`வாரியம் வாங்கிக் கொடுங்க தலைவரே' விரட்டும் சிறுத்தைகள் டு 'பார்ட்டி பண்ட் வேண்ட...
RR vs SRH: "சூரியவன்ஷியுடன் உண்மையில் அதிகமாக எதுவும் பேச மாட்டோம்!" - ரியான் பராக்
நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் vs ஹைதராபாத் போட்டியில், 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று குவாலிஃபையர் 2-ல் குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது.
நடந்து முடிந்த இரண்டு ப்ளே ஆஃப் போட்டிகளிலும், முதலில் பேட்டிங் செய்த அணிகள் இமாலய இலக்கை நிர்ணயித்ததும், அதை துரத்த முடியாமல் எதிரணி ஆல் அவுட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இந்த போட்டியிலும் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஹைதராபாத் அணி.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ரியான் பராக், " இது ஒரு நல்ல போட்டி. இன்னும் நாங்கள் 260 ரன்கள் வரை எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
வைபவ் நல்ல தொடக்கம் கொடுத்த பிறகு, இன்னிங்ஸை எப்படிப் பெரிய ஸ்கோராக முடிக்க வேண்டும் என்பதில் இன்னும் வேலை செய்ய வேண்டும். எதிரணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும், நாங்கள் அமைதியை இழக்காமல் மீண்டும் போட்டிக்குள் வந்தோம்.
வைபவுடன் உண்மையில் அதிகமாக எதுவும் பேச மாட்டோம். அவரை சுதந்திரமாக விட்டுவிடுவோம். அவர் பேட்டிங்கை மிகவும் விரும்புகிறார். அதனால் நெட்ஸில் நிறைய பயிற்சி கொடுக்கிறோம். பிறகு, அவர் மைதானத்தில் சென்று தனது வேலையை செய்கிறார்.
கடைசி இரண்டு போட்டிகளும் நாக்அவுட் போன்ற அழுத்தமான போட்டிகள் என்பதால், அனைவரும் இன்னும் அதிக கவனத்துடனும் ஆற்றலுடனும் விளையாடினர். சீசன் முழுவதும் நன்றாக இருந்தோம். ஆனால், இந்த இரண்டு போட்டிகளில் அனைவரும் ஒரு படி மேலே சென்றனர்.
ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் நான் பெரிதாக எதையும் சொல்ல மாட்டேன். முதல் பந்தை அபிஷேக்கிற்கு வீசியபோது அது வைடாக சென்றது. அதனால், ‘கொஞ்சம் நேராக வீசு’ என்று சொன்னேன்.

அடுத்த பந்திலேயே விக்கெட் எடுத்துவிட்டு, ‘இது போதுமா?’ என்று சிரித்தார். உலக கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர்தான் அவர். மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் ஒருவரிடம் அதிக அறிவுரை தேவையில்லை.
நாளை ஓய்வு எடுப்போம். அனைவரும் பேட்டிங்கும், பந்துவீச்சும் செய்துவிட்டார்கள். அதனால், ஓய்வெடுத்து அடுத்த போட்டிக்குத் தயாராகப் போகிறோம்" என்று பேசியிருக்கிறார்.


















