செய்திகள் :

Rain Alert: தமிழகத்தில் ரெட் அலர்ட்; உருவாகிறதா டிட்வா புயல்?

post image

தென்மேற்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கையில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருப்பதாகவும், அடுத்த 60 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

புயலாக வலுப்பெறும் பட்சத்தில் ஏமன் நாடு பரிந்துரைத்துள்ள 'டிட்வா' என்ற பெயர் சூட்டப்படும் என்று கூறப்படுகிறது.

சென்னைக்கு 730 கி.மீ தொலைவில் இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

 புயல்
புயல்

இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (நவ.28) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 21 செ.மீக்கும் மிக அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அந்த 2 நாட்கள் மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நவம்பர் 29-ம் தேதி தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.

Rain Alert - மழை
Rain Alert - மழை

இதேபோன்று, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 30-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று `ஆரஞ்சு அலர்ட்'?

சென்னையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே நிலை தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களுக்கும் பொருந்தும். தற்போது சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

Ditwah: அடுத்த 24 மணிநேரத்தில் டிட்வாவின் நிலை என்ன?- சென்னைக்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த டிட்வா புயலின் எச்சமான காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து... தற்போது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்பகுதி அருகே நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறியுள்... மேலும் பார்க்க

சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு `ஆரஞ்சு' அலர்ட்!

தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை... மேலும் பார்க்க

Rain Alert: கனமழை முன்னெச்சரிக்கை – 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம... மேலும் பார்க்க

`வலுவிழந்த' காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னைக்கு 'மிக கனமழை' அலர்ட்; நாளை எந்த மாவட்டங்களில் மழை?

சென்னையையும், சென்னை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை இன்னும் விட்டப்பாடில்லை.இந்திய வானிலை மையத்தின் அறிக்கைப்படி, டிட்வா புயலின் எச்சமாக தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ப... மேலும் பார்க்க