செய்திகள் :

UP: பணம் கேட்டு தொந்தரவு செய்த Live-in பார்ட்னர்; எரித்துக் கொன்று சாம்பலைக் கரைத்த நபருக்கு வலை

post image

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் வசிக்கும் ராம் சிங் என்பவர் தன்னுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்த பெண்ணைக் கொலை செய்துள்ளார்.

ரயில்வேயில் வேலை செய்து ஓய்வு பெற்ற ராம் சிங் மகன் நிதின், மினி வேன் ஒன்றில் மிகப்பெரிய இரும்பு டிரங்க் பெட்டியை ஏற்றிச்சென்றார். ஆனால் அந்த டிரங்க் பெட்டியைப் பார்த்தபோது வேன் டிரைவருக்கு அதற்குள் இருக்கும் பொருட்கள் மீது சந்தேகம் வந்தது.

நிதின் சொன்ன இடத்தில் டிரங்க் பெட்டியை இறக்கி வைத்துவிட்டு இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீஸார் விரைந்து வந்து அந்த டிரங்க் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் எரிந்து போன மனித எலும்புகள், கரிக்கட்டைகள் போன்றவை இருந்தன.

இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் நிதினின் தந்தை ராம் சிங் என்பவர்தான் அந்தப் பெட்டியை வேறு இடத்திற்கு மாற்றும்படி தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

ராம் சிங்கிற்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட நிலையில் கீதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்.

கொலை
கொலை

இரண்டாவது மனைவியின் மகன்தான் நிதின். போலீஸாரின் விசாரணையில் ராம் சிங் திருமணம் செய்யாமல் பிரீத்தி (35) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.

இதில் பிரீத்தி ஏற்கனவே ராம் சிங்கிடமிருந்து கணிசமான அளவு பணத்தை வாங்கியுள்ளார். அதோடு மேற்கொண்டு பணம் கொடுக்கும்படி கேட்டு சித்ரவதை செய்து வந்துள்ளார்.

இதனால் அவரது கொடுமை தாங்க முடியாமல் பிரீத்தியை ராம் சிங் படுகொலை செய்துள்ளார். இதையடுத்து உடலை மிகப் பெரிய டிரங்க் பெட்டியில் வைத்து அடைத்து அதற்கு தீ வைத்துள்ளார். அஸ்தியை சாக்குமூட்டையில் கட்டி அங்குள்ள ஆற்றில் போட்டுள்ளார்.

பிரீத்தியின் எரியாத எலும்புகள் மற்றும் அவரது பொருட்களை டிரங்க் பெட்டியில் அடைத்து தனது மகனை அழைத்து அதனை இரண்டாவது மனைவி கீதாவின் வீட்டிற்குக் கொண்டு செல்லும்படி தெரிவித்துள்ளார்.

அப்போதுதான் டிரங்க் பெட்டியை வேனில் ஏற்றிய நபர் சந்தேகப்பட்டு போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் நிதினைக் கைது செய்துள்ளனர்.

இது குறித்து ராம் சிங் மனைவி கீதா கூறுகையில், ''எனது கணவர் பெண் ஒருவர் தன்னிடம் பணம் கேட்டு சித்ரவதை செய்வதாக எங்களிடம் கூறி இருக்கிறார்'' என்றார். தற்போது ராம் சிங் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நெல்லை: செல்போனில் பேச்சு… கேட்காத அக்கா.. ஓட ஓட விரட்டிக் கொன்ற தம்பி; நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம், தேவர்குளத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். விவசாயியான இவரது மனைவி சவுந்தரி. இவர்களுக்கு ராதிகா என்ற மகளும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், சவுந்தரியும், கண்ணனும் வேலூரில் உள்ள ஒரு... மேலும் பார்க்க

Share Market: டெலிகிராமில் 'டீச்சர்' விரித்த மோசடி வலை; நெல்லை இளைஞர் ரூ.30 லட்சத்தை இழந்தது எப்படி?

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்குக் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்து நாட்டு எண் கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து... மேலும் பார்க்க

பரமக்குடி: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர்; கழிவறையில் செல்போனில் படம் பிடித்த எஸ்.எஸ்.ஐ கைது!

பரமக்குடியில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இமானுவேல் சேகரனின் முழு உருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்... மேலும் பார்க்க

திருவள்ளூர்: கஞ்சா போதையால் நடந்த இரட்டைக் கொலை - சோகத்தில் முடிந்த பொங்கல் கொண்டாட்டம்

திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (32). இவரின் நண்பர்கள் கேசவமூர்த்தி, சுகுமார். இவர்கள் மூன்று பேரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் ... மேலும் பார்க்க

சென்னை: நண்பரின் பேச்சைக் கேட்டுப் பிரிந்த காதலி; நண்பரின் மனைவிக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்

சென்னை, கோடம்பாக்கம், சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி சர்மிளா (24). கார்த்திக்கும் சூளைமேடு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த அருணும் சிறு வயது முதல் நண்பர்களாக இருந்து வந்தனர்.அர... மேலும் பார்க்க

நெல்லை: பாஜக நிர்வாகியின் மாமியாரைக் கட்டிப்போட்டு நகை கொள்ளை; எச்சரிக்கும் போலீஸ்; என்ன நடந்தது?

நெல்லை மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்தவர் சன்னாசி. இவர், பா.ஜ.க மாவட்ட வர்த்தகப் பிரிவு அணியின் செயலாளராக உள்ளார். இவர், தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.இதனால், ... மேலும் பார்க்க