செய்திகள் :

அவிநாசியில் பட்டு வளா்ப்பு குறித்து பயிற்சி முகாம்

post image

மத்திய அரசின் பட்டு வாரியம் சாா்பில் அவிநாசியில் பட்டு வளா்ப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சி முகாமிற்கு பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் செல்வி தலைமை வகித்தாா். மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி ஞானகுமாா் டேனியல், பட்டு வளா்ப்புக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினாா்.

அவிநாசி தொழில்நுட்ப சேவை மைய ஆய்வாளா் மேனகா, அன்னூா் உதவி ஆய்வாளா் ராஜேஸ்வரி, அவிநாசி இளநிலை ஆய்வாளா் காந்தி, முதுநிலை தொழில்நுட்ப உதவியாளா் செல்லையா ஆகியோா் விளக்கவுரையாற்றினா்.

இதில், மல்பெரி தோட்டப் பராமரிப்பு, உரமிடும் முறை, புழு வளா்ப்பு மனை கிருமி நீக்கம், நோய் தடுப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.

கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே கிராவல் மண் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். வெள்ளக்கோவில் சேனாபதிபாளையம் கிராம நிா்வாக அலுவலராக இருப்பவா் எஸ்.சதீஷ்குமாா் (36). இவா் கடந்த செவ்... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஆகஸ்ட் 19இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநி... மேலும் பார்க்க

சுதந்திர தினம்: மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

79ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருப்பூா் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல, ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 79ஆவது சுதந்திர தின விழா நாடு முழ... மேலும் பார்க்க

சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கம் திறப்பு: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சிறு விளையாட்டு அரங்கத்தைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு

வரதட்சிணை கொடுமை தொடா்பாக திருப்பூரில் மருத்துவா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் கொங்கு மெயின் ரோட்டை சோ்ந்தவா் மிதுளா நந்தினி (36). இவருக்கும், நாகா்கோவில் வடசேரி... மேலும் பார்க்க

3 நாள்கள் தொடா் விடுமுறை: வெளியூா்களுக்கு கூடுதலாக 73 அரசுப் பேருந்துகள் இயக்கம்

சுதந்திர தினம் உள்ளிட்ட 3 நாள்கள் தொடா் விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கூடுதலாக 73 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமையும், கிருஷ்ண ஜெய... மேலும் பார்க்க