செய்திகள் :

பாஸ்போர்ட் இல்லாத நாக்பூர் மாணவனுக்கு அபுதாபியில் தேர்வு மையம் - தொடரும் நீட் தேர்வு குளறுபடி!

post image

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் நடந்தது. இதில் தேர்வுக்கு முன்பு வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு நாளை நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு மாணவர்கள் ஏற்கெனவே ஆன்லைன் மூலம் அட்மிட்கார்டுகளை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு அவர் கேட்காமலேயே அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை மொகமத் தாலிப் கூறுகையில், "நேற்று அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்தபோது, ​​அதில் தேர்வு மையமாக அபுதாபியில் உள்ள ஒரு பள்ளி குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.

ஏனெனில், நாங்கள் தேர்வு செய்த விருப்ப தேர்வு மையங்களில் அது போன்ற எதையும் குறிப்பிடவில்லை" என்று தெரிவித்தார்.

ஆன்லைனில் பெறப்பட்ட அட்மிட் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அதில் தேர்வு மையத்தின் பெயர் “SALAMA BINT BUTTI STREET: 23 RD MUROOR ROAD; ABU DHABI, UAE: PIN – 46492-46492-46492 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், "மிகவும் வருந்தத்தக்கது! ஒரு போட்டித் தேர்வு இவ்வளவு பெரிதாக்கப்படும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இச்செயல் மாணவர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒரு குழந்தை கழிவறைக்குச் சென்றால் கூட அதை ஊடகங்கள் செய்தி வெளியிடும் நிலையை இது ஒத்திருக்கிறது. இத்தகைய செய்திகள் நாட்டிற்கு அவப்பெயரையே தேடித்தருகின்றன." என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொழில்நுட்பம் அல்லது செயலி (application) சார்ந்த ஏதேனும் பிழையினால் ஏற்பட்டிருக்கலாமா என்று மற்றவர்கள் சந்தேகம் எழுப்பினர். சமூக ஊடகங்களில் இது வைரலானதை தொடர்ந்து நீட் தேர்வை நடத்தும் தேசிய டெஸ்டிங் ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில், தவறு சரி செய்யப்படும் என்றும், சம்பந்தப்பட்ட மாணவர் நாக்பூரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளது.

`நான் தற்கொலை செய்யாமல் இருந்ததற்கு காரணம் அவள் மட்டும் தான்!' - ஸ்ரீசாந்த் பகிரும் காதல்

இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற அணியில் இடம்பிடித்த வீரர் ஸ்ரீசாந்த், அணியின் வேகப்பந்து வீச்சு துறையில் நட்சத்திரமாக வலம் வந்தவர். ஆனால், ஒரே ஒரு குற்றச்சாட்டு அவரது கிரிக்கெட் வாழ்வையே புரட்டிப் போட்டத... மேலும் பார்க்க

Orry Income: ஒரு ரீல்ஸில் ரூ.76 லட்சம் சம்பாதித்த இன்ஃப்ளூயன்சர்! பார்ட்டிக்கு போனால் ரூ.25 லட்சம்?

இன்ஸ்டாகிராமில் பாலிவுட் பிரபலங்களுடன் தொடர்ந்து காணப்படுபவர் ஓரி (Orry). இவருக்கு என்று எந்தவொரு குறிப்பிட்ட வேலையோ அல்லது தொழிலோ கிடையாது. எனினும், ஒரு பிராண்டின் விளம்பரத்திற்காக இன்ஸ்டாகிராமில் வெ... மேலும் பார்க்க

‘எனக்கு என்ன பிடிக்கும்னு யோசித்ததே இல்லை!’ - தாய்லாந்தில் தன்னைத் தேடிய இந்திய பெண்ணின் கதை

ஒரு பெண்ணின் உலகம் எதுவரை? வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடும் பொறுப்புகள்தானா அல்லது கண்டங்கள் கடந்து விரியும் எல்லையற்ற வானமா? இந்தக் கேள்விக்குத் தன் ஒற்றை நாள் பயணத்தின் மூலம் பதில் சொல்லி... மேலும் பார்க்க

கோர்ட்டில் விவாகரத்து ஆவணங்களைக் கிழித்துவிட்டு கட்டிப்பிடித்த தம்பதி; வைரல் படத்தின் பின்னணி என்ன?

டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி பல ஆண்டுகளாக விவாகரத்து கோரி கோர்ட்டிற்கு அலைந்து கொண்டிருந்தனர். ஷிகா என்ற அப்பெண் செளரப் என்பவரை 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களில் க... மேலும் பார்க்க

பீகார்: 17 வயது சிறுவனை திருமணம் செய்த 22 வயது பெண்; பஞ்சாயத்திற்கு வந்த விவகாரம்; என்ன நடந்தது?

பீகார் மாநிலம் மதுபுரா மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் வசிப்பவர் பூஜாகுமாரி(22). இவருக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் பித்து குமார்(17) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் வீட்டிற்க... மேலும் பார்க்க

செயற்கை கருத்தரிப்பு மைய குளறுபடியால் மாறிய கரு? "பிறந்தது எங்கள் குழந்தைகள் அல்ல" - தம்பதி புகார்

டெல்லி அருகில் உள்ள குருகிராமைச் சேர்ந்த தம்பதியான ராகுல் மற்றும் மீனு தம்பதி செயற்கை முறையில் (Vitro Fertilisation) குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக டெல்லியில் உள்ள டாக்டர் கைலாஷ் கருத்... மேலும் பார்க்க