செய்திகள் :

``சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன" - பாஜக எம்.பி சர்ச்சைக் கருத்து

post image

தெலங்கானாவில் திங்களன்று அரச பேருந்தும், ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற லாரியும் செவெல்லா மண்டலத்தில் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள், தாயுடன் 10 மாத குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், செவெல்லா மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க எம்.பி கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி, சாலை விபத்து குறித்துப் பேசியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலங்கானா கோர விபத்து
தெலங்கானா கோர விபத்து

திங்களன்று நிகழ்ந்த விபத்துக்கு கடந்த பி.ஆர்.எஸ் ஆட்சியைக் குற்றம்சாட்டி நேற்று பேசிய கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி, ``இப்போதெல்லாம் சாலைகள் மோசமாக இருந்தால், வாகனங்கள் மெதுவாகச் செல்வதால், விபத்துக்கள் குறைவாக நிகழ்கின்றன.

அதேசமயம் சாலைகள் நன்றாக இருந்தால் பெரிய விபத்துக்கள் ஏற்படுகின்றன.

பிஜப்பூர் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் 2016-ல் அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதைய பி.ஆர்.எஸ் அரசு ரியல் எஸ்டேட் நலன்களில் கவனம் செலுத்தியதால் சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலை முடிக்க முடியாமல் தாமதமானது.

இந்தப் பேருந்து பி.ஆர்.எஸ் அரசின் அலட்சியத்தின் நேரடி விளைவு.

முந்தைய ஆட்சி பொது பாதுகாப்பை விட ரியல் எஸ்டேட் ஆதாயங்களுக்கு முன்னுரிமை அளித்தது.

சாலைப் பாதுகாப்பு விஷயத்தில் அந்த அரசுக்குப் பலமுறை கடிதங்கள் எழுதினேன். இப்போது பல வளைவான சாலைகளுக்குப் பதில் நேரான நெடுஞ்சாலையை அமைக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்" என்று கூறினார்.

கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டியின் இத்தகையப் பேச்சுக்கு பி.ஆர்.எஸ் நிர்வாகி கார்த்திக் ரெட்டி இன்று கடுமையான எதிர்வினையாற்றியிருக்கிறார்.

கார்த்திக் ரெட்டி - BRS
கார்த்திக் ரெட்டி - BRS

தெலங்கானா பவனில் பேசிய கார்த்திக் ரெட்டி, ``தேசிய நெடுஞ்சாலை அமைப்புகளை மத்திய அரசின் பொறியாளர்கள்தான் முடிவு செய்கிறார்கள் என்பது தெரியாமல் நீங்கள் எப்படி எம்.பி. ஆனீர்கள்?

அந்தத் திட்டத்தை நிறுத்தியதற்கு உங்கள் சொந்த அரசாங்கத்தையே (மத்திய பா.ஜ.க அரசு) குறை கூறுகிறீர்களா?

நீங்கள் சொன்ன லாஜிக் படி பார்த்தால், உணவு இல்லை என்றால் யாரும் பசியால் வாட மாட்டார்கள். வீடு இல்லை என்றால் புயல் தாக்காது. மின்சாரம் இல்லையென்றால் ஷாக் அடிக்காது" என்று விமர்சித்தார்.

SIR: ``பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்'' - திமுக என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு

SIR பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து திமுக கழக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (05.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் வழ... மேலும் பார்க்க

சேலம்: அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்; எம்எல்ஏ அருள் உட்பட 40 பேர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வடுகத்தாம்பட்டி பகுதியில் பாமக நிர்வாகி ஒருவருடைய தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்றைய தினம் சென்ற... மேலும் பார்க்க

`விஜய்யின் அரசியல் மெசேஜ்; திமுகவின் முக்கியப் புள்ளிகளை அட்டாக் செய்த ஆதவ்' - பொதுக்குழு ஹைலைட்ஸ்

தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேசியிருக்கிறார். இந்த சிறப்புப் பொதுக்குழுவின் வழி விஜய் சில அரசியல்... மேலும் பார்க்க

"ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் அழகி எப்படி வந்தார்?" - ராகுல் காந்தி கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடப்பதாகக் குற்றஞ்சாட்டி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். இதில் ஹரியானாவில் மொத்தம் 25 லட்சம் வாக்குத் த... மேலும் பார்க்க

Aadhav Arjuna full speech | `இன்னும் ஆறே மாசம்தான்' | TVK பொதுக்குழு கூட்டம் | Vijay

மக்களை சாவடிக்கும் அரசியலை கலைஞரிடம் இருந்த சீனியர் அரசியல் தலைவர்கள் செய்ய மாட்டார்கள். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த எங்கள் தலைவர் 9 மணியில் இருந்து 6 மணி வரை சாப்பிடாமல் கண்ணீரை மட்ட... மேலும் பார்க்க