செய்திகள் :

சேலம்: அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்; எம்எல்ஏ அருள் உட்பட 40 பேர் மீது வழக்கு

post image

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வடுகத்தாம்பட்டி பகுதியில் பாமக நிர்வாகி ஒருவருடைய தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்றைய தினம் சென்றிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக அன்புமணி ஆதரவாளர்களுக்கும், பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

மேலும் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளருடன் சென்றிருந்த ஐந்து கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த நிலையில், ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கொடுத்த புகாரின் பேரில் 20 பேர் மீது வழக்குப்பதிந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, அன்புமணி ஆதரவாளர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் காவல்துறை எடுக்காததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பா.ம.க எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம் மற்றும் மயிலம் சிவக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ம.க-வினர் மோதல்
பா.ம.க-வினர் மோதல்

பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளர்களுடன் காரில் வேகமாக வந்தபோது, கார் மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் கார் நிறுத்துவது தொடர்பாகப் பேசியபோது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் உட்பட அவரது ஆதரவாளர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்களுக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அன்புமணி ஆதரவாளர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுவதாக அன்புமணி ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் உட்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கொலை முயற்சி உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

``சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன" - பாஜக எம்.பி சர்ச்சைக் கருத்து

தெலங்கானாவில் திங்களன்று அரச பேருந்தும், ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற லாரியும் செவெல்லா மண்டலத்தில் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில், பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள், தாயுடன்... மேலும் பார்க்க

SIR: ``பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்'' - திமுக என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு

SIR பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து திமுக கழக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (05.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் வழ... மேலும் பார்க்க

`விஜய்யின் அரசியல் மெசேஜ்; திமுகவின் முக்கியப் புள்ளிகளை அட்டாக் செய்த ஆதவ்' - பொதுக்குழு ஹைலைட்ஸ்

தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேசியிருக்கிறார். இந்த சிறப்புப் பொதுக்குழுவின் வழி விஜய் சில அரசியல்... மேலும் பார்க்க

"ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் அழகி எப்படி வந்தார்?" - ராகுல் காந்தி கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடப்பதாகக் குற்றஞ்சாட்டி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். இதில் ஹரியானாவில் மொத்தம் 25 லட்சம் வாக்குத் த... மேலும் பார்க்க

Aadhav Arjuna full speech | `இன்னும் ஆறே மாசம்தான்' | TVK பொதுக்குழு கூட்டம் | Vijay

மக்களை சாவடிக்கும் அரசியலை கலைஞரிடம் இருந்த சீனியர் அரசியல் தலைவர்கள் செய்ய மாட்டார்கள். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த எங்கள் தலைவர் 9 மணியில் இருந்து 6 மணி வரை சாப்பிடாமல் கண்ணீரை மட்ட... மேலும் பார்க்க