செய்திகள் :

IT கம்பெனியில் பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர்களுக்குத் தொல்லை கொடுத்த 6 பேர் சிக்கியது எப்படி?

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் ஐ.டி. கம்பெனியில் 300க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக அணித் தலைவர்களாக இருக்கும் ஆண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல்களைக் கொடுத்து வந்தனர். சில ஆண் அதிகாரிகள் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் பெண் ஊழியரிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துள்ளனர்.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்ல முடியாமல் இருந்தனர். ஆனால் அக்கம்பெனியில் பணிபுரியும் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி இது குறித்து இமெயில் மூலம் போலீஸாருக்குப் புகார் கொடுத்தார்.

கைது
கைது

அதன் அடிப்படையில் போலீஸார் ஐ.டி. கம்பெனியில் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வு பிரிவை அமைத்தனர். அவர்கள் ஒவ்வொரு பெண் ஊழியரையும் தனித்தனியாக விசாரித்தனர். அதன் அடிப்படையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் ஓர் ஆண் ஊழியரும் புகார் கொடுத்து இருந்தார். அவர் தனது மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அணித் தலைவர் செயல்படுவதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

ஒரு பெண் ஊழியரிடம் அவரது திருமணமான அணித் தலைவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அடிக்கடி அப்பெண்ணை வெளியில் அழைத்து சென்று இது போன்று செய்துள்ளார். அதோடு அந்த நபர் அதே அலுவலகத்தில் பணிபுரியும் தனது நண்பரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

அவரது நண்பரும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் அவரது உறவுகள் குறித்து தனக்கு தெரியும் என்று கூறி பாலியல் துன்புறுத்தல்களைக் கொடுத்து வந்தார். பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாசிக் போலீஸ் கமிஷனர் சந்தீப் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "நகரத்தில் எந்தவொரு நிறுவனத்திலும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் பெண்கள், அச்சமின்றி காவல்துறையை அணுக வேண்டும். குற்றமிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பாலியல் சீண்டல்
பாலியல் சீண்டல்

சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய துணை போலீஸ் கமிஷனர் மிட்கே இது குறித்து கூறுகையில், “பாலியல் வன்கொடுமை வழக்கில் புகார் அளித்த பெண், மற்ற பெண் ஊழியர்களும் பாலியல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்களையும், அவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களையும் எதிர்கொள்வதாகக் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்தப் பெண்களைத் தொடர்புகொண்டு, தங்கள் புகார்களைப் பதிவு செய்யுமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கினோம்” என்றார்.

சென்னை: பெண் டான்ஸ் மாஸ்டருக்கு பாலியல் தொல்லை - பதிவு நம்பரால் சிக்கிய இளைஞர்

சென்னையைச் சேர்ந்த கிளாசிக்கல் டான்ஸ் மாஸ்டரான இளம்பெண் ஒருவர் 21-ம் தேதி, அடையாறு சாஸ்திரி நகர் வழியாக பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், ஆள... மேலும் பார்க்க

"வெளிநாட்டுப் பாணியில் காதலைச் சொல்கிறேன்" - காதலனைக் கட்டிவைத்து எரித்து கொன்ற பெண்; என்ன நடந்தது?

பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள அஞ்சனாபுரா பகுதியில் வசித்து வந்தவர் பிரேர்னா (27). இவர் அங்குள்ள மொபைல் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே கடையில் வேலை செய்து வந்த கிரண் என்பவரை பிரேர்னா காதலித... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த தாய்; 11 வயது மகனைக் கொன்று டிரம்மில் மறைத்த நபர் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவரது கணவர் நாசிக்கில் வேலை செய்து வந்தார். ஆஷா வீட்டு வேலை செய்து வந்தார். ஆஷாவைக் கடந்த சில ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த மதுரா(45) என்பவர் ... மேலும் பார்க்க

விருதுநகர்: தேர்தல் கால ஆர்டர்; விதிமீறல், அதிக பணிச்சுமை! பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி அருகிலுள்ள கட்டனார்பட்டி கிராமத்தில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. கடந்த 19-ம்... மேலும் பார்க்க

காதலை கைவிட மறுப்பு: 16 வயது மகளை கொலை செய்து முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் தெரியாமல் செய்த தந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் விஜய் செளபே. இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். 10வது வகுப்பு படித்து வரும் அந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இது விஜய்-க்கு தெரிய வந்தது. என... மேலும் பார்க்க

காதல் மனைவிமீது சந்தேகம், வீடு முழுக்க கேமரா; இரண்டு மகள்களைக் கொன்ற தந்தை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா (48). இவர்களுக்கு 11 வயதில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரிகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். பீகாரை... மேலும் பார்க்க