செய்திகள் :

`அவள் கதை முடிந்தது' - காதலியை கொன்று, தகவலை வருங்கால கணவனிடம் சொல்லிவிட்டு தற்கொலை செய்த வாலிபர்

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் வைசாலி. சாஹில் என்பவர் வைசாலியை காதலித்து வந்தார். ஆனால் சமீபத்தில் வைசாலி வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். இது குறித்த தகவல் சாஹிலுக்கு தெரிய வந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக வைசாலியை சந்திக்க சாஹில் சென்றார். நாசிக் இந்திரா நகர் கார்டனில் வைசாலி இருப்பதை தெரிந்து கொண்டு அங்கு சாஹில் சென்றார். சாஹில் அங்கு வருவதை பார்த்தவுடன் வைசாலி தனது வருங்கால கணவனுக்கு போன் செய்து, `சாஹில் வந்துவிட்டான், சீக்கிரம் வாருங்கள்' என்று கூறினார். உடனே வைசாலியின் வருங்கால கணவன் அலுவலகத்தில் இருந்து சம்பவ இடத்திற்கு வேகமாக வந்தார்.

வைசாலி தனது போன் இணைப்பை துண்டிக்கவில்லை. வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்தது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் நடந்தது. இதனை வைசாலியின் வருங்கால கணவன் தனது போனில் கேட்டுக்கொண்டே வேகமாக வந்து கொண்டிருந்தார்.

30 நிமிடமாக நடந்த இந்த வாக்குவாதத்தில் சாஹில் தன்னிடம் இருந்த கத்தியால் வைசாலியை குத்தினார். சரமாறியாக குத்திக்கொலை செய்த பிறகு வைசாலியிடம் இருந்த போனை பிடுங்கி அவரது வருங்கால கணவனிடம் `வைசாலியை முடித்துவிட்டேன்' என்று சாஹில் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

கத்திக்குத்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி சாஹில் உடல் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியபடி இருந்தது. அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வைசாலி வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்தது குறித்து சாஹிலுக்கு யார் தகவல் கொடுத்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்; காதலி தற்கொலை

மற்றொரு சம்பவம் : ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது சாப்ட்வேர் எஞ்சினியர் கீர்த்தி, தனது காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கேள்விப்பட்டு மனவேதனையால், மும்பையில் தற்கொலை செய்துகொண்டார்.

கீர்த்தி, பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பொந்துரு கிராமத்தைச் சேர்ந்த சாய் சுமந்த் என்பவருடன் எட்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். சாயின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததையடுத்து, அப்பெண் மிகுந்த மனவேதனைக்குள்ளாகி இம்முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிய வருகிறது.

சென்னை: தாயைக் கொடூரமாகக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன்; போலீஸிடம் சிக்கிய பின்னணி என்ன?

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பாபுலால். இவர் சென்னை பெருங்குடி பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி சென்னிதேவி (43). இந்தத் தம்பதியினருக்கு ராகேஷ் (18) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராகேஷ், பி... மேலும் பார்க்க

சென்னை: ரௌடி அஜய் ஓட ஓட நடுரோட்டில் விரட்டி கொலை; தப்பிய கும்பலுக்கு போலீஸ் வலை; என்ன நடந்தது?

சென்னை ஓட்டேரி, எஸ்.வி.எம்.நகரைச் சேர்ந்தவர் பலி ஆடு என்கிற அஜய் (20). இவர் மீது தலைமை செயலக காலணி காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அஜய், நேற்று திருநங்கை ஒருவரை பைக்கில் அழ... மேலும் பார்க்க

பவானி: பிறந்து 14 மணிநேரத்தில் குழந்தையைக் கொன்ற பாட்டி; அதிர்ச்சிப் பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம் பவானியைச்‌ சேர்ந்த 25 வயது பிரியதர்ஷினி என்ற பெண்ணிற்கு தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆரோக்கியமாகக் காணப்பட்ட அந்தக் குழந்தை அடுத்த 14 மணிநேரத்தில்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: வாங்கிய லஞ்சத்தைத் திருப்பி தர முயன்ற எஸ்ஐ பணியிட மாற்றம்; வைரல் ஆடியோவின் பின்னணி என்ன?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பெண்ணின் கணவன், மனைவியைச்சமாதானம... மேலும் பார்க்க

``50 முறை முயன்றுவிட்டேன் முடியவில்லை" - உயிரை மாய்த்துக்கொண்ட 'கோல்ட் மெடலிஸ்ட்' இஞ்சினியர்!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஆனந்த குமார். 2024-ம் ஆண்டு தனியார் கல்லூயிரியில் பி.டெக் முடித்த இவர், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் கரங்களில் பட்டமும் கோல்ட் மெடலும் பெற்றார். கல... மேலும் பார்க்க

மும்பை: பூட்டிய வீட்டில் துர்நாற்றம்; மூட்டையில் காதலனின் சடலம்; தலைமறைவான காதலியின் கொடூர செயல்

சமீபத்தில் புனேயில் ஷியா அகர்வால் என்ற பெண் தனது வருங்கால கணவனை மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொலை செய்தார். தற்போது மும்பையில் மேலும் ஒரு பெண் தனது காதலனைக் கொலை செய்து உடலை வீட்டின் குளியல் அறையில் அட... மேலும் பார்க்க