செய்திகள் :

TTT: ``ஜீவா ஹீரோவா? அவனுக்குப் படம் ஓடாது என்பார் சௌத்ரி" - நடிகர் இளவரசு ஓப்பன் டாக்!

post image

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் இளவரசு, ``ஆரம்ப காலத்தில் ஆர்.பி. சவுத்ரி சாரிடம் கதை சொல்லப் போனால், யார் ஹீரோ எனக் கேட்பார். ஜீவா ஹீரோ என்றால்... ஜீவா ஹீரோவா? அவனுக்குப் படம் ஓடாது, வேற யாரையாவது சொல்லுங்க' என்று விளையாட்டாகச் சொல்வார். ஆனால், அப்படி வளர்ந்த ஜீவா இன்று ஒரு தயாரிப்பாளருக்குத் தேவையான மிகச்சிறந்த ஒழுக்கத்தைக் கடைபிடிக்கிறார்.

ttt success meet: நடிகர் இளவரசு
ttt success meet: நடிகர் இளவரசு

காலையில் சொன்ன நேரத்திற்குப் படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். தயாரிப்பாளருக்குச் சுமை தராத இப்படிப்பட்ட ஹீரோக்கள் இப்போது தமிழ் சினிமாவில் மிகக் குறைவாகவே உள்ளனர். அதனால்தான் ஜீவாவின் வெற்றியை ஒரு சக நடிகனாக நான் அதிகம் ரசிக்கிறேன். நாங்கள் மாலை 6 மணிக்குச் சென்று காலை 6 மணி வரை ஷூட்டிங் இருக்கும். ஆனால், அங்கிருந்த உதவி இயக்குநர்களும், செட் அசிஸ்டென்ட்களும் நள்ளிரவு 2 மணிக்கே வந்து செம்பருத்தி பூக்கள் நடுவது உள்ளிட்ட வேலைகளைத் தயார் செய்வார்கள்.

அந்தப் பிள்ளைகளின் உழைப்புதான் இன்று வெற்றியாக மாறியிருக்கிறது. அவர்களின் திசை நோக்கி நான் இருகரம் கூப்பி வணங்குகிறேன். 2026-ல் இந்தப் படம் ரிலீஸ் ஆகுமா என்ற பயத்தில் இருந்தோம். திடீரென ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. மதுரையில் காலைக் காட்சியில் கூட்டம் குறைவாக இருந்த செய்தி கேட்டு வருத்தமாக இருந்தது. ஆனால், மாலைக் காட்சி 'ஹவுஸ் ஃபுல்' ஆனபோதுதான் நிம்மதி ஏற்பட்டது. பாரதிராஜா சார் படங்களுக்கு அமைவது போன்ற ஒரு அபூர்வமான வெற்றி இது.

தலைவர் தம்பி தலைமையில்; ஜீவா
தலைவர் தம்பி தலைமையில்: ஜீவா

துபாயில் ஆடியோ வெளியீட்டு விழா என்றதும் வியப்பாக இருந்தது. ஆனால், அங்கு அவர் எங்களுக்கு அளித்த மரியாதை மற்றும் விருந்தோம்பலைப் பார்த்து எனக்குக் கூச்சமாகவே ஆகிவிட்டது. அவ்வளவு அன்பான மனிதர் அவர். அவரும், தீபக்கும் இணைந்து தமிழ் சினிமாவைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வளவு பெரிய அரங்கில் ஒரு வெற்றி விழா நடந்து பல ஆண்டுகள் ஆகிறது. அதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி." எனக் குறிப்பிட்டார்.

காதலர் தினம்: புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீரிலீஸ் படங்கள்! - ஷார்ட் & ஸ்வீட் லுக்

காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான நாளாக மலர்கிறது. ஒரு நாள் முன்னதாக, பிப்ரவரி 13ல் அரை டஜன் நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகிறது. அதற்கு சவால் விடும் வகையில் ரீ ரிலீஸ்... மேலும் பார்க்க

மௌனம் பேசியதே: "என்னோட ஹீரோ சூர்யா சார் கூட நடிச்சது சந்தோஷமா இருந்துச்சு" - நடிகை லைலா

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ... மேலும் பார்க்க

Kadhalar Dhinam: பரபரப்பான மும்பை ஸ்டேஷனில் ஷூட்; 1 கோடிக்கு செட் - 'காதலர் தினம்' பட சுவாரஸ்யங்கள்!

காதலர் தினத்தை முன்னிட்டு 'உயிருள்ளவரை உஷா', 'மௌனம் பேசியதே', 'மின்னலே', 'காதலர் தினம்' ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன. இதில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த 'காதலர் தினம்' 90... மேலும் பார்க்க

Ponnambalam: "ஷூட்டிங் ஸ்பாட்ல குடிப்பேன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க!" - பொன்னம்பலம் பேட்டி

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற படங்களின் மூலம் ஸ்டண்ட்மேனாக சினிமாவுக்குள் வந்த நடிகர் பொன்னம்பலம், பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானார்.கடந்த சில வருடங்க... மேலும் பார்க்க