BB Tamil 9: `இந்த டாஸ்க்கில கொடுக்கப்படும் ஸ்டார் எனக்கு வேணாம்' - திவ்யா சபரி ம...
ஓசூர்: தமிழ்நாடு அரசு நடத்தும் `விடியல் விடுதி' குளியல் அறைகளில் ரகசிய கேமரா - அன்புமணி கண்டனம்
தமிழ்நாடு அரசும், டாடா நிறுவனமும் இணைந்து நடத்தும் விடியல் விடுதியின் குளியல் அறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது குறித்தும், அந்த விடுதியில் தங்கியிருந்த பெண்கள் நடத்திய போராட்டம் குறித்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
"ஓசூர் விடுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள வன்னியபுரத்தில் செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் விடியல் விடுதியின் எட்டாம் பிளாக்கில் உள்ள குளியல் அறைகளில் ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதில் பதிவான காட்சிகள் வெளியாள்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி அங்கு பணியாற்றும் பெண்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விடுதியில் தங்கியுள்ள பெண்களின் தனியுரிமையை பாதுகாக்க அரசு தவறியது கண்டிக்கத்தக்கது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் தங்குவதற்காக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து 20 ஆயிரம் பேர் தங்கும் வகையில் விடியல் விடுதியை கட்டிக் கொடுத்துள்ளன.
அரசின் கட்டுப்பாட்டில் தான் இந்த விடுதி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அதனால் இந்த விடுதி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு தங்கியுள்ளனர்.
ஆனால், அவர்களின் தனியுரிமை, கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடைபெற்றிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பெண் தொழிலாளர் விடுதியின் குளியலறையில் காமிராக்களை பொருத்தியதால் ஒரு பெண் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறார்களா? என்பதைக் கண்டறிந்து அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
பெண் தொழிலாளர்கள் தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தால், அவற்றை முடக்க வேண்டும்.
விடியல் விடுதியில் தங்கியுள்ள பெண் தொழிலாளர்களின் தனியுரிமையை உறுதி செய்வதுடன், அவர்கள் கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் எந்த தீங்கும் ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓசூர் விடுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 5, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள வன்னியபுரத்தில் செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கியிருக்கும்…















