செய்திகள் :

Rain Alert: தமிழகத்தில் ரெட் அலர்ட்; உருவாகிறதா டிட்வா புயல்?

post image

தென்மேற்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கையில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருப்பதாகவும், அடுத்த 60 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

புயலாக வலுப்பெறும் பட்சத்தில் ஏமன் நாடு பரிந்துரைத்துள்ள 'டிட்வா' என்ற பெயர் சூட்டப்படும் என்று கூறப்படுகிறது.

சென்னைக்கு 730 கி.மீ தொலைவில் இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

 புயல்
புயல்

இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (நவ.28) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 21 செ.மீக்கும் மிக அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அந்த 2 நாட்கள் மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நவம்பர் 29-ம் தேதி தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.

Rain Alert - மழை
Rain Alert - மழை

இதேபோன்று, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 30-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டை நோக்கி நகரும் `Ditwah' புயல்; எப்போது வருகிறது? 2 நாள்கள் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 'இது தொடரும்' என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, கன்னியாக... மேலும் பார்க்க

Rain Alert: வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் - எப்போது கரையைக் கடக்கும்?

தென்மேற்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கையில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருப்பதாகவும், அடுத்த 60 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும... மேலும் பார்க்க

வலுவடைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! - தமிழ்நாட்டில் 4 நாள்களுக்கு கனமழை; எந்தெந்த மாவட்டங்களில்?

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவியது. அது இன்று வளிமண்டல மேலடக்கு சுழற்சியுடன் கூடிய காற்றழுத்தத் த... மேலும் பார்க்க

எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பரவும் சாம்பல் - மீண்டும் டெல்லி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?

கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முன்தினம் (நவம்பர் 23) எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பில் இருந்து சிதறிய சாம்பல் சிவப்பு கடல் வழியாக ஏமன் ... மேலும் பார்க்க

Rain Alert: ``கடலுக்கு செல்ல வேண்டாம்; 48 மணி நேரத்தில் புயலாக வலுபெறும்'' - வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ... மேலும் பார்க்க

Rain Alert: தமிழ்நாட்டில் இந்த வாரம் முழுவதும் மழை; சென்னைக்கு 'ஆரஞ்சு அலர்ட்' - எப்போது தெரியுமா?

இந்த வாரத்திற்கான வானிலை அப்டேட்டை வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம். இந்த வாரம் முழுவதுமே தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இன்று தென்காசி, திருநெல்வ... மேலும் பார்க்க