செய்திகள் :

IUML: ``அப்படி நீங்களா கற்பனை பண்ணிகிட்டா எப்படி பாய்" - திமுக-வுடன் உறவை முறித்த காதர் மொய்தீன்

post image

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில், சென்னையில் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 483 பேர் பங்கேற்ற இக்கூட்டத்தில், 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த காதர் மொய்தீன், ``தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும், மு.க.ஸ்டாலின் அவர்களே மீண்டும் முதலமைச்சராவார் என்று நாங்களும் நம்பினோம், உழைத்தோம்.

ஆனால், தேர்தல் முடிவு வேறாக அமைந்துவிட்டது. தமிழ்நாட்டு மக்கள் தங்களது வாக்குகளால் 'தமிழக வெற்றிக் கழகத்திற்கு' சாதகமான சூழலை உருவாக்கினர்.

திமுக ஸ்டாலின் - இ.யூ.மு.லீக் - காதர் மொய்தீன்

த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முயற்சி செய்தபோது, அவர்களுக்குப் போதிய பெரும்பான்மை இல்லாத நிலை இருந்தது. அந்தச் சூழலில், தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியோ அல்லது ஆளுநர் ஆட்சியோ வந்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

ஜனாதிபதி ஆட்சி அமைந்தால், அது மத்தியிலுள்ள பாஜக-வின் மறைமுக ஆட்சியாகவே மாறும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு, அதற்கு முஸ்லிம் லீக் காரணமாகிவிட்டது என்ற பழி சமுதாயத்தின் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, சமுதாய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்து, தவெக ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம்.

தமிழ்நாட்டு வரலாற்றில் தி.மு.க கூட்டணியில் முஸ்லிம் லீக் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்துள்ளது. கடந்த காலங்களில் உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.க கூட்டணியில்தான் போட்டியிட்டு வென்றோம். இந்த முறையும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து தீர்மானம் இயற்றியுள்ளோம். கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் 28-ல் போட்டியிட்டு 22 இடங்களில் வென்று, வழக்கம்போல 5 அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் நாங்கள் த.வெ.க-விடம் அமைச்சர் பதவி கேட்கவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை.

தவெக அமைச்சரவையில் இ.யூ.மு.லீக்
தவெக அமைச்சரவையில் இ.யூ.மு.லீக்

ஆனால், முதலமைச்சர் ஜோசப் விஜய் பெருந்தன்மையோடு எங்களை அமைச்சரவையில் பங்கேற்க அழைத்தார். அகில இந்திய தலைமை மற்றும் கேரள அரசியல் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலோடு, தற்போது த.வெ.க அமைச்சரவையில் முஸ்லிம் லீக் இணைந்துள்ளது. எங்கள் கட்சித் தலைவராக ஏ. பாரூக் அவர்களும், அமைச்சராக ஷாஜகான் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர்." என்றார்.

அப்போது செய்தியாளர்கள் 'திமுக-வுக்கு வாக்களிப்பது 6-வது கடமை' எனப் பேசியதாக கேள்வி எழுப்பினர். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "இஸ்லாமிய மார்க்கத்தில் ஐந்து கடமைகள் உள்ளன. ஜனநாயகத்தில் ஆறாவது கடமை ஓட்டு போடுவது என்றுதான் நான் மறைந்த மூத்த தலைவர் எஸ்.எம். பக்கர் கூட்டத்தில் பேசினேனே தவிர, தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போடுவது ஆறாவது கடமை என்று நான் எப்போதும் கூறவில்லை. ஊடகங்கள் தங்களுக்குத் தகுந்தாற்போல் கற்பனையாகக் கேள்விகளை உருவாக்கக் கூடாது. தற்போதைய த.வெ.க ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது.

தவெக அமைச்சரவையில் இ.யூ.மு.லீக்
தவெக அமைச்சரவையில் இ.யூ.மு.லீக்

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் இந்த நல்லாட்சி தொடர, த.வெ.க கூட்டணியோடு இணைந்து முஸ்லிம் லீக் முழு ஒத்துழைப்பை வழங்கும். கூட்டணிக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை, பெயர் வைக்கும்போது அதைப் பயன்படுத்துவோம். கடந்த காலங்களில் உள்ளாட்சியில் எங்களுக்குக் கிடைக்காத மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர் போன்ற வாய்ப்புகளை இம்முறை த.வெ.க கூட்டணியில் பெற்று சமுதாயத்திற்குப் பாடுபடுவோம்.

