செய்திகள் :

SPB 80: "SPB பக்கத்தில் யாராலும் நெருங்கக் கூட முடியவில்லை!" - உருகும் இளையராஜா

post image

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 80-ஆவது பிறந்தநாள் இன்று. இளையராஜா - எஸ்.பி.பி கூட்டணி என்பது தமிழ்த் திரையிசையில் முக்கியமான வெற்றிக் கூட்டணி.

இளையராஜா இசையில் அதிக ஹிட் பாடல்களைப் பாடியவரும் எஸ்.பி.பி-தான். எஸ்.பி.பி-யின் 80-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருடனான நட்பு, தமிழ்த் திரையிசைக்கு அவர் ஆற்றிய பங்கு பற்றி உருக்கமாகப் பேசி ஒரு காணொளியை அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இளையராஜா.

SPB - Ilaiyaraaja
SPB - Ilaiyaraaja

அந்தப் பதிவில் இளையராஜா, "பாலா இல்லாதது என் மனதில் ஒரு பெரிய வெற்றிடமாகத்தான் இருக்கிறது. ஏன்னென்றால், அதற்கு ஈடான ஒரு குரல் இங்கு இல்லை. அவரைப் போன்று நகலெடுக்க முயற்சிக்கும் குரல்கள்கூட, சரியாகப் பாடுகிறார்களா என்றால், இல்லவே இல்லை.

அவரைப் போல் யாராலும் பாடவே முடியாது. அவருடைய அர்ப்பணிப்பை எப்படி நகலெடுக்க முடியும்? இதுவரை, என் இசையில் வெளியான பெரும்பாலான ஆண் குரல் பாடல்களை எஸ்.பி.பி மட்டும்தான் பாடியிருக்கிறார். அது அவருடைய புகழால் மட்டும் அல்ல, அவருடைய திறமையால் நிகழ்ந்த விஷயம்.

அவருடைய அசாத்திய திறமையால், ஒரு இசையமைப்பாளரின் கம்போசிஷனை மிக வேகமாகப் புரிந்துகொள்வார். மேலும், அந்தப் பாடலில் என்ன மாதிரியான உணர்வுகள் வெளிப்பட வேண்டுமோ, அதற்கேற்ப அதிகக் கவனத்துடன் பாடுவார். அதோடு அந்தப் பாடலுக்காக அவர் இன்னும் கூடுதல் உழைப்பையும் போடுவார்.

என்னுடைய எதிர்பார்ப்பு எதுவாக இருந்தாலும், அதை அவர் முழுமையாக நிறைவேற்றினார். அது மிகவும் அற்புதம். அதையெல்லாம் விட, அவர் என் சிறந்த நண்பர். அதையும் தாண்டி, இதுவரை இருந்த பின்னணிப் பாடகர்களிலேயே அவருடைய திறமை என்பது அசாத்திய திறமையாகும்.

50,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இசை உலகில் இது ஒரு மிகப்பெரிய சாதனை. இதுவரை யாரும் இப்படிப் பாடியதும் இல்லை.

SPB - Ilaiyaraaja
SPB - Ilaiyaraaja

யாரும் இந்தச் சாதனையை அடைந்ததும் இல்லை. வார்த்தைகளுக்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்டு நடக்கக்கூடிய இந்த விஷயங்கள் எல்லாம் ரொம்ப அற்புதமான ஒரு சமாச்சாரம். அவனுக்குப் பக்கத்தில் யாராலும் நெருங்கக் கூட முடியவில்லை!

இவ்வளவு ஏன், இன்னும் எத்தனை பாடகர்கள் வந்தாலும்கூட, அதில் நூறில் ஒரு பங்கைக்கூட அவர்களால் நெருங்க முடியாது!" எனக் கூறியிருக்கிறார்.

Suriya: "So proud of you..." - ஜோதிகாவின் படத்தைப் பாராட்டிய சூர்யா!

சூர்யாவின் 'கருப்பு' படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் மே 15-ஆம் தேதி திரையரங்குகளில்... மேலும் பார்க்க

Rajinikanth: உழைப்பாளி டு ஜெயிலர் 2; 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஊட்டிக்கு என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென வருகை தந்திருக்கிறார். மைசூரில் இருந்து முதுமலை வழியாக வாடகை கார் மூலம் தனியாக ஊட்டிக்கு வருகை தந்த ரஜினிகாந்த், பிரபல இந்தி ... மேலும் பார்க்க

`அந்தக் குழந்தை நட்சத்திரமா இவர்?' - ஆச்சர்யப்பட்ட ஜெயராம் - நினைவுகளை பகிர்ந்து கொண்ட பரத்!

நடிகர் ஜெயராம் - ஊர்வசி இணைந்து நடித்திருக்கும் 'பரிமளா & கோ' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் 'லப்பர் பந்து' சஞ்சன... மேலும் பார்க்க

Sigma: "ஜேசன் சஞ்சயிடமிருந்து பொறுமை குறித்து நிறைய கற்றுக்கொள்ளலாம்!" - சந்தீப் கிஷன்

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படம் ஜூலை 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க ராஜூ சுந்தரம், சம்பத், அன்புதாசன் ஆகியோர் முக்கியக் க... மேலும் பார்க்க

ஹைக்கூ கவிதை விழா: "3350 கவிதைகளிலிருந்து 53 கவிதைகள்" - சுவாரஸ்யம் பகிரும் லிங்குசாமி

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக ஆண்டுதோறும் ஜூன் 2ம் ஹைக்கூ கவிதைப் போட்டியினை நடத்தி வருகிறார் இயக்குநர் லிங்குசாமி. கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நேற்று அதன் ஐந்தாம் ஆண்டுக்கான விழா தேவநேயப்பாவ... மேலும் பார்க்க

"மரணத்தின் விளிம்பு வரை சென்ற இயக்குநரை லிங்குசாமிதான் போராடி மீட்டார்" - பகிரும் ஏ.ஆர். முருகதாஸ்

வருடந்தோறும் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் ஹைக்கூ கவிதைப் போட்டியை இயக்குநர் லிங்குசாமி நடத்தி வருகிறார். தொடர்ந்து 5-ஆம் ஆண்டாக இந்தாண்டும் அப்போட்டிக்கான அறிவிப்பை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டிர... மேலும் பார்க்க