செய்திகள் :

Serial update: `இதனாலதான் மகன் கல்யாணத்துக்கு பலரையும் கூப்பிடலை!' - கம்பம் மீனா

post image

இதனாலதான் மகன் கல்யாணத்துக்கு பலரையும் கூப்பிடலை!

'பாண்டியன் ஸ்டோர்ஸ்', 'பாக்கியலட்சுமி' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகை கம்பம் மீனாவின் மகன் விஜய சரவணன் திருமணம் இரு தினங்களூக்கு முன் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வைத்து நடைபெற்றது,

மணப்பெண் அனிஷா ஹெச்.ஆர்-ஆக பணி புரிகிறாராம்.

திருமணத்துக்கு சின்னத்திரை வட்டாரத்தில் நெருங்கிய நட்பு வட்டத்தில் கூட யாருக்கும் மீனா தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் கிடைக்க, மீனாவிடமே பேசினோம்.

''எனக்கு ரெண்டு மகன்கள். விஜய சரவணன் மூத்த மகன். ஏற்கனவே ஒரு திருமணம் நடந்து அந்த வாழ்க்கை சரியாக அமையாததால் முறைப்படி அதுல இருந்து வெளியில வந்துட்டான். அதனால இன்னொரு திருமணம் வேண்டாம்னு சொல்லிட்டிருந்தான்.

கம்பம் மீனா

ஒரு அம்மாவா என்னால அப்படி விட முடியுமா? அதனால அவன்கிட்ட தொடர்ந்து பேசி கன்வின்ஸ் செய்து கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சேன். மேட்ரிமோனியல் மூலமா பொண்ணு அமைஞ்சது. கல்யாணம் சிம்பிளா இருக்கட்டுமேனுதான் கோவில்ல வச்சு பண்ணினோம். ஆனா பொண்ணு வீட்டுக்காரங்க அவங்க விருப்பப்படி சொந்த பந்தங்களைக் கூப்பிட்டிருந்தாங்க. அவங்க விருப்பத்துக்கு குறுக்க நிற்க விரும்பலை. நல்லபடியே திருமணம் முடிஞ்சிடுச்சு'' என்றார் அவர்.

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது நினைவிருக்கலாம். தலைவராக நடிகர் பரத்தும் செயலாளராக நவீந்தரும் தேர்வானார்கள். ஏற்கனவே இருந்த நிர்வாகத்தினர் படு தோல்வியடைய பரத் தலமையிலான அணி அமோக வெற்றி பெற்றது.

வெற்றி பெற்று ஓராண்டு கூட நிறைவடையாத சூழலில் தற்போது சங்க நிர்வாகிகள் சிலரிடையே கருத்து வேறுபாடு உண்டாகி அதன் எதிரொலியாக செயற்குழு உறுப்பினர் துரை மணி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பரத்

என்ன நடந்ததென விசாரித்தோம்.

'தேர்தல்ல வென்றதும் அத்தனை பேரும் ஒற்றுமையா இருந்து சங்கத்தை வழிநடத்துவோம்னு பேட்டியெல்லாம் தந்தாங்க. ஆனா கொஞ்ச நாளிலேயே நிர்வாகிகளிடையே குரூப்பிசம் உண்டாகிட்டதாத் தெரியுது. செயற்குழுவுல இருக்கிற ஒரு சிலருடைய பேச்சை மட்டுமே கேட்டு பரத் செயல்படுகிறார் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

வேறு சிலரோ உறுப்பினராகச் சேர்த்து விடுவதற்கு சிலரிடம் பணம் வசூல் செய்யப்பட்டதாகப் புகார் எழுப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே நிர்வாகிகள் இடையே பிரச்னை உண்டானது என்கிறார்கள். எது எப்படியோ துரைமணி சங்கப் பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக கடிதம் அனுப்பி விட்டதாகச் சொல்கிறார்கள்.

நிர்வாகிகள் முன்வந்து வாய் திறந்தால்தான் உண்மையான காரணம் தெரிய வரும்.!

`பத்துக்கு பத்து வீட்ல மொத்த குடும்பமும் வசிச்ச‌தை நினைச்சா..' - புதுமனை புகுந்த‌ பழைய ஜோக் தங்கதுரை

சென்னையில் புது வீடு வாங்கிக் குடியேறி இருக்கிறார் `பழைய ஜோக்' தங்கதுரை.விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தங்கதுரை. டிவியிலிருந்து சினிமா பக்கமும் வந்தவர் 'டிடி ரிட்டர்ன்... மேலும் பார்க்க

"'Heart Beat 3'ல நான் இருக்கேனா?!" - 'கனா கண்டேனடி' சஞ்சனா ஷேரிங்ஸ்

'ஹார்ட் பீட்' சீரிஸிலும், 'பொன்னி' சீரியலில் வில்லியாக நடித்து மக்களுக்குப் பரிச்சயமான சஞ்சனா, இப்போது 'கனா கண்டேனடி' தொடரில் நடித்து வருகிறார். இத்தொடருக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.Kana Ka... மேலும் பார்க்க

"சாண்ட்ரா இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா எங்கிட்ட டைவர்ஸ் வாங்கியிருப்பாங்க" - பிரஜின் பேட்டி

''தமிழில் இதுவரை 16 படங்கள் வந்திடுச்சு. நாலு படம் ரிலீஸ்க்கு வெயிட்டிங். மலையாளத்துல 4. கன்னடம், தெலுங்கில் தலா 1. ஆனாலும் எனக்குப் பிறகு டிவியில இருந்து சினிமாவுக்குப் போன விஜய் சேதுபதி, சிவ கார்த்த... மேலும் பார்க்க

நீங்களும் ஆகலாம் பிக்பாஸ் போட்டியாளர்! 'பிக்பாஸ் தி காமன் மேன்' எதற்கு தெரியுமா?

விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 10 அடுத்த சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. வழக்கம் போல் இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவிருக்கிறார்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட... மேலும் பார்க்க

Kana Kandenadi: "சீரியல்ல நடிக்கணும்னு ஐ.டி வேலையை விட்டுட்டேன்" - 'கனா கண்டேனடி' டீம் பேட்டி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'கனா கண்டேனடி' சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களான ஜாய்சன் மற்றும் சைத்ராவிடம் பேசினோம். 'கனா கண்டேனடி' சீரியலில் அறிமுகமாகியிருக்கும் ஜாய்சன் அவரது முத... மேலும் பார்க்க

"ஆடிட்டருடன் திருமணம்... பத்து பேருக்கு மேல கூப்பிடலை; ஏன்னா..." - 'வாணி ராணி' ஜெனிப்ரியா

'வாணி ராணி', 'அழகு' உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஜெனிப்ரியா என்ற சாராவுக்கு மோகன் சுந்தர் என்பவருடன் சென்னை அம்பத்தூரிலுள்ள அம்மன் கோவில் ஒன்றில் வைத்து கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளது.திருமணத்தில... மேலும் பார்க்க