முதலமைச்சர் சட்டமன்றத்தில் தேவையான நேரங்களில் பேசித்தான் வருகிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. குறிப்பாக, இதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண் படை' போன்ற அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்றும், குற்றங்கள் தடுக்கப்படும் என்றும் நம்புகிறோம். எங்களை விமர்சிப்பவர்கள் குறித்து கவலையில்லை, நண்பர்கள் எதைச் சொன்னாலும் பதில் சொல்லாமல் கடந்து போவோம்.

இ.யூ.மு.லீக் - காதர் மொய்தீன்
இ.யூ.மு.லீக் - காதர் மொய்தீன்

முஸ்லிம் லீக் வரலாற்றிலேயே எங்கள் அலுவலகத்திற்கு எந்தவொரு முதலமைச்சரும் வந்ததில்லை. ஆனால், முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆதரவு தந்ததற்காக நேரில் வந்து நன்றி கூற விழைந்தார். தெரு மிகவும் குறுகலானது என்பதால் நான் பலமுறை மறுத்தும், அவர் அனைத்துக் கட்சி அலுவலகங்களுக்கும் செல்வது போல் இங்கும் வருவேன் என்று உறுதியாகக் கூறி வந்தார். அவர் வருவதற்காக, ஒரே இரவில் அலுவலகத்திற்கு வெள்ளை அடித்து, வாடகைக்கு 7, 8 சோபாக்களை வாங்கிப் போட்டு அவரை அமர வைத்தோம். அவர் கிளம்பிய உடனே அந்த சோபாக்கள் திரும்ப எடுத்துச் செல்லப்பட்டன. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

மேகதாது என்பது ஒரு ஆடு தாண்டும் அளவிலான சிறிய ஓடைப் பகுதிதான். அங்கு கர்நாடக அரசு அணை கட்டினால், தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீர் முழுமையாகத் தடுக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால்தான் தமிழ்நாடு அரசு, எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் ஏற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பிரதமரைச் சந்தித்து வற்புறுத்த உள்ளோம். இதில் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினரும் நேரில் சென்று தமிழகத்தின் குரலை ஒலிப்பார்" என்றார்.

``என் இறுதி மூச்சு வரை தவெக-வில் பயணிப்பேன்" - விஜய் உடன் இணைந்த மன்சூர் அலிகான் உருக்கம்!

பிரபல திரைப்பட நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அதிகாரபூர்வமாக அந்தக் கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்... மேலும் பார்க்க

`நேரலை துண்டிப்பு; பள்ளிகளில் அரசியல் தலைவர் படங்கள்' - அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன பதில் என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு அ... மேலும் பார்க்க

`உங்களால் ஒரு இடத்தைக் கூட பெற முடியவில்லையே.!' - அண்ணாமலைக்கு எதிராக காட்டமான தமிழிசை | பேட்டி

முன்னாள் ஆளுநரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து நம் கேள்விகளை முன் வைத்தோம்... இனி கேள்விகளும் அதற்கு தமிழிசை சவுந்தரராஜனின் பதில்களும்..!``தேர்தலில் பா.ஜ.க-வின் த... மேலும் பார்க்க

நேரலை துண்டிப்பு; 'சட்டமன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்குவதுதான் மாற்றமா?' - உதயநிதி கடிதம்

தமிழக சட்டமன்றத்தின் 2-வது கூட்டத்தொடர் நேற்று (ஜூன்.19) நடைபெற்றது. மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான... மேலும் பார்க்க

`கடன் நெருக்கடி; மன உளைச்சல்' - தீவிர திமுக விசுவாசியான அசோக்குமார் MLA தவெகவில் இணைகிறாரா?

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ அசோக்குமார். இவர் தவெக-வில் இணைய இருப்பதாக பேசப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-வில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் சிலர் தங்களது எ... மேலும் பார்க்க

`மாநகராட்சியே நாசமா போச்சு’ | சாயம் வெளுத்த மேயர், துணை மேயர்; வேலூர் திமுக-வில் மோதல்!

வேலூர் மாநகராட்சியின் நிர்வாக சொதப்பல்களால் பல்வேறு பணிகளில் குளறுபடிகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் குவிகின்றன. குறிப்பாக, `மாநகராட்சியைக் கபளீகரம் செய்துவிட்டார்’ என்று தி.மு.க-வைச் சேர்ந்த பெண் மே... மேலும் பார்க்க