவை கல் எனப்படும் தியோடோலைட் ஸ்டோன் தான்" என்று உறுதிப்பட கூறினார்.

``நேருவை வில்லனாக்கும் திட்டம் தான் பாஜக அரசாங்கத்தின் முக்கிய கொள்கை'' - சாடும் சோனியா காந்தி

ஜம்மு & காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து முதல் பாகிஸ்தான் பிரிவினை வரை பாஜக குற்றம் சாட்டி வருவது இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவை தான்.இதை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வந்தாலும், தற்போது காங்கிரஸ் ம... மேலும் பார்க்க

Indigo: ``விமான ஊழியர்களிடம் கனிவாக நடந்துக்கோங்க, ஏன்னா'' - பயணிகளுக்கு கோரிக்கை வைத்த சோனு சூட்

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம், சமீப காலமாக விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக... மேலும் பார்க்க

`அதிமுக கட்சியல்ல, அது ஒரு கிளை!’ – எடப்பாடி பழனிசாமியை வறுத்தெடுத்த உதயநிதி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாக முகவர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், நேற்றிரவு செஞ்சியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டா... மேலும் பார்க்க

இண்டிகோ சேவை ரத்து: மும்பை விமான நிலையத்தில் வேதனையை பகிர்ந்த பயணிகள்; சோக காட்சிகள்

நாட்டின் மிகப்பெரிய தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனமாக கருதப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவை கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திடீரென பைலட்டுகளுக்கான பணி நேரம், ஓய்வு தொடர்பான புதிய விதிகளை அறி... மேலும் பார்க்க

காங்கிரஸ்: ``விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது எனக்கு தெரியாது'' - செல்வப்பெருந்தகை விளக்கம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தி... மேலும் பார்க்க

Trump: `அமைதிக்கான பரிசு' - ட்ரம்ப் மகிழ்ச்சி; நோபல் பரிசு மிஸ் ஆனாலும் FIFA ஆறுதல்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து ட்ரம்ப் கேட்டு வந்த ஒன்று... ஆசைப்பட்டு வந்த ஒன்று, 'அமைதிக்கான நோபல் பரிசு'.ஆனால், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரியா மச்சாடோவிற்கு வ... மேலும் பார்க்க