செய்திகள் :

பொள்ளாச்சி: வாங்கிய லஞ்சத்தைத் திருப்பி தர முயன்ற எஸ்ஐ பணியிட மாற்றம்; வைரல் ஆடியோவின் பின்னணி என்ன?

post image

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பெண்ணின் கணவன், மனைவியைச் சமாதானம் பேசி தனது வீட்டுக்கு அழைத்து வந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த முகேஷ் அந்தப் பெண்ணிற்கும், அவரது கணவனுக்கும் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கணவன் மற்றும் மனைவி இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த விவகாரம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் முகேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் ரூ. 5 ஆயிரம் ரூபாய்  லஞ்சம் பெற்றுக் கொண்டு, எச்சரித்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இதனால் சிறிது நேரத்தில் முகேஷை போனில் தொடர்பு கொண்ட தலைமை காவலர் நாகராஜன், “நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பி உதவி ஆய்வாளர் ஜான்சன் கொடுக்கச் சொன்னார். நீங்க எங்கே இருக்கிறீர்கள்?” எனக் கேட்டுள்ளார்.

அதற்கு முகேஷ், “நான் வெளியில் இருக்கிறேன். காலையில் கோவை சென்று விடுவேன். இப்போது வரமுடியாது” எனக் கூறியுள்ளார்.

பொள்ளாச்சி காவல் நிலையம்
பொள்ளாச்சி காவல் நிலையம்

தொடர்ந்து முகேஷ் தந்த லஞ்சப் பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தலைமை காவலர் வற்புறுத்தவே, “காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். கொடுத்த பணம் கொடுத்ததாகவே இருக்கட்டும். பணம் எனக்கு வேண்டாம் இந்தப் பிரச்னையிலிருந்து எனக்கு தீர்வு கிடைத்தால் போதும். திருமணம் ஆகவில்லை என்று தான் அந்தப் பெண்ணிடம் பழகினேன். இனிமேல் நான் அந்தப் பிரச்னைக்கு வரமாட்டேன்” என முகேஷ் புலம்பியுள்ளார்.

இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் லஞ்சப் புகாரில் சிக்கிய உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் தலைமை காவலர் நாகராஜன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தருமபுரி : 'அவனைக் காண நானும் செல்கிறேன்' - பிளஸ் டூ மாணவி எடுத்த விபரீத முடிவு

பள்ளியில் தன்னுடன் படித்த காதலன் தற்கொலை செய்துகொண்டதால் அதன் துயரம் தாங்காமல் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாலக்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைதருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு; விற்பனையாளர் படுகாயம்! - இருவர் கைது!

மது வாங்க வந்தவர்களுக்கும் விற்பனையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்... மேலும் பார்க்க

பெண் ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரிக்கு டார்ச்சர் - சக ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரி மீது வழக்கு!

பயிற்சி பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக ஐ.பி.எஸ் அதிகாரி உதயகிருஷ்ணா ரெட்டி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்... மேலும் பார்க்க

சென்னை: தாயைக் கொடூரமாகக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன்; போலீஸிடம் சிக்கிய பின்னணி என்ன?

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பாபுலால். இவர் சென்னை பெருங்குடி பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி சென்னிதேவி (43). இந்தத் தம்பதியினருக்கு ராகேஷ் (18) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராகேஷ், பி... மேலும் பார்க்க

சென்னை: ரௌடி அஜய் ஓட ஓட நடுரோட்டில் விரட்டி கொலை; தப்பிய கும்பலுக்கு போலீஸ் வலை; என்ன நடந்தது?

சென்னை ஓட்டேரி, எஸ்.வி.எம்.நகரைச் சேர்ந்தவர் பலி ஆடு என்கிற அஜய் (20). இவர் மீது தலைமை செயலக காலணி காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அஜய், நேற்று திருநங்கை ஒருவரை பைக்கில் அழ... மேலும் பார்க்க

பவானி: பிறந்து 14 மணிநேரத்தில் குழந்தையைக் கொன்ற பாட்டி; அதிர்ச்சிப் பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம் பவானியைச்‌ சேர்ந்த 25 வயது பிரியதர்ஷினி என்ற பெண்ணிற்கு தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆரோக்கியமாகக் காணப்பட்ட அந்தக் குழந்தை அடுத்த 14 மணிநேரத்தில்... மேலும் பார்க்